Wednesday, September 29, 2010

Four-day DYFI state executive committee to beginning on Sept 24 - 2010



The four-day Tamil Nadu state Executive committee of the Democratic Youth Federation of India (DYFI), beginning here from Sept 24, would chalk out the strategy to successfully fight various problems being faced in the country, particularly in education, employment and health fields.

About 500 delegates, including 115 women, would participate in the sessions on all four days, during which the corruption in Common Wealth Games and Cricket fields would also be discussed, S Kannan, state DYFI secretary told reporters here today.

CPIM politburo member, Sitaram Yechury would address a public meeting on the last day, when a procession would be flagged off by M B Rajesh, MP and All Indian joint secretary of DYFI, Kannan said.

The meeting would also discuss the strategy to be adopted to exert pressure on both the Centre and State governments for immediate implementation of Sethu Samudram Canal project,

Cases registered against DYFI activists

Race Course police on Monday registered cases against four Democratic Youth Federation of India (DYFI) activists for indulging in acts not permitted during a rally.

Prior to the commencement of rally from VOC Grounds, it was learnt that these activists indulged in certain acts opposed by the police. Cases were registered against Ramesh Babu, Kannan and two others under section 43 (indulging in acts against permission) and 353 (preventing government servant from discharging duty) under IPC.

வாலிபர் சங்க தலைவர்கள் மீது காவல்துறை பொய் வழக்குப்பதிவு


கோவை, செப்.28-

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தலைவர்கள் மீது கோவை காவல்துறை பொய் வழக்குப்பதிவு செய் துள்ளது.

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 13 வது மாநில மாநாடு கோவையில் செப் டம்பர் 24 முதல் 27 வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான செப்டம் பர் 27 அன்று பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற எழுச்சி பேரணி நடைபெற்றது. முன்னதாக கோவை வ.உ.சி பூங்கா முன்பு தமிழகம் முழு வதும் இருந்து வந்திருந்த இளைஞர்கள் குவிந்தனர். அதில் பலர் கைகளில் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு இருந்தனர். சில இளைஞர்கள் கையில் ஒரு பொம்மையுடன் வந்தனர். அதில் தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயத்தில் கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்த மறுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை கண் டித்தும், தனியாரின் தடை ஆணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யாத திமுக அரசை விமர்சித்தும் வாச கங்கள் எழுதப்பட்டிருந் தது. இதனை அனைவரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப் போது கோவை காவல் துறை துணை ஆணையர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் திரண் டிருந்த கூட்டத்திற்குள் புகுந்தனர்.

இளைஞர்கள் கையில் வைத்திருந்த பொம்மையை கையில் வைத்திருக்க கூடாது என கூறினர். இதற்கு இளை ஞர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து காவல் துறையினர் அராஜகமாக இளைஞர்களின் கையில் இருந்த பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் வாலி பர் சங்க தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் இளைஞர் களை அவமரியாதையாக பேசி தாக்க முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் தொடர் எதிர்ப்பையும் மீறி இளைஞர் கள் பொம்மையை ஊர்வ லத்தில் கொண்டு சென்றனர். பேரணி நடைபெறும் பகுதி யில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்படவில்லை. போக்குவரத்தையும் காவல் துறையினர் ஒழுங்குபடுத்த வில்லை. இதைக் கண்டித்து பேரணியில் சென்ற இளை ஞர்கள் கோஷம் எழுப்பி னர். அப்போது வாலிபர் சங்க நிர்வாகிகள் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் செல்ல வழிவகுத்து கொடுத்தனர்.

தொடர்ந்து பேரணி சென்று கொண்டிருந்த போது காந்திபுரம், மற்றும் 100 அடி சாலையில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. பேரணி பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டி ருந்த சிவானந்த காலனியை அடைந்த போது அந்த பகுதி யிலும் மின்சாரம் துண்டிக் கப்பட்டது. அப்போதும் வாலிபர்கள் அரசு நிர்வா கத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இருந்த போதி லும் பொதுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

பொய் வழக்குப்பதிவு

இந்நிலையில் பேரணி நடைபெற்ற பின்னர் கோவை பி4 காவல் நிலையத்தில் வாலிபர் சங்க தலைவர்கள் எஸ்.கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, கோவை சின்ன வேடம்பட்டி பேரூராட்சித் தலைவர் வி.ராமமூர்த்தி, உள்ளிட்ட பலர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிட மால் தடுத்தல் பிரிவு 143, சட்டவிரோதமான முறை யில் உருவபொம்மை கொண்டு சென்றதாக பிரிவு 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாலிபர் சங்க பேரணி






