Tuesday, December 20, 2011

பாலியல் குற்றத்திலிருந்து பெண்களை பாதுகாக்க பாலியல் துன்புறுத்தல் சட்டம் கொண்டு வருவேண்டும்


புதுச்சேரி,டிச-18
பாலியல் குற்றத்திலிருந்து பெண்களை பாதுகாக்க பாலியல் துன்புறுத்தல் சட்டம் கொண்டு வருவேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்திய குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் சம்பந்தபட்ட விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மருத்தவ பரிசோதனைக்காக காவல்துறை கட்டுபாட்டில் இருந்த இளம்பெண் காணாமல் போனதாக காவல்துறை கூறுவதை கண்டித்து மாதர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேருவீதி காந்தி வீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் பங்கேற்று பேசுகையில்,
நாடுமுழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இதில் பெண்களுக்கெதிரான குற்றங்கங்களே அதிகமாக நடைபெறுகிறது.குறிப்பாக ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் பெண்கள் பாலியல்ரீதியான குற்றத்தில் பாதிக்கபடுகின்றனர்.ஒரு நாளைக்கு 56பெண்களும்,ஒரு மணிநேரத்திற்கு 3 பெண்கள் என பாதிக்கபடுகின்றனர்.பாதிக்கபடும் பெண்கள் மீதே சிலஅவதுhறுகளை பரப்பி குற்றத்தை நியாயப்டுத்தும் சம்பவம் ராஜாஸ்தான் மாநிலத்தில் அன்மையில் நடந்தேறியுள்ளது.எனவே தண்டனை குறைவாக இருப்பதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே பாலியல் துண்புருத்தல் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றார்.
இப்போராட்டத்தில் மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா,நிர்வாகிகள் சுமதி,இளவரசி, வாலிபர்சங்க சங்க தலைவர்கள் சந்துரு,பிரபுராஜ்,சரவணன்,பார்த்தசாரதி,பா°கர் உள்ளிட்ட திரளான வாலிபர்கள்,மாதர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tuesday, December 13, 2011

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் புதிய கிளை திறப்பு



புதுச்சேரி,டிச-12
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா.
புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.இப்பெயர்பலகை திறப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் கிளை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார்.இவ்விழாவில் டிஒய்எப்ஜ பிரதேச இணைசெயலாளர் எஸ்.சரவணன் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர் பலகையை பிரதேச செயலாளர் டி.தமிழ்செல்வன் திறந்து வைத்து பேசினார்.பிரதேச தலைவர் கே.சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,நகர தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,பாகூர் கொம்யூன் செயலாளர் அரிதாஸ்,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கிளை செயலாளர் பிரவீன்வேலியப்பன்,மோகன்ராஜ்,நகுலன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மற்றும் சண்முகாநகர் மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,டிச-12
மாணவர் சிறப்புபேருந்து இயக்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் புதுவை முழுவதும் இயக்கப்பட்டுவருகிறது. கரிகலாம்பாக்கம் பகுதியில் இயக்கப்பட்ட பேருந்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் இயக்கபடாததால் கிராமப்புற மாணவர்கள் தணியார் பேரூந்தில் அதிய கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே சிறப்பு பேருந்து இயக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்ளின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடந்த இப்போராட்டத்திதல் எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து ,வாலிபர் சங்க நிர்வாகிகள் அரிதா°,சண்முகம்,பத்மநாபன்,விவிசாய சங்க நிர்வாகி ரத்தினவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேச்சுவர்த்தை
போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகியிடம் அமைச்சர் ராஜவேலு செல்பேசியில் தொடர்பு கொண்டு பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Friday, December 9, 2011

வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு


* வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு!
* AICTE,MCI,UGC உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை களைத்துவிட்டு நம் நாட்டின் பேருமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தும் தேசிய கல்வி ஆணைய மசோதாவை கைவிட கோரி!

* மாநில அரசுகளின் கல்வி குறித்த அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசின் அதிகார குவியலை கண்டித்து!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போராடியதோ,அதே போல் மாணவர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள உயர்கல்வியை சீரழிக்கும் ஐந்து மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் , புதுச்சேரி பிரதேச குழுவும் பல்கலைகழக கிளையும் கேட்டுக்கொள்கிறது.
தலைமை :சாஹீத்ரூமி {கன்வீனர் SFI,பல்கலைகழக கிளை}
முன்னிலை :மானபெந்துசர்கார்,ஜாஸ்மின்,அரு ண்குமார் {SFI,பல்கலைகழக கிளை}
கண்டனஉரை :பகத்சிங் {SFI,பல்கலைகழக கிளை , ஆனந்த் {SFI,புதுவை பிரதேச செயலாளர்} சாத்வீக்பாநர்ஜி {லயோலா கல்லூரி ஆராய்ச்சி மாணவர் SFI,தலைவர்களில் ஒருவர் }பிரபுராஜ் {DYFI புதுச்சேரி பொருளாளர் }
வாழுத்துரை:DYFI பிரதேச துணைதலைவர் சரவணன்,உழவர்கரை நகரசெயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க பிரதேச துணைதலைவர் ரஞ்சித்

