Tuesday, December 24, 2013

குரங்கில் இருந்துதான் மனிதன் உருவாக்கினான், இதில் சாதியை மனிதன் உருவாக்கினான் என்பதை ஆழமாக எடுத்துரைக்க வேண்டும்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் பெருகிவரும் சாதி மோதலை முடிவுகட்ட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் டார்வின் தத்துவத்தை பிரச்சாரம் வேண்டும் ,
குரங்கில் இருந்துதான் மனிதன் உருவாக்கினான், இதில் சாதியை மனிதன் உருவாக்கினான் என்பதை ஆழமாக எடுத்துரைக்க வேண்டும் என்ற மனுவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரி அரசு தலைமை செயலரிடம் அளிக்கப்பட்டது.

Tuesday, December 17, 2013

டெல்லி மாணவி படுகொலைசெய்யப்பட்ட தினத்தில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,டிச.17-
டெல்லி மாணவி படுகொலைசெய்யப்பட்ட தினத்தில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி ,கல்லூரிகள் மற்றும் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் புகார்குழுக்களை அமைக்க வேண்டும்.புதுச்சேரியில் பெண்கள் ஆனையத்தை செயல்படுத்த வேண்டும்.பெண்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் கடந்தாண்டு ஓடும் பேரூந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்டடு  படுகொலை செய்யப்பட்ட மாணவியின் முதலாம் ஆண்டைமுன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணை தலைவர் சுமதி,இந்திய ஐனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண்,துணைத்தலைவர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, December 7, 2013

போதை-பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இளைஞர் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி,டிச.1-
போதை-பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இளைஞர் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரியில் நடைபெற்றது.

போதை-வன்முறை,பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடு




மை ஆகியவைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து அறுவடை- 2013 என்ற தலைப்பில் மக்கள் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் நடைபெற்றது.

       இவ்விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் வில்லியனூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு தலைவர் சண்முகம்,எஸ்எப்ஐ கொம்யூன்குழு செயலாளர்  திவானந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். டிஒய்எப்ஐ கொம்யூன் செயலாளர் செல்வராசு வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் பி.ராஜவேலு,டிஒய்எப்ஐ தமிழ்மாநில தலைவர் செ.முத்துகண்ணன், எஸ்எப்ஐ தமிழ்மாநில துணைத்தலைவர் ரெ.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

    இவ்விழாவில் வாலிபர் சங்க பிரதேச தலைவர் இரா.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,நிர்வாகிகள் மோகன், அரிதாஸ், மாணிக்கம், பத்மநாபன், அருள்குமரன்,எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அருண்,துணைத்தலைவர் ரஞ்சித்,செயலாளர் ஆனந்த் உளிட்ட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னதாக புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவினரின் கிராமிய பாடல்கள் மற்றும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.