கோவை, செப்.28-

வெண்கொடி ஏந்திய இளைஞர்கள் மாபெரும் பேரணி கோவையில் எழுச்சி


கோவை, செப்.27-

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான திங்க ளன்று கோவையில் மாபெரும் இளைஞர் பேரணி நடைபெற்றது. இதில் வெண்கொடி ஏந்திய இளைஞர்களின் எழுச்சி மிகு அணிவகுப் பால் கோவை மாநகரம் ஸ்தம்பித்தது.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த மாநில மாநாட்டின் நிறைவாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எழுச்சிப் பேரணி திங்களன்று மாலை நேரு விளையாட்டரங்கின் முன்பாகத் துவங்கியது. சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாள ரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. ராஜேஷ் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். அப்போது கேரள செண்டை மேளங்கள் விண்ணதிர முழங்கின. இதைத் தொடர்ந்து திருப்பூர் கலைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களின் தப்பாட்டம்., சூலூர் தாலுகா கலைக்குழுக்களின் சிலம்பாட்டம், ஒயிலாட் டத்தைத் தொடர்ந்து 13 வெண்பதாகைகளை ஏந்தி ராணுவ மிடுக்குடன் இளைஞர்கள் கம்பீரமாக அணிவகுத்தனர். ஆயிரக்கணக் கான வெண்தொண்டர்கள் அணிவகுப்போடு பின்தொடர்ந்தனர். நேரு விளையாட்டரங்கில் துவங்கிய பேரணி நஞ்சப்பா சாலை, காந்திபுரம், நூறடி சாலை, பவர் ஹவுஸ் வழி யாக சிவானந்தா காலனியில் உள்ள பொதுக் கூட்ட மேடையைச் சென்றடைந்தது. வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தும் அட்டைகளுடன் இளைஞர்கள் பேரணியில் பங்கேற்றனர். மத்திய மாநில அரசு களின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் பல்வேறு ரதங்கள் அணிவகுந்தன. பேரணியின் இருபுறமும் மக்கள் கூடி நின்று இளைஞர்களின் எழுச்சி மிகு அணிவகுப்பை கண்டுகளித்தனர். .

போலீசார் தள்ளுமுள்ளு:

பேரணியில் தனியார் பள்ளிகளில் கட்ட ணத்தை நிர்ணயித்த கோவிந்தராசன் கமிட்டி யின் பரிந்துரைகள் அமலாக்கப்படாததைக் கண்டித்து, ‘கோவிந்தராசன் கமிட்டியை விமர் சித்து உருவபொம்மைகளை இளைஞர்கள் ஏந்தி வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் வாலிபர் சங்க தலைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து வாலிபர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து காவல்துறையினர் ஆளும்கட்சியின் ஏவ லாளாக மாறி பேரணியில் குளறுபடி செய்ய முயன்றனர். ஆனால் வாலிபர் சங்க தலைவர்கள் இளைஞர்களை அமைதிபடுத்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். காவல்துறையினர் இடையூறுகளுக்கு மத்தியிலும் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் உருவப்பொம்மைகளை ஏந்திச் சென்றனர்.

We Fight For Jobs For All, Education For All And Empowerment Of Youth


DYFI was formed on 3rd November 1980 from it's inaugural conference held at Saheed Kartar Singh Saraba Village, Ludhiana, Punjab from 31st October to 3rd November.
DYFI stands for Communal harmony.Constitutional approval of right to job.

DYFI demands Job for all.

Education for all.

Industrialisation.
Proper implementation of self employment projects.

DYFI opposes

Anti-democracy and sectarian movements.

Anti-people economic policies guided by IMF-WB-WTO.

Imperialist aggression over third war.

DYFI fights for

Scientific socialism.

To identify the various problems concerning youth and to take proper and timely decisions and measures to resolve them.

To organise the youth from all progressive and democratic sections of the people under the banner of the DYFI and to make special efforts to draw and encourage the active participation of young women.

To organise and conduct the struggle against the menace of unemployment and to fight for employment or un-employment relief till employment. To conduct propaganda and agitation for the inclusion of the right to work in the list of fundamental rights of the Indian Constitution.

To take up and highlight the issues and problems concerning the youth, especially in the field of education, culture and sports. To organise cultural and sports activities through clubs, gymnasiums, akharas, literary and cultural societies and to conduct debates discussions, seminars, symposia and cultural programs. To encourage youth participation in sports, literary and cultural activities by organising tournaments and competitions. To fight against all obscurantist ideas and decadent culture.