Friday, December 2, 2011

பெண்ணை பாலியல் தொழிலுக்கு பயண்படுத்திய கஸ்ட் ஹவுசை முற்றுகை


புதுச்சேரி நவ-27
புதுச்சேரியில் பெண்ணை பாலியல் தொழிலுக்கு பயண்படுத்திய கஸ்ட் ஹவுசை முற்றுகையிட்ட பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த கனேசன் மகள் அமுதா (வயது-19 பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற இளம் பெண்ணை புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி க°ட்ஹவுஸில் வலுகட்டயமாக அடைத்து வைத்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற போது அப்பெண் ஜன்னல் வழியாக கூச்சலிட்டதால் அருகில் உள்ள பெரியகடை காவல்நிலையத்தில் புகார் கூறியதின் பேரில் போலீஸார் சம்பவஇடத்திற்கு நேரில் வந்து விசாரித்தனர்.அப்போது கஸ்ட் ஹவுஸ் மேலாளர் மதன் உட்பட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4பேர்களை போலீஸார் கைது செய்தனர்.எனவே பாலியல் தொழிலுக்கு பயண்படுத்தப்பட்ட ஜி க°ட் ஹவுஸை உடணடியாக +மூடி சீல் வைக்க வேண்டும்.பாரபட்சமில்லாமல் க°ட் ஹவுசின் உரிமையாளரை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி முழுவதும் உள்ள தனியார் க°ட் ஹவு°களை கன்கானிக்கவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர்,வாலிபர்,மாணவர் சங்கநிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கஸ்ட்ஹவுஸின் கதவுகளை அடைத்துகொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைதலைவர் ஜெயலட்சுமி,நிர்வாகிகள் சரோஜினி,மகாலட்சுமி,வாலிபர் சங்க பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,நகரதலைவர் சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,உழவர்கரை நகரசெயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க பிரதேச துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட 14 பெண்கள் உட்பட 35பேர்களை போலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Wednesday, November 16, 2011

மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்


புதுச்சேரி நவ-14
மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஒய்எப்ஜ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே பகுதிகுழு வின் செயலாளர் கே.பி.நௌஷாத்,பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
மாஹே மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு முதலில் ரூ.25கோடி ஒதுக்கப்பட்டது பின்னர் கட்டுமான பணிக்காக கூடுதலாக ரூ.75கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதேப்போல் மாஹே உள்விளையாட்டு அரங்கம் ரூ.19கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டு இதுநாள்வரை பூட்டப்பட்டுள்ளது.அதேப்போல் கேரள விருந்தினர் மாளிகைக்கு ஆற்று மேல் மேம்பாளம் கட்டியதிலும்,மாஹே ஆற்றையொட்டி உள்ள சுற்றுலாதுறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை தனியார் மதுபான கடைக்கு வாடகை விட்டதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. கடந்த மூன்று முறை மாஹே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு காங்கிர° அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொருப்பு வகித்த வல்சராஜ் ,மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல் செய்து அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.எனவே முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது புதுச்சேரி முதல்வர் சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாஹேவில் உள்ள பாப்°கே நிறுவனம் கேரளாவில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் மூலம் விவசாய பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வதை போல் புதுச்சேரியிலும் அத்தகைய நிலையை அரசு கடைபிடிக்க வேண்டும்.மாஹே கல்லுhரிகளில் கேரளா மாணவர்கள் சிறமமின்றி படிக்க முடிந்தது.அதேப்போல் மாஹே மாணவர்களும் கேரளாவில் படித்தார்கள்.தற்போது மாஹேவில் கேரளா மாணவர்கள் படிக்க தடைவிதித்துள்ளதால் உயர் படிப்புக்கு கேரளா சென்று மாஹே மாணவர்கள் படிக்க முடியவில்லை எனவே பழைய முறையை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.மாஹே ஆயுர்வேதா மருத்துவகல்லுhரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி போது மான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
பேட்டியின் போது மாஹே பகுதிகுழு நிர்வாகிகள் ஸ்ரீகாந்த்,வினெய்குமார்,பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ்,சரவணன்,SFI பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Wednesday, November 9, 2011

நீதி விசாரணை நடத்த வேண்டும்


புதுச்சேரி நவ-1
பள்ளி பேருந்து கவிழ்ந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த பாகூர் கடுகனூரில் பள்ளி மாணவர்கள் சென்ற ஒரு ரூhபய் கட்டண பேருந்து கவிழ்ந்ததில் மணப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஹேமலதா (12) சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பிள்ளனர்.பாகூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பேரூந்தில் ஏற்றிசெல்வதற்கு ஏழு பேருந்துகள் அவ்வழிதடங்களில் இயக்க வேண்டும்.ஆனால் சம்பவத்தன்று நான்கு பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட்டதால் கரையாம்பத்துhர்,கடுகனுhர்,குருவிநத்தத்தை சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்ததின் விளைவாக பேருந்து கடுகனூரில் வயல்வேளியில் கவிழ்ந்தது.
மருத்துவனையில் ஆருதல்
பேருந்து கவிழ்ந்ததில் காயம் அடைந்த மாணவர்கள் கடலுhர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நடந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரனை நடத்த வேண்டும்.இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை =எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லததை கண்டித்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர செயலாளர் என்.பிரபுராஜ் ஆகியோர் தலைமையில் திரளானோர் சென்று மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.
2 லட்சம் இழப்பீடு
இறந்த மாணவி ஹேமலதா குடும்பத்திற்கு முதல்வர் என்.ரங்கசாமி ரூ.2லட்சம் இழப்பீட்டு தொகை அரசு சார்பில் வழங்கபடும் என்று அறிவித்தார்.அதேப்போல் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயரமும் வழங்கபடும் என்று ம் சாதாரணம் காயங்கள் ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.5ஆயிரமும் வழங்க படும்.விபத்து குறித்த நீதி விசாரணை நடத்த படும்.அதேப்போல் வருங்களத்தில் விபத்து நடக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Sunday, October 9, 2011

கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி



புதுச்சேரி அக்-8
கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி புதுச்சேரியில் வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் தாகூர் பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி 10ஆம் வகுப்பு துணைத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய குற்றத்தில் சிக்கிய புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.சுனாமி குடியிருப்பு கட்டியதில் தோடர்புள்ள முன்னால் மாவட்ட ஆட்சியர், ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மகன்களுக்கு மருத்துவக்கல்லுhரி துவங்க அனுமதி அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்திவீதி-நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,எ°எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துனைதலைவர் ரஞ்சித்,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துனைத்தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர்,மாணவர் சங்கங்களின் நிர்வாகிள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி கல்விதுறை அமைச்சர் கல்யாணசுந்தரம் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.திண்டிவனத்தை அடுத்துள்ள தனியார் பள்ளியான தாகூர் மெட்ரிக்குளேஷன் பள்ளியில் நடந்த துணைத்தேர்வில் போலியான முகவரியை கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்ய விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி சனிக்கிழமை (அக்-8)திண்டிவனம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.எனவே முறைகேடுகளில் ஈடுபட்ட கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி உடணடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்=என மார்க்சி°ட் கட்சி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Friday, September 30, 2011

ஆளுநர் இக்பால்சிங்கை உடனடியாக பதவியிலிருந்து திரும்ப பெற வேண்டும்


புதுச்சேரி ஆக-29
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்கை உடனடியாக பதவியிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்று வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
வாலிபர் சங்கம் சார்பில் ஊழலுக்கு எதிரான பிரச்சார தெருமுனைக்கூட்டம் கரிக்கலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பு சாலையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் அரிதா° தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசசெயலாளர் தமிழ்ச்செல்வன் பேசுகையில்,
புதுச்சேரி மக்களை பாதுகாக்க வேண்டிய துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன்கள் இடம்பெற்ற அறக்கட்டளைக்கு மருத்துவகல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றால் அரசியல் சாசனத்தை மிறியசெயலில் ஈடுபட்ட அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்.மாதம் ஒன்றுக்கு மக்கள் வரிபணத்தில் 1.5லட்சத்திற்கு காய்கறி செலவு செய்கிற =ஆளநர் இக்பால் திரும்ப பெற்று அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் பொருளாளர் பிரபுராஜ்,வில்லியனுhர் இடைகமிட்டி செயலாளர் சண்முகம்,மாணவர் சங்க பிரதேசசெயலாளர் ஆனந்து,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர் சங்க நிர்வாகிகள் பச்சையப்பா,பத்மநாபன்,விஜயமூர்த்தி,ராமமூர்த்தி,ராகவன்,ஆனந்த்,அரளரசன்,உமாபதி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, August 23, 2011

இந்தியாவை ஒலியமயமாக்குவோம்


உழலில் இருண்ட இந்தியாவை ஒலியமயமாக்குவோம் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி நேருவீதியில் மெழுகுவத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்ஜசி ஊழியர் சங்க தலைவர்களுள் ஒருவருமான ராம்ஜி கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார்.உடன் டிஒய்எப்ஜ பிரதேசத்தலைவர் சந்துரு,நகரத்தலைவர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.

Thursday, August 18, 2011

புதிய பெயர்பலகை திறப்பு விழா - சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா


புதுச்சேரி ஆக 16
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா பாக்குமுடையான்பேட்டையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாக்குமுடையான் பேட் வினோபா நகரில் நடந்த சேகுவேரா இளைஞர் நர்பணி மன்றத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழாவிற்து வாலிபர்சங்க கிளை தலைவர் அந்துவான் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேசதலைவர் சந்துரு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர்பலகையை பிரதேச பொருளாளர் பிரபுராஜ் திறந்து வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக பிரதேச செயலாளர் தமிச்செல்வன் வாலிபர் சங்த்தின் லட்சியங்களைபற்றி பேசினார்.மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துனைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இவ்விழாவில் கிளை செயலாளர் லாமார்க்,பொருளாளர் கார்த்திக்,பாலமுருகன்,மணிகண்டன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். சேகுவேரா பெயரில் துவங்கப்பட்டுள்ள இளைஞர் நற்பணி மன்றம் டிஒய்எப்ஜ யுடன் இனைக்கப்பட்டுள்ளது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்பேட்டையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு டிஒய்எப்ஜ நகர தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கினார்.சிஜடியு உடல் உழைப்போர் சங்கத்தின் பொருளாளர் குமார்,வாலிபர் சங்க நிர்வாகி வினோத்,சங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.




சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று


புதுச்சேரி ஆக 10
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று புதுச்சேரியில் மாணவர்கள் மேலதாலத்துடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
புதுச்சேரி வ.ஊ.சி அரசு பள்ளி எதிரே நடந்த இந்த நிகழ்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்துரு, மற்றும் நகரகமிட்டி தலைவர் சரவணன்,உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர், சிஜடியு ஆட்டோ சங்க நிர்வாகி மது,நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகி பாலாஜி உள்ளிட்ட திரளான மாணவர்கள் உச்சநீதி மன்றத்தீர்ப்பை வரவேற்று மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். முன்னதாக மேலதாலத்துடன் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

இதேப்போல் இலாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்,உள்ளிட்ட புதுச்சேரி முழுவதும் உள்ள கல்லுரிகளிலும்,கல்வி நிலையங்களிலும் மாணவர்சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

Tuesday, August 2, 2011

பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது



புதுச்சேரி ஜூலை 17
பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது.
அஜிஸ் நகரில் நடந்த இவ்விழாவிற்கு கிளைத்தலைவர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு வாலிபர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.வாலிபர் சங்கத்தோடு இணைந்துள்ள இயக்கத்தின் புதிய பெயர் பலகையை டிஒய்எப்ஜ புதுச்சேரி பிரதேச செயலாளர் டி.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பேசினார்.மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்திய,டிஒய்எப்ஜ பிரதேச பொருளாளர் என்.பிரபுராஜ்,உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர்,நகரகமிட்டி தலைவர் சரவணன்,எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து, ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கிளை செயலாளர் ரமேஷ்,பொருளாளர் வேணு ,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கும்பகோனத்து தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 7ஆம் ஆண்டு தினத்தையொட்டி புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி வியாபார எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு இலாஸ்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித்,ஜெயராஜ் உள்ளிட்ட மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Monday, June 27, 2011

டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் நுhதான போராட்டம்


புதுச்சேரி ஜூன் 26
சமையல்கியாஸ்,மண்ணனை,டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் நுhதான போராட்டம் நடைபெற்றது.
சமையல்கியாஸ்,மண்ணனை,டீசல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெறக்கோரியும் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரி மத்திய அரசு மீது மண் அள்ளிவிடும் போராட்டம் நடைபெற்றுது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை ஜீவாகாலனியில் நடந்த இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேசத்தலைவர் சந்துரு,பொருhளாளர் பிரபுராஜ்,முன்னாள் தலைவர் லெனின்துரை,மாணவர் சங்கத்தின் செயாலளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்க.சங்கநிர்வாகிகள் சத்தியா,ராம்கோபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக சமையல்கியா° சிலிண்டர் மீது தங்களது எதிர்பை பதிவு செய்யும் வகையில் மண்ணை அள்ளிவிட்டனர்.
படம் உள்ளது

Monday, June 6, 2011

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுக்க புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வெண்டும்


புதுச்சேரி ஜூன் 5
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுக்க புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வெண்டும் என்று வாலிபர்,மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கத்தில் வலியுருத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கல்வி,வேலையை பாதுகாக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திறந்த வேளி கருத்தரங்கம் நடைபெற்றது.அண்ணசாலை,வைசியால் வீதி சந்திப்பில் நடந்த கருத்தரங்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் பிரதேசத்தலைவர் சந்துரு தலைமை தாங்கினார்.மாணவர் சங்க துணைத்தலைவர் ரஞ்சித் வரவேற்புரையாற்றினார்.அணைவருக்கும் பொதுவான கல்வி என்ற தலைப்பில் டிஒய்எப்ஜ மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமோஷ்பாபு ம், இந்தியாவில்ம இன்றைய உயர்கல்வி என்றத்தலைப்பில் எஸ்எப்ஜ தமிழ் மாநில துணைத்தலைவர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.அதேப்போல் புதுச்சேரியில் கனவாகும் வெலை என்ற தலைப்பில் வாலிபர் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வன், பெருகிவரும் வன்முறைக்கலாச்சாரம் என்றத்தலைப்பில் பொருளாளர் பிரபுராஜ் மற்றும் புதுச்சேரியில் கல்வி நிலைகுறித்து ஆனந்து ஆகியோர் பேசினார்கள்.இறுதியாக வாலிபர் சங்க நகரகமிட்டி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
தீர்மாணங்கள்
இக்கருத்தரங்கத்தில் புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல்,மருத்துவ கல்லுhரிகளில் 50சதவீத அரசு இடஒதுக்கீட்டை பெறவேண்டும்.அரசு பள்ளி,கல்லுhரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி அடிப்படை வசதிகளை நிறைவெற்ற வேண்டும்.அரசு அறிவித்த வேலையில்லா காலநிவாரணத்தை வழங்க வெண்டும் எனபன 9அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.கருத்தரங்கத்தில் திரளான மாணவர்,வாலிபர்கள் பங்கேற்றனர்.

Wednesday, May 11, 2011

DYFI Comrade pleased public for donation for to start medical college admission at Puducherry due order of MCA


புதுச்சேரி மே 11
அரசு மருத்துவக்கல்லுhரியின் அங்கீகாரம் ராத்தானதை கண்டித்து மாணவர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் கல்வி பிச்சை எடுக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
கதிர்காமம் இந்திராகந்தி அரசு மருத்துவகல்லுhரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாததால் அகில இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்கைக்கான அங்கீகாரத்தை ரத்தசெய்தததை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும். இந்தாண்டே மாணவர் சேர்கை நடத்த வேண்டும்.தோடர்ந்து தனியார் மருத்துவகல்லுhரிகளுக்கு ஆதரவாக செயல்படும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து இந்நுhதன போராட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்கத்தின் தலைவர் சந்துரு ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.டிஒய்எப்ஐ செயலாளர் தமிழ்ச்செல்வன்,பொருளாளர் பிரபுராஜ்,நகர தலைவர் சரவணன்,மற்றும் நிர்வாகிகள் அரிதாஸ்,பாஸ்கர்,ராஞ்சித்,பார்த்தசாரதி ஆகியோர் பேசினார்கள்.திரளான மாணவர்கள்,வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பொது மக்களிடம் இருந்து பிச்சை எடுத்த பணத்தை சுகாதாரத்துறை இயக்குநருக்கு டிடி எடுத்து அனுப்படும் என்று சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.

