Sunday, January 30, 2011

மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


புதுச்சேரி ஜன 30
மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லா°பேட்டையில் நடைப்பெற்றது. காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு, தீண்டாமைக்கு எதிராக வாலிபர்கள், சிறுவர்கள் உறுதி மொழி ஏற்றனர். மேலும் அசோக் நகர் பாரதியார் சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிஒய்எப்ஐ கிளைத் தலைவர் வைத்தியநாதன் தலைமைத் தாங்கினார். வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, துணை செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கிளை நிர்வாகிகள் பாலாஜி, ராமகோபால், ரோஹன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Thursday, January 27, 2011

குடியரசு தின விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா


புதுச்சேரி ஜன 27
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 22வது குடியரசு தின விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் நடைப்பெற்றது.
சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வாலிபர்களுக்கான வழுக்குமரம் ஏறுதல், பெண்களுக்கான இசைநாற்காலி, கோலம்வரைதல் மற்றும் உறியடித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு வாலிபர் சங்க புதுவை பிரதேச உழவர்கரை கமிட்டி கன்வினர் பா°கர் தலைதைத் தாங்கினார். சிபிஎம் உழவர்கரை கமிட்டி செயலாளர் லெனின் துரை, டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், துணை செயலாளர் சரவணன், மாதர்சங்க நிர்வாகி சத்யா, எ°எப்ஐ செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். வாலிபர் சங்க நிர்வாகிகள் அக்கிம், முரளி, சுகன்யா, அக்பர், சபி உள்ளிட்ட திரளான வாலிபர்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக சிகரம் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைப்பெற்றது.
படம் உள்ளது.

Wednesday, January 19, 2011

பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா



புதுச்சேரி ஜன 17
இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா லா°பேட்டை அசோக் நகரில் நடைப்பெற்றது.
சிறுவருக்கான ஓட்டப்பந்தயம், ஓவியம் வரைதல், உரி அடிப்பு, பெண்களுக்கான கோலப்போட்டி, இசைநாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். மாணவர் சங்க தமிழ் மாநில இணை செயலாளர் °டாலின், வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், கமிட்டி செயலாளர் கதிரவன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் லெனின் துரை, நகர உயர்நீதி மன்ற வழக்கறிஞர் °டாலின் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.
இவ்விழாவையொட்டி புதுவை சிகரம் கலைக்குழுவினரின் தப்பாட்டம், சிறுவர்களின் இசை நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்துவதைக் கண்டித்து தண்டோரா போட்டு அறிவிக்கும் போராட்டம்

புதுச்சேரி ஜன 17
காங்கிர° - திமுக அரசின் பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்துவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தண்டோரா போட்டு அறிவிக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.54 உயர்த்தியதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் நடந்த இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க நகர கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜா, கோபால் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு அடங்கிய பதாகையுடன் மிஷன் வீதி. காந்தி வீதி, அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக சென்று பெட்ரோல் விலை உயர்வை தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தனர்.


பாகூர்
பாகூர் கடைவீதியில் இருசக்கர மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்க கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், கொம்யூன் செயலாளர் அரிதா°, பொருளாளர் வீரப்பன், வெங்கடேசன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நூதனப் போராட்டம் கடை வீதி மக்களை ஆச்சர்யப் படுத்தியது.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்ததற்கு அரசின் பரிசு: வாலிபர்கள் மீது போலீஸ் தடியடி: 8 பேர் பலத்த காயம்; 60 பேர் கைது


சென்னை, ஜன. 18 -

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய வாலி பர் சங்கத்தினர் மீது போலீசாரும், அடையாளம் தெரியாத நபர்களும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இதில் எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

பெட்ரோல் விலைகளை பெட் ரோலிய நிறுவனங்களே தீர்மா னித்துக் கொள்ள மத்திய அரசு அனு மதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி வழங்கப்பட்ட கடந்த ஆறு மாதங்க ளில் ஏழு முறை பெட் ரோல் விலை உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த் தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச. லெனின், பொருளாளர் தாமு, வடசென்னை மாவட்டத் தலைவர் இல. சண்முக சுந்தரம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் செவ்வாயன்று (ஜன.18) நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனை முற்றுகையிட ஊர் வலமாக வந்தனர்.

இந்தியன் ஆயில் பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் காவல் துறையினர் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இத னால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் பிர தமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

தடியடி

இதனையடுத்து போலீசார் காட்டு மிராண்டித்தனமாக தடியடி நடத்தி னர். கீழே விழுந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கிய தோடு, பூட்ஸ் கால்களால் மிதித்தனர். லத்தியை கொண்டு வயிற்றில் குத்தி னர். இந்த தாக்குதல்களில் 8 பேர் காயம டைந்தனர்.

இதனிடையே, ஒரு பகுதியினர் இந்தியன் ஆயில் பவனுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசாரும், அடையா ளம் தெரியாத நபர்களும், ஆயில் பவன் ஊழியர்களும் சுற்றி வளைத்து தாக்கினர். இத் தாக்குதலில் முரளி (மயிலை), சுரேஷ் (சோழிங் கநல்லூர்), குமரன் (சைதை), மணி (ஆயிரம் விளக்கு), ரமேஷ் (எழும்பூர்), உதயா (அண்ணாநகர்), சுரேஷ் (வேளச்சேரி), ஜெயந்த் (தாம்பரம்) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டி ருந்தவர்களை போலீசார் கீழே தள்ளி தரதரவென்று இழுத்து வேனில் தூக்கி எறிந்தனர். பின்னர் வேனுக்குள் ஏறி லத்தியால் தாக்கி பூட்ஸ் காலால் உதைத்தனர். இதனால் அந்த இடம் போர்க் கோலமாக காட்சி அளித் தது.