To conduct night schools and adult education camps, to fight against illiteracy and for the introduction of universal free and compulsory education upto the secondary stage.

To strive to unite all the secular and democratic forces against conservatism, casteism, communalism, separatism, parochialism and authoritarianism, and in defense of secularism, democracy and national integrity.

To initiate and conduct a sustained campaign against evils of untouchability, dowry system, child marriage, religious superstition, corruption in public life and other such evils that are plaguing our society.

To work for prompt and active participation in relief and rehabilitation programs during natural calamities, accidents and epidemics etc, and to mobilise and cooperate with all other youth organisations for relief and rehabilitation work.

To encourage youth to support and participate in all the democratic movements of the people: workers, peasants, middle classes, students and all other progressive and forward-looking strata of our country. To actively support the struggle against predatory foreign capital, Indian monopoly capital and the feudal and semifeudal landlordism, and for the nationalisation of all key industries and for carrying out radical land reforms, assuring land to the tiller.

To strive to establish fraternal contacts and cooperation with all the youth organisations of the world which subscribe to the anti-imperialist, anti-apartheid, national liberation and peace struggles, movements and their ideals.

To undertake and encourage the different State units of the DYFI for the publication of journals, leaflets pamphlets and other literature in order to further the aims, objectives and activities of the DYFI.

Thursday, September 23, 2010

கோவையில் வாலிபர் சங்க மாநாடு தியாகிகள் ஜோதி - கொடிப்பயணம் எழுச்சியோடு துவங்கியது

நாகர்கோவில், செப். 22 -

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டிற் கான ஜோதி மற்றும் கொடிப் பயணக்குழுக்கள் புறப்பட்டன.

இந்த பயணக் குழுக்க ளுக்கு, மாவட்டங்களில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 13-வது மாநாடு, செப்டம்பர் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதை யொட்டி, குமரி மாவட்டத்திலி ருந்து தியாகிகள் நினைவு ஜோதியும், கடலூரிலிருந்து தியாகிகள் குமார் - ஆனந்தன் நினைவு ஜோதியும், விழுப் புரத்திலிருந்து தோழர் சுரேஷ் நினைவாக கொடிப் பயணமும் தொடர் ஓட்டமாக மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குமார்-ஆனந்தன்

நினைவு ஜோதி

கடலூர் புதுப்பாளையம் பகு தியில் கள்ளச்சாராயம் விற் பதை எதிர்த்து போராடி, சாராய வியாபாரிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட தியாகி கள் குமார்- ஆனந்தன் ஆகி யோரின் நினைவாக, புதுப் பாளையத்தில் இருந்து ஜோதி புறப்பட்டது.

இந்த ஜோதிப் பயண துவக்க விழாவிற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமை வகித் தார். நகரத் தலைவர் ஆர்.மணி வண்ணன் வரவேற்றார். மாநி லத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஜோதியை எடுத்துக் கொடுக்க பயணக்குழுவின ரான -மாநில செயற்குழு உறுப் பினர் கே.ராஜேஷ் கண்ணன், ஜி.ஸ்டாலின், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கண்ணன் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டச் செயலா ளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயணக்குழு குள்ளஞ் சாவடி, குறிஞ்சிப்பாடி, புவன கிரி, கீரப்பாளையம், சிதம்பரம், அண்ணா மலைநகர் வழியாக நாகை மாவட்டத்தை அடைந் தது. பயணக்குழு செல்லும் வழிகளில், வாலிபர் சங்கத்தி னர் உற்சாக வரவேற்பு அளித் தனர்.

நினைவு ஜோதி

குமரி மாவட்டத்திலிருந்து செல்லும் தியாகிகள் நினைவு ஜோதி, அருமனையிலிருந்து செவ்வாயன்று காலையில் புறப்பட்டது. அருமனை சந்திப் பில் நடைபெற்ற ஜோதிப் பயண துவக்க நிகழ்ச்சிக்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் புஷ்பதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சசிகுமார், நிர்வாகி கள் ஜோயல், ஷாலினி, சுரேஷ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயணக்குழுவினரான மாநில நிர்வாகிகள் அலெக்ஸ், நரசிம்மன், கல்பனா, புவிராஜ், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவிடம், சங்கத்தின் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பி னரும், திருவட்டாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான லீமாறோஸ் ஜோதியை எடுத் துக் கொடுத்து, பயணத்தைத் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் ஜோதி தொடர் ஓட்டமாக புறப்பட்டு பல்வேறு பகுதிகள் வழியாக மாலையில் நாகர்கோவிலை வந்தடைந் தது. வழியில் மேல்புறம், குழித் துறை, வெட்டுவந்நி, மார்த் தாண்டம், இரவிபுதூர்கடை, சாமியார்மடம், தக்கலை, சுங் கான்கடை, பார்வதிபுரம், கிருஷ்ணன்கோயில் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு, மாதர், போக்குவரத்து தொழி லாளர், மாணவர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற பொதுக்கூட்டம், புதனன்று ஆரல்வாய்மொழி வழியாக நெல்லை மாவட்டத் தில் தொடர் ஓட்டமாக ஜோதிப் பயணம் நடைபெற்றது.