Wednesday, March 23, 2011

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி


பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி
-ஹர்கிசன்சிங் சுர்ஜித்
நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங் புரிந் திட்ட தியாகம், எனக்குத் தனிப்பட்ட முறை யில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. பகத் சிங்கின் உச்சபட்ச தியாகத்தால் உத்வேகம டைந்து, நான் கல்வி கற்பதைக் கைவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகக் குதித்துவிட்டேன். பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்குமேடையில் வெளிப்படுத் திய வீராவேசம் மட்டுமல்ல, அவர்கள் புதி தாகப் பின்பற்றத் தொடங்கிய விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் இதற்குக் காரண மாகும். விஞ்ஞான சோசலிச சிந்தனைகள் அந்த சமயத்தில் அனைவரையும் வேகமாக ஈர்த்து வந்தன. அக்டோபர் புரட்சி மற்றும் அதன் சிந்தனைகள் 1922இல் லாகூரிலிருந்து வெளிவந்த “இன்குலாப்”, 1923இல் ஜலந்தரி லிருந்து வெளிவந்த “தேஷ் சேவாக்”, 1926இல் அமிர்தசரசில் இருந்து வெளிவந்த “கிர்திக்” (தொழிலாளி) போன்ற வெளியீடு களில் அவை தெளிவுபடுத்தப்பட்டன. இந்த இதழ்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக் கள், பகத்சிங் மீது அழிக்கமுடியாத அளவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. பகத்சிங், தில்லி நாடா ளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியபோது, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட தன் மூலமாக, அம்முழக்கத்தை மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசென்று விட்டார். “நான் எந்தத் தனிப்பட்ட நபரையும் குறி வைத்து இந்த வெடிகுண்டை வீசவில் லை. மாறாக, 1919 மாண்ட்போர்ட் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடாளு மன்றத்திற்கு எதிராகவே இதனைப் பயன் படுத்துகிறேன்” என்று மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தார். ஒரு ஜனநாயக முறையில் செயல்படும் நாடாளுமன்றம் என்று பகட்டான முறையில் பிரிட்டிஷார் சொல்லிக் கொண்டி ருந்தாலும், உண்மையில் அது “சுரண்டல் பேர்வழிகளின் குரல் வளையை நெரிக்கும் அடையாளச் சின்னம்” என்று பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் தங்களுடைய அறிக் கையில் கூறினார்கள். தொழிற்சங்க இயக்கத் தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்டதற்கு (மீரட் சதி வழக்கு தொடர் பாக கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்ட தற்கு) எதிராகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கி டும் ‘தொழில் தகராறு சட்டமுன்வடிவிற்கு’ எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நடவடிக் கையில் இறங்கினோம் என்று தங்கள் அறிக் கையில் அவர்கள் மேலும் பிரகடனம் செய் தார்கள்.

இந்த இளம் புரட்சியாளர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் இவர்களது அறிக்கையிலி ருந்து மிகத் தெளிவாக உலகுக்குத் தெரிய வந்தது. “ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசி யம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழி லாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீ கரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர் உன் னதமான சமூக அமைப்பு இறுதியாக நிறுவப் படுவதேயாகும்,” என்று அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, காந்தி இப்புரட்சியா ளர்களின் வீரஞ்செறிந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்மறையான அணுகுமுறையைக் கையாண்டார். ஆயினும், பகத்சிங் மேற் கொண்ட வழிகளைக் கண்டிப்பதற்காக, காங் கிரசாரை அணி திரட்டுவதற்கு அவர் மேற் கொண்ட முயற்சிகள் மிகவும் கடினமாகவே இருந்தன.

பகத்சிங், நாட்டுப்பற்றும் தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் மாமா அஜீத்சிங், 1905ஆம் ஆண்டு காலனிமய சட்டத்திற்கு (ஊடிடடிnளையவiடிn ஹஉவ) எதிராகப் போராடிய முன்னோடி. இதன் காரணமாக நாடு சுதந்திரம் அடையும் வரை யில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். அப்போ தும் அவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பகத்சிங் தந்தையும், தேச விடுத லைக்கான போராட்டத்தில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டவர்தான். இத்தகைய பாரம்பரியம்தான் இயற்கையா கவே பகத்சிங்கிடமும் வீரத்தை விளைவித் திருந்தது. மாணவப் பருவத்திலேயே அவர் புரட்சியாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட் டார். அக்டோபர் புரட்சி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக வங்காளம், பஞ்சாப், பம்பாய், உத்தரப்பிரதேசம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பல கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தன.

நான் முன்பே குறிப்பிட்டிருப்பதுபோல, சோசலிசக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பரப்பிடும் வகையில் ஏராளமான இதழ்கள் வெளிவரத் தொடங்கி இருந்தன. பகத்சிங், ‘‘கிர்த்தி’’ (தொழிலாளி) இதழுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இதழ் கதார் கட்சி சார்பாக அமிர்தசர சில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர் பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பகத்சிங், இம்மாத இதழின் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளின் ஆசிரியர்களான சோஹன் சிங் ஜோஷ் மற்றும் ஃபெரோசிதீன் மன்சூர் ஆகி யோருடன் இணைந்து பணியாற்றினார். இதன் வாயிலாக மார்க்சிசம்-லெனினிசத் தை மேலும் ஆழமாகக் கற்றிட பகத்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது,. அதன் காரணமாக, இந்தி யப் புரட்சியின் பாதை மார்க்சிச - லெனினிச வழியிலேயே அமைந்திட வேண்டும் என்றும் பகத்சிங் முடிவுக்கு வந்தார்.

அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இலக்கி யங்கள் மிகவும் குறைவு. மார்க்ஸ் தேர்வு நூல் கள் சிலவற்றின் பிரதிகளைத் தவிர, கம்யூ னிச சித்தாந்தம் குறித்த மங்கலான தெளி வற்ற சில வெளியீடுகளே வெளிவந்திருந்த காலம். பகத்சிங் மாணவராகப் பயின்று கொண் டிருந்த தேசியக் கல்லூரி, இந்த சிந்தனை களைப் பரப்பிடும் மையமாக அப்போது திகழ்ந் தது. இக்கல்லூரியின் முதல்வர் சபிலிதாஸ். இவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இவர் சோசலிசம் பற்றி எழுதிய பல பிரசுரங்கள் புகழ்பெற்றவைகளா கும். இப்பிரசுரங்களில், அறிவியல் பூர்வமான தர்க்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறை காணப்படவில்லை எனினும், சோசலிச சிந்தனையை நோக்கி மக்களைக் கவர்ந் திழுக்கும் பங்கினை இவையாற்றின.

