Wednesday, November 16, 2011

மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்


புதுச்சேரி நவ-14
மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஒய்எப்ஜ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே பகுதிகுழு வின் செயலாளர் கே.பி.நௌஷாத்,பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
மாஹே மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு முதலில் ரூ.25கோடி ஒதுக்கப்பட்டது பின்னர் கட்டுமான பணிக்காக கூடுதலாக ரூ.75கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதேப்போல் மாஹே உள்விளையாட்டு அரங்கம் ரூ.19கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டு இதுநாள்வரை பூட்டப்பட்டுள்ளது.அதேப்போல் கேரள விருந்தினர் மாளிகைக்கு ஆற்று மேல் மேம்பாளம் கட்டியதிலும்,மாஹே ஆற்றையொட்டி உள்ள சுற்றுலாதுறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை தனியார் மதுபான கடைக்கு வாடகை விட்டதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. கடந்த மூன்று முறை மாஹே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு காங்கிர° அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொருப்பு வகித்த வல்சராஜ் ,மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல் செய்து அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.எனவே முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது புதுச்சேரி முதல்வர் சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாஹேவில் உள்ள பாப்°கே நிறுவனம் கேரளாவில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் மூலம் விவசாய பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வதை போல் புதுச்சேரியிலும் அத்தகைய நிலையை அரசு கடைபிடிக்க வேண்டும்.மாஹே கல்லுhரிகளில் கேரளா மாணவர்கள் சிறமமின்றி படிக்க முடிந்தது.அதேப்போல் மாஹே மாணவர்களும் கேரளாவில் படித்தார்கள்.தற்போது மாஹேவில் கேரளா மாணவர்கள் படிக்க தடைவிதித்துள்ளதால் உயர் படிப்புக்கு கேரளா சென்று மாஹே மாணவர்கள் படிக்க முடியவில்லை எனவே பழைய முறையை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.மாஹே ஆயுர்வேதா மருத்துவகல்லுhரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி போது மான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
பேட்டியின் போது மாஹே பகுதிகுழு நிர்வாகிகள் ஸ்ரீகாந்த்,வினெய்குமார்,பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ்,சரவணன்,SFI பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Wednesday, November 9, 2011

நீதி விசாரணை நடத்த வேண்டும்


புதுச்சேரி நவ-1
பள்ளி பேருந்து கவிழ்ந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த பாகூர் கடுகனூரில் பள்ளி மாணவர்கள் சென்ற ஒரு ரூhபய் கட்டண பேருந்து கவிழ்ந்ததில் மணப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஹேமலதா (12) சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பிள்ளனர்.பாகூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பேரூந்தில் ஏற்றிசெல்வதற்கு ஏழு பேருந்துகள் அவ்வழிதடங்களில் இயக்க வேண்டும்.ஆனால் சம்பவத்தன்று நான்கு பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட்டதால் கரையாம்பத்துhர்,கடுகனுhர்,குருவிநத்தத்தை சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்ததின் விளைவாக பேருந்து கடுகனூரில் வயல்வேளியில் கவிழ்ந்தது.
மருத்துவனையில் ஆருதல்
பேருந்து கவிழ்ந்ததில் காயம் அடைந்த மாணவர்கள் கடலுhர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நடந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரனை நடத்த வேண்டும்.இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை =எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லததை கண்டித்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர செயலாளர் என்.பிரபுராஜ் ஆகியோர் தலைமையில் திரளானோர் சென்று மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.
2 லட்சம் இழப்பீடு
இறந்த மாணவி ஹேமலதா குடும்பத்திற்கு முதல்வர் என்.ரங்கசாமி ரூ.2லட்சம் இழப்பீட்டு தொகை அரசு சார்பில் வழங்கபடும் என்று அறிவித்தார்.அதேப்போல் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயரமும் வழங்கபடும் என்று ம் சாதாரணம் காயங்கள் ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.5ஆயிரமும் வழங்க படும்.விபத்து குறித்த நீதி விசாரணை நடத்த படும்.அதேப்போல் வருங்களத்தில் விபத்து நடக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Sunday, October 9, 2011

கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி



புதுச்சேரி அக்-8
கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி புதுச்சேரியில் வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் தாகூர் பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி 10ஆம் வகுப்பு துணைத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய குற்றத்தில் சிக்கிய புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.சுனாமி குடியிருப்பு கட்டியதில் தோடர்புள்ள முன்னால் மாவட்ட ஆட்சியர், ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மகன்களுக்கு மருத்துவக்கல்லுhரி துவங்க அனுமதி அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்திவீதி-நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,எ°எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துனைதலைவர் ரஞ்சித்,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துனைத்தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர்,மாணவர் சங்கங்களின் நிர்வாகிள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி கல்விதுறை அமைச்சர் கல்யாணசுந்தரம் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.திண்டிவனத்தை அடுத்துள்ள தனியார் பள்ளியான தாகூர் மெட்ரிக்குளேஷன் பள்ளியில் நடந்த துணைத்தேர்வில் போலியான முகவரியை கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்ய விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி சனிக்கிழமை (அக்-8)திண்டிவனம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.எனவே முறைகேடுகளில் ஈடுபட்ட கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி உடணடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்=என மார்க்சி°ட் கட்சி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Friday, September 30, 2011

ஆளுநர் இக்பால்சிங்கை உடனடியாக பதவியிலிருந்து திரும்ப பெற வேண்டும்


புதுச்சேரி ஆக-29
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்கை உடனடியாக பதவியிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்று வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
வாலிபர் சங்கம் சார்பில் ஊழலுக்கு எதிரான பிரச்சார தெருமுனைக்கூட்டம் கரிக்கலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பு சாலையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் அரிதா° தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசசெயலாளர் தமிழ்ச்செல்வன் பேசுகையில்,
புதுச்சேரி மக்களை பாதுகாக்க வேண்டிய துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன்கள் இடம்பெற்ற அறக்கட்டளைக்கு மருத்துவகல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றால் அரசியல் சாசனத்தை மிறியசெயலில் ஈடுபட்ட அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்.மாதம் ஒன்றுக்கு மக்கள் வரிபணத்தில் 1.5லட்சத்திற்கு காய்கறி செலவு செய்கிற =ஆளநர் இக்பால் திரும்ப பெற்று அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் பொருளாளர் பிரபுராஜ்,வில்லியனுhர் இடைகமிட்டி செயலாளர் சண்முகம்,மாணவர் சங்க பிரதேசசெயலாளர் ஆனந்து,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர் சங்க நிர்வாகிகள் பச்சையப்பா,பத்மநாபன்,விஜயமூர்த்தி,ராமமூர்த்தி,ராகவன்,ஆனந்த்,அரளரசன்,உமாபதி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, August 23, 2011

இந்தியாவை ஒலியமயமாக்குவோம்


உழலில் இருண்ட இந்தியாவை ஒலியமயமாக்குவோம் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி நேருவீதியில் மெழுகுவத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்ஜசி ஊழியர் சங்க தலைவர்களுள் ஒருவருமான ராம்ஜி கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார்.உடன் டிஒய்எப்ஜ பிரதேசத்தலைவர் சந்துரு,நகரத்தலைவர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.

Thursday, August 18, 2011

புதிய பெயர்பலகை திறப்பு விழா - சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா


புதுச்சேரி ஆக 16
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா பாக்குமுடையான்பேட்டையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாக்குமுடையான் பேட் வினோபா நகரில் நடந்த சேகுவேரா இளைஞர் நர்பணி மன்றத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழாவிற்து வாலிபர்சங்க கிளை தலைவர் அந்துவான் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேசதலைவர் சந்துரு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர்பலகையை பிரதேச பொருளாளர் பிரபுராஜ் திறந்து வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக பிரதேச செயலாளர் தமிச்செல்வன் வாலிபர் சங்த்தின் லட்சியங்களைபற்றி பேசினார்.மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துனைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இவ்விழாவில் கிளை செயலாளர் லாமார்க்,பொருளாளர் கார்த்திக்,பாலமுருகன்,மணிகண்டன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். சேகுவேரா பெயரில் துவங்கப்பட்டுள்ள இளைஞர் நற்பணி மன்றம் டிஒய்எப்ஜ யுடன் இனைக்கப்பட்டுள்ளது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்பேட்டையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு டிஒய்எப்ஜ நகர தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கினார்.சிஜடியு உடல் உழைப்போர் சங்கத்தின் பொருளாளர் குமார்,வாலிபர் சங்க நிர்வாகி வினோத்,சங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.