கொடிப்பயணம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்ச னைகளுக்காக போராடிய போது சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப் பட்ட தோழர் சுரேஷின் நினை வாக கொடிப் பயணம் விழுப் புரத்திலிருந்து புறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் வெண்பதாகையை முன்னாள் தலைவர் ஜி. ஆனந்தன் எடுத் துக் கொடுக்க, மாநிலச் செய லாளர் எஸ்.கண்ணன் பெற்றுக் கொண்டார்.

மாநில செயற்குழு உறுப் பினர்கள் ஜே. ராஜேஷ்கண் ணன், ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொரு ளாளர் எம். கோபால கிருஷ் ணன், நிர்வாகிகள் ஜானகி, எம். முத்துவேல், எஸ். சத்தியராஜ், ஜி. நாகராஜ், மாநில குழு உறுப் பினர் ஆர்.கண் ணப்பன் ஆகி யோர் பேசினர். முன்னதாக எஸ். மதுசூதனன் வரவேற்றார்.

powered by இந்தியா இன்டலெக்ட் © All Rights Reserved. தீக்கதிர் 2005-2006.

Tuesday, September 7, 2010

கண்டன ஆர்பாட்டம்

புதுச்சேரி செப் 2
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவரை தாக்கிய அரியாங்குப்பம் =காவல் நிலைய =காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க கிளை தலைவர் ராஜசேகரை அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் தலைமையிலான காவலர்கள் தாக்கியுள்ளனர். தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியு=றுத்தி அரியாங்குப்பம் நுழைவு வாயில் முன்பு இப்போரட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்திர்க்கு வாலிபர் சங்க நகரகமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,நகரகமிட்டி செயலாளர் கதிரவன்,சிபிஎம் நகரகமிட்டி உறுப்பினர் சிவசோலை,கிளை செயலாளர் =துரைமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.படம் உள்ளது