பலத்த காயமடைந்த வர்கள் உட் பட கைது செய் யப்பட்ட அனை வரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏபிவிபி திருமண மண்ட பத்தில் வைத்திருந்தனர்.

தலைவர்கள் ஆறுதல்

இத்தகவலை அறிந்து அங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், பெரம் பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க. பீம்ராவ், செயற்குழு உறுப்பினர்கள் டி.நந்த கோபால், டி.கே.ராஜன், ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி போலீசாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பலத்த காய மடைந்த 8பேரை போலீசார் மருத் துவமனைக்கு அழைத்துச் செல் வதாக கூறினர். வேனில் ஏற்றி சென்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 3 மணி நேரம் வைத்திருந்தனர். காய மடைந்தவர்களில் சிலர் மயக்கமடைந் தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச் சைக்காக கொண்டு சென்றனர்.

Tuesday, January 18, 2011

அங்க பிரதட்சனப் போராட்டம்


புதுச்சேரி ஜன 18
குண்டும் குழியுமான புதுச்சேரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அங்க பிரதட்சனப் போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி கடலூர் சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடந்து வருவதை தடுக்க உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதனப்போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியகோவில்-கடலூர் சாலையில் நடந்த அங்கப்பிரதட்சன போராட்டத்திற்கு வாலிபர் சங்க பாகூர் கொம்யூன் கமிட்டி பொருளாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். டிஒய்எப்ஐ பிரதேசத் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை செயலாளர் சரவணன், கொம்யூன் செயலாளர் அரிதா° மற்றும் அருள், மணிபாலன், வெங்கடேசன், லெனின் பாரதி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக குண்டு குழியுமான சாலையில் வாலிபர்கள் படுத்து உருண்டு அளூக பிரதட்சணம் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
படம் உள்ளது.

Thursday, January 13, 2011

DYFI activists conduct blood donation champ at Oulgaret


Puducherry | Sat, 21 March, 2009
Volunteers of the Democratic Youth Federation of India (DYFI) today conducted blood donation champ at Oulgaret

DYFI volunteers hold fast for Minister's removal

Puducherry | Wednesday, Mar 26 2008 IST

The Democratic Youth Federation of India (DYFI) volunteers led by All India President Sriramakrishnan began a 24-hour fast at the Mahe Municipal Grounds this evening.

According to reports reaching the police headquarters here from Mahe, Mr Sriramakrishnan said the DYFI had planned a march to the Puducherry Legislative Assembly shortly to press for the removal of Health Minister E Valsaraj.

Today's fast was to press for the resignation or removal of Mr Valsaraj against whom the Vigilance and Anti-corruption police had registered cases.

Tuesday, January 11, 2011

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில பயிற்ச்சி முகாம் - புதுச்சேரி நவீனாகார்டன் திருமணமன்டபத்தில் நடைபெற்றது




புதுச்சேரி ஜன 8
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில பயிற்ச்சி முகாம் ஜனவரி 7 ல் துவங்கி,8,9 ஆகிய மூன்று நாட்கள் புதுச்சேரி நவீனாகார்டன் திருமணமன்டபத்தில் நடைபெற்று வருகிறது.
சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் முத்து கண்ணன், மாநில செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாளர் பாலா,உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து 120 பிரதிநிதிகள் இம் முகாமில் கலந்து கொண்டு உள்ளனர்.
படம் குறிப்பு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில பயிற்ச்சி முகாமில் டிஒய்எப்ஜ முன்னால் மாநில தலைவர் பாக்கியம் கலந்து கொண்டு உலக இளைஞர் வரலாறு என்ற தலைப்பில் பேசினார்.உடன் மாநில தலைவர் முத்து கண்ணன், மாநில இனைச்செயலாளர் °டாலின் ஆகியோர் உள்ளனர்.
முகாமில் கலந்து கொண்டோர் பிரதிநிதிகள் ஒரு பகுதியினர்.

SAMPLE ASSEMBLY IN FRONT PONICHERRY LEGISLATIVE ASSEMBLY

DYFI activists conduct Mock Assembly to press demands
Puducherry | Thursday, Mar 25 2010 IST
Volunteers of the Democratic Youth Federation of India (DYFI) today conducted a mock assemby in front of the Head Post Office here to press their demands.

The volunteers divided themselves as ruling and opposition sides and in to different postions, including Speaker and took up various issues for debates much to the curiosity of onlookers.

The agitation was to draw the attention of the government on the unemployment problem and press for creation of opportunities.




http://news.webindia123.com/news/Articles/India/20100325/1471926.html

Friday, January 7, 2011

Students Federation of India



Education is a major tool of social transformation and this is especially relevant
in a country like India, where regressive forces still prevail. Proper education
will be a barrier against such forces and will help to build a new society based on
rationality and justice. Any student organization must evaluate its raison d'être
against this background. The Students Federation of India, abbreviated SFI,
is an organization of students which is ever aware of its social role. It identifies
with all the progressive forces in the society and is totally committed to the
ideals of independence, democracy and socialism. It includes students from all aca-
demic institutions of the country - from schools and colleges, from professional
institutions and research academies.
On the global front, SFI is against the colonization of any country by any other country and pledges allegiance to all international peace movements.