இன்றுள்ள தோழர்களுக்குக் கிடைத் திருக்கக் கூடிய அளவிற்கு, அபரிமிதமான அளவில் கம்யூனிச நூல்கள் கிடைக்காத அந் தக் காலத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்க ளும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்டுகள் அள விற்கு மார்க்சிச- லெனினிச அறிவியல் மற் றும் சித்தாந்தம் குறித்து ஞானம் பெற்றிருப்பார் கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது, எதிர் பார்க்கவும் கூடாது. ஆயினும் அவர்களுக்குக் கிடைத்திட்ட குறைந்த அளவிலான நூல் களைக் கற்றே அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாக, அஞ் சாநெஞ்சுடனும் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந் தார்கள். இதுதான் மற்ற புரட்சியாளர்களிலி ருந்து பகத்சிங் மற்றும் அவரது தோழர் களைத் தனியே நிறுத்தி வைக்கிறது. இது தான், அவர்கள் வீரமரணத்திற்குப் பின்னரும் அவர்களைப் புகழடைய வைத்திருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களது நினைவு களை இன்றும் போற்றிப் பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்ட சமயத்தில், நாடு முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வகையில் வெடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கு மக்கள் மத்தி யில் இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. மக்கள் மத்தியில் வெளிப்பட்ட இத்தகைய ஆவேச உணர்ச்சி அலை காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உடல்களைத் திருட்டுத்தனமாக அப்புறப்படுத்தி எரியூட்டினர்.

அவர்களது வீரச் செயல்கள் நாடு முழுவ தும் அலை அலையாகப் பிரதிபலித்தது. வீரத் தியாகிகளின் லட்சியத்தின் மீது மக்கள் மத்தி யில் பற்று ஏற்பட்டது. சோசலிசம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண் டும் என்கிற அவா வளர்ந்தோங்கியது. மக்களின் உணர்வு வெளிப்பாடு காங்கிரஸ் கட்சிக்குள் ளும் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விவாதங்களின்போது, கட்சியில் கணிசமான பகுதியினர் பகத்சிங் மற்றும் தோழர்கள் கொல் லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது வீரமரணமும், அவர்கள் நீதிமன் றத்தில் ஆற்றிய வீரஞ்செறிந்த பிரச்சாரமும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மாறின.

பகத்சிங் எழுத்துக்களை நுணுகி ஆராயும் போது, பகத்சிங் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெ டுத்தபின், தனக்குக் கிடைத்த அனுபவங்க ளின் அடிப்படையில், நாட்டில் தன் முன்னி ருந்த யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதையும் அதன் தொடர்ச் சியாக அரசியல் மற்றும் சித்தாந்தத் தெளிவு பெற்று, சோசலிச லட்சியத்திற்காகத் தன் னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என் கிற நிலைக்கு வந்தார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இன்று தோழர்கள்

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்

நினைவு நாள்

(தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், 14.11.1995இல் எழுதிய கட்டுரை)

தமிழில்: ச.வீரமணி

Sunday, March 6, 2011

வாக்குகளை விலைபேசுவதை கண்டித்து



புதுச்சேரி மார்ச் 5
சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளை விலைபேசுவதை கண்டித்து வாக்காளர்களை விழிபுனர்வு ஏற்படுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் துண்டு சுவரொட்டிகள் புதுவையில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலையொட்டி லா°பேட்டை,உருளையன்பேட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு புடவைகள்,சமையல் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிவந்து இருப்பதை கண்டித்தும் இத்தகைய இலவசங்களை வழங்குபவர்களை மக்கள் அடையாளம் கண்டு புரக்கணிக்க வேண்டும் என வலியுருத்தி டிஒய்எப்ஜ,எ°எப்ஜ சார்பில் நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு சுவரொட்டிகள் மக்களிடையே விழிபுனர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளனர்.
வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துரைமுருகன், மாணவர்சங்க செயலாளர் ஆனந்து,ரஞ்சித்,பார்த்தசாரதி ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சனிக்கிழமை சுவரொட்டிகளை வெளியிட்டனர்.மேலும் இந்த சுவரொட்டிகளை லா°பேட்டை,பாகூர்,திருபுவனை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து வழங்க உள்ளோம் என்றும் கூறினர்.

Tuesday, February 22, 2011

24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்


புதுச்சேரி பிப் 16
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 படுக்கை வசதிகளுடன் அறுவை சிகிச்சை மையத்தை ஏற்படுத்திடக் கோரி வாலிபர் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் பாகூரில் நடைப்பெற்றது.
பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகளை ஏற்படுத்தி தரவேண்டும். 24 மணிநேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகூர் பேருந்து நிலைய பணியை விரைந்து துவக்க வேண்டும். மாணவர்களுக்கான கலைக்கல்லூரியை அமைத்துக் கொடுக்க வேண்டும். பாகூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்றி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
பாகூர் மேற்கு வீதியில் காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமைத் தாங்கினார். டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயலாளர் வேல்முருகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தை வாழ்த்தி பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ், சரவணன், ஷண்முகம், லெனின் பாரதி ஆகியோர் பேசினார்கள். பாகூர் கொம்யூன் தலைவர் சரவணன், செயலாளர் அரிதா°, பொருளாளர் வீரப்பன் உள்ளிட்ட திரளான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி பிப் 16
அரசு மருத்துவ பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து சுகாதாரத் துறை ஊழியர்கள், செவிலியர்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு 300 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனையை உருவாக்கி நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையின் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பi கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.

Tuesday, February 1, 2011

GOVERNMENT SHOULD BAN LEADER PRINTED SHOES AND SANDALS



World Leader Che Guevara is printed in shoes and sandal throw USA black and supplied to world market for sale. Now they are implementing in Indian market.This will creat law and order issue.This sandals and shoes must be ban by or else it will creat big issue in selling shops.
On 31st Dec 2011, Puducherry - The shoes shops are arrested BY Youth federation ( DYFI – AIYF )

Sunday, January 30, 2011

மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


புதுச்சேரி ஜன 30
மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லா°பேட்டையில் நடைப்பெற்றது. காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு, தீண்டாமைக்கு எதிராக வாலிபர்கள், சிறுவர்கள் உறுதி மொழி ஏற்றனர். மேலும் அசோக் நகர் பாரதியார் சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிஒய்எப்ஐ கிளைத் தலைவர் வைத்தியநாதன் தலைமைத் தாங்கினார். வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, துணை செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கிளை நிர்வாகிகள் பாலாஜி, ராமகோபால், ரோஹன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Thursday, January 27, 2011

குடியரசு தின விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா


புதுச்சேரி ஜன 27
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 22வது குடியரசு தின விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் நடைப்பெற்றது.
சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வாலிபர்களுக்கான வழுக்குமரம் ஏறுதல், பெண்களுக்கான இசைநாற்காலி, கோலம்வரைதல் மற்றும் உறியடித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு வாலிபர் சங்க புதுவை பிரதேச உழவர்கரை கமிட்டி கன்வினர் பா°கர் தலைதைத் தாங்கினார். சிபிஎம் உழவர்கரை கமிட்டி செயலாளர் லெனின் துரை, டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், துணை செயலாளர் சரவணன், மாதர்சங்க நிர்வாகி சத்யா, எ°எப்ஐ செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். வாலிபர் சங்க நிர்வாகிகள் அக்கிம், முரளி, சுகன்யா, அக்பர், சபி உள்ளிட்ட திரளான வாலிபர்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக சிகரம் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைப்பெற்றது.
படம் உள்ளது.

Wednesday, January 19, 2011

பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா



புதுச்சேரி ஜன 17
இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா லா°பேட்டை அசோக் நகரில் நடைப்பெற்றது.
சிறுவருக்கான ஓட்டப்பந்தயம், ஓவியம் வரைதல், உரி அடிப்பு, பெண்களுக்கான கோலப்போட்டி, இசைநாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். மாணவர் சங்க தமிழ் மாநில இணை செயலாளர் °டாலின், வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், கமிட்டி செயலாளர் கதிரவன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் லெனின் துரை, நகர உயர்நீதி மன்ற வழக்கறிஞர் °டாலின் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.
இவ்விழாவையொட்டி புதுவை சிகரம் கலைக்குழுவினரின் தப்பாட்டம், சிறுவர்களின் இசை நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்துவதைக் கண்டித்து தண்டோரா போட்டு அறிவிக்கும் போராட்டம்

புதுச்சேரி ஜன 17
காங்கிர° - திமுக அரசின் பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்துவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தண்டோரா போட்டு அறிவிக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.54 உயர்த்தியதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் நடந்த இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க நகர கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜா, கோபால் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு அடங்கிய பதாகையுடன் மிஷன் வீதி. காந்தி வீதி, அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக சென்று பெட்ரோல் விலை உயர்வை தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தனர்.


பாகூர்
பாகூர் கடைவீதியில் இருசக்கர மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்க கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், கொம்யூன் செயலாளர் அரிதா°, பொருளாளர் வீரப்பன், வெங்கடேசன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நூதனப் போராட்டம் கடை வீதி மக்களை ஆச்சர்யப் படுத்தியது.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்ததற்கு அரசின் பரிசு: வாலிபர்கள் மீது போலீஸ் தடியடி: 8 பேர் பலத்த காயம்; 60 பேர் கைது


சென்னை, ஜன. 18 -

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய வாலி பர் சங்கத்தினர் மீது போலீசாரும், அடையாளம் தெரியாத நபர்களும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இதில் எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

பெட்ரோல் விலைகளை பெட் ரோலிய நிறுவனங்களே தீர்மா னித்துக் கொள்ள மத்திய அரசு அனு மதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி வழங்கப்பட்ட கடந்த ஆறு மாதங்க ளில் ஏழு முறை பெட் ரோல் விலை உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த் தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச. லெனின், பொருளாளர் தாமு, வடசென்னை மாவட்டத் தலைவர் இல. சண்முக சுந்தரம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் செவ்வாயன்று (ஜன.18) நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனை முற்றுகையிட ஊர் வலமாக வந்தனர்.

இந்தியன் ஆயில் பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் காவல் துறையினர் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இத னால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் பிர தமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

தடியடி

இதனையடுத்து போலீசார் காட்டு மிராண்டித்தனமாக தடியடி நடத்தி னர். கீழே விழுந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கிய தோடு, பூட்ஸ் கால்களால் மிதித்தனர். லத்தியை கொண்டு வயிற்றில் குத்தி னர். இந்த தாக்குதல்களில் 8 பேர் காயம டைந்தனர்.

இதனிடையே, ஒரு பகுதியினர் இந்தியன் ஆயில் பவனுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசாரும், அடையா ளம் தெரியாத நபர்களும், ஆயில் பவன் ஊழியர்களும் சுற்றி வளைத்து தாக்கினர். இத் தாக்குதலில் முரளி (மயிலை), சுரேஷ் (சோழிங் கநல்லூர்), குமரன் (சைதை), மணி (ஆயிரம் விளக்கு), ரமேஷ் (எழும்பூர்), உதயா (அண்ணாநகர்), சுரேஷ் (வேளச்சேரி), ஜெயந்த் (தாம்பரம்) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டி ருந்தவர்களை போலீசார் கீழே தள்ளி தரதரவென்று இழுத்து வேனில் தூக்கி எறிந்தனர். பின்னர் வேனுக்குள் ஏறி லத்தியால் தாக்கி பூட்ஸ் காலால் உதைத்தனர். இதனால் அந்த இடம் போர்க் கோலமாக காட்சி அளித் தது.

பலத்த காயமடைந்த வர்கள் உட் பட கைது செய் யப்பட்ட அனை வரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏபிவிபி திருமண மண்ட பத்தில் வைத்திருந்தனர்.

தலைவர்கள் ஆறுதல்

இத்தகவலை அறிந்து அங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், பெரம் பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க. பீம்ராவ், செயற்குழு உறுப்பினர்கள் டி.நந்த கோபால், டி.கே.ராஜன், ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி போலீசாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பலத்த காய மடைந்த 8பேரை போலீசார் மருத் துவமனைக்கு அழைத்துச் செல் வதாக கூறினர். வேனில் ஏற்றி சென்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 3 மணி நேரம் வைத்திருந்தனர். காய மடைந்தவர்களில் சிலர் மயக்கமடைந் தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச் சைக்காக கொண்டு சென்றனர்.

Tuesday, January 18, 2011

அங்க பிரதட்சனப் போராட்டம்


புதுச்சேரி ஜன 18
குண்டும் குழியுமான புதுச்சேரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அங்க பிரதட்சனப் போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி கடலூர் சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடந்து வருவதை தடுக்க உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதனப்போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியகோவில்-கடலூர் சாலையில் நடந்த அங்கப்பிரதட்சன போராட்டத்திற்கு வாலிபர் சங்க பாகூர் கொம்யூன் கமிட்டி பொருளாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். டிஒய்எப்ஐ பிரதேசத் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை செயலாளர் சரவணன், கொம்யூன் செயலாளர் அரிதா° மற்றும் அருள், மணிபாலன், வெங்கடேசன், லெனின் பாரதி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக குண்டு குழியுமான சாலையில் வாலிபர்கள் படுத்து உருண்டு அளூக பிரதட்சணம் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
படம் உள்ளது.

Thursday, January 13, 2011

DYFI activists conduct blood donation champ at Oulgaret


Puducherry | Sat, 21 March, 2009
Volunteers of the Democratic Youth Federation of India (DYFI) today conducted blood donation champ at Oulgaret

DYFI volunteers hold fast for Minister's removal

Puducherry | Wednesday, Mar 26 2008 IST

The Democratic Youth Federation of India (DYFI) volunteers led by All India President Sriramakrishnan began a 24-hour fast at the Mahe Municipal Grounds this evening.

According to reports reaching the police headquarters here from Mahe, Mr Sriramakrishnan said the DYFI had planned a march to the Puducherry Legislative Assembly shortly to press for the removal of Health Minister E Valsaraj.

Today's fast was to press for the resignation or removal of Mr Valsaraj against whom the Vigilance and Anti-corruption police had registered cases.

Tuesday, January 11, 2011

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில பயிற்ச்சி முகாம் - புதுச்சேரி நவீனாகார்டன் திருமணமன்டபத்தில் நடைபெற்றது




புதுச்சேரி ஜன 8
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில பயிற்ச்சி முகாம் ஜனவரி 7 ல் துவங்கி,8,9 ஆகிய மூன்று நாட்கள் புதுச்சேரி நவீனாகார்டன் திருமணமன்டபத்தில் நடைபெற்று வருகிறது.
சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் முத்து கண்ணன், மாநில செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாளர் பாலா,உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து 120 பிரதிநிதிகள் இம் முகாமில் கலந்து கொண்டு உள்ளனர்.
படம் குறிப்பு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில பயிற்ச்சி முகாமில் டிஒய்எப்ஜ முன்னால் மாநில தலைவர் பாக்கியம் கலந்து கொண்டு உலக இளைஞர் வரலாறு என்ற தலைப்பில் பேசினார்.உடன் மாநில தலைவர் முத்து கண்ணன், மாநில இனைச்செயலாளர் °டாலின் ஆகியோர் உள்ளனர்.
முகாமில் கலந்து கொண்டோர் பிரதிநிதிகள் ஒரு பகுதியினர்.

SAMPLE ASSEMBLY IN FRONT PONICHERRY LEGISLATIVE ASSEMBLY

DYFI activists conduct Mock Assembly to press demands
Puducherry | Thursday, Mar 25 2010 IST
Volunteers of the Democratic Youth Federation of India (DYFI) today conducted a mock assemby in front of the Head Post Office here to press their demands.

The volunteers divided themselves as ruling and opposition sides and in to different postions, including Speaker and took up various issues for debates much to the curiosity of onlookers.

The agitation was to draw the attention of the government on the unemployment problem and press for creation of opportunities.




http://news.webindia123.com/news/Articles/India/20100325/1471926.html

Friday, January 7, 2011

Students Federation of India



Education is a major tool of social transformation and this is especially relevant
in a country like India, where regressive forces still prevail. Proper education
will be a barrier against such forces and will help to build a new society based on
rationality and justice. Any student organization must evaluate its raison d'être
against this background. The Students Federation of India, abbreviated SFI,
is an organization of students which is ever aware of its social role. It identifies
with all the progressive forces in the society and is totally committed to the
ideals of independence, democracy and socialism. It includes students from all aca-
demic institutions of the country - from schools and colleges, from professional
institutions and research academies.
On the global front, SFI is against the colonization of any country by any other country and pledges allegiance to all international peace movements.