Sunday, September 5, 2010

புதுச்சேரி நிலைமை

புதுச்சேரி, 492 ச.கி.மீ பரப்பளவு கொண்ட மாநிலமாக உள்ளது. புதுச்சேரி ச.கி.மீ., (தமிழக பகுதி) காரைக்கால்-160 ச.கி.மீ., (தமிழக பகுதி), மாஹே, 9 ச.கி.மீ. (கேரளம்), ஏனம் 30 ச.கி.மீ (ஆந்திரா பகுதி) என நான்கு பகுதிகளில் மொத்தம் 9இ74இ345 பேர் வாழ்கின்றனர். இதில் ஆண்கள் 4இ86இ961 மற்றும் பெண்கள் 4இ87இ384 லட்சம் பேர் அதிலும் குறிப்பாக வேலை வாய்ப்பகத்தில் பதிந்து உள்ளவர்கள். 2010 ஆம் ஆண்டின் படி 2இ10இ000 ஆயிரம் பேர். இதனால் புதுவையில் வேலையின்மை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2005 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது, ஏராளமான இலவச திட்டங்களை முன் வைத்தது. குறிப்பாக, வேலையின்மையை போக்க தொழில் பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம், சுதேசி, பாரதி பஞ்சாலைகள் திறக்கப்படும் என்றும், இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மக்களிடம் கூறினார்கள். அவற்றை ஏற்காத புதுச்சேரி வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிபெரும்பான்மையாக தீர்ப்பு கூறினார்கள். அதன் பின்னர் தி.மு.க., பா.ம.க, சுயேச்சைகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து திரு.N.ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் விரோத கொள்கையே மிக வேகமாக அமுல்படுத்தியது. அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தது. இத்திட்டம் சரிவர நடத்த முடியாத நிலைமை ஏற்ப்பட்டது. அதன் பின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் இலவச அரிசி என்று மாற்றம் செய்து கொண்டார்கள். மேலும், வேலையில்லா கால நிவாரணத்திட்டம் உருவாக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து 20,000 விண்ணப்பங்கள் இளைஞர்களுக்கு வினியோகம் செய்தது. அதில் கடுமையான நிபந்தனைகள் காரணமாக இந்தநாள் வரை இளைஞர்கள் பயன்பெற முடியவில்லை. 3 ஆண்டுகள் கடந்த சூழலில் காங்கிரஸ் ஆட்சிக்குள் பதவி சண்டை எற்பட்டு திரு.N.ரங்கசாமி அவர்களை முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு திரு.ஏ.வைத்திலிங்கம் புதிய முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் கால கட்டத்தில் இன்னும் வேகமாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கு தீணி போடு வேலையை காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு வருகிறது. கல்வி பிரச்சனையில் தனியார் பள்ளி கல்லூரிகளை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு 132 கோடி செலவு செய்தும் இன்றைக்கு துவங்கப்படவில்லை. தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் விடும் ஆட்சியாளர்கள் அரசு துறைகளில் காலி பணியிடம் கொல்லைபுறமாக நிரப்பி வருகின்றனர். படித்த பட்டதாரிகளை பழிவாங்கும் நோக்கில் ஒப்பந்த ஆசிரியர்களாக குறைந்த சம்பளம், பணி பாதுகாப்பு இன்றி வேலை வழங்கும் கொள்கையை திணிக்கிறது. வேலையின்மை பிரச்சனை புதுச்சேரியில் மிகப்பெரிய சமூக குற்றமான வெடிகுண்டு கலாச்சாரத்தை ஊட்டி வளர்த்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் அளவில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இரண்டு லட்சத்து பத்தாயிரம் இளைஞர்;களுக்கு, வாய்கரிசி போடும் காங்கிரஸ் அரசின் கொள்கையை எதிர்த்துதான் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது போராட்டம் இருந்துள்ளது. இவற்றை விவாதித்து எதிர்காலத்தில் வேலையின்மைக்கு எதிராக நமது போராட்டத்தை தீவிரமாக திட்டமிட வேண்டியுள்ளது.

தேசிய நிலைமை

நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளில் 50 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. வேலையின்மையும், வறுமையும் மிகப்பெரும் சாபக்கேடாக இன்றும் தொடர்கிறது. நாட்டில் 77 கோடி மக்கள் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே வருவாய் பெறும் நிலையில் உள்ளனர். சரிபாதிக்கும் மேலான இந்தியப் பெண்கள் இரத்த சோகையாலும், 3வயதுக்கு உட்பட்ட 40மூ குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள். சுகாதாரமும், கல்வியும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் தான். 63 ஆண்டுகளுக்குப் பிறகு தான் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச்கல்வி என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. இது எப்போது முழுமைபெறும் என்பது கேள்விக்குறியே.

மத்தியில் தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியதிகாரத்தில் உள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தக் காலத்தில் மிகப்பெரும் வசதிபடைத்தவர்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் ஆதரவான தாராளமயக், தனியார்மயக் கொள்கைகளை அமுல்படுத்தியே வந்துள்ளது. இதனால் கடந்த நிதியாண்டு மட்டும் மிகப்பெறும் செல்வந்தர்களுக்கு 80இ000ஃ- கோடி ரூபாய் வரிச்சலுகையாக-மானியமாக வழங்கியுள்ளது. மறுபுறத்தில் ஏழைகளுக்கு வரி உயர்வும், மானிய வெட்டும் பெரும் சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளது. எப்போதுமில்லாத விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொதுவினியோகத்திட்டத்திற்கான மானியம் ரூ.4000ஃ- கோடி வெட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்துகிற உரத்தின் விலை உயர்த்தப்பட்டதுடன், உரமானியமும் வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. மூடியுள்ள பொதுத்துறை உர நிறுவனங்களை திறக்க நடவடிக்கை இல்லை. இத்தகைய தவறான கொள்கையாலும், வறட்சியாலும் உணவு தானிய உற்பத்தியில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. உணவு பெறும் உரிமை கேள்விக்குறியாகிவிட்டது.

மத்திய அரசின் விலைவாசி கொள்கைக்கு எதிராக இடதுசாரிகள் நடத்திய ஏப்ரல்-8 சிறை நிரப்பும் போராட்டத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இடது சாரிகட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து நடத்திய ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் மக்கள் பங்கேற்போடு வெற்றிகரமாக நடந்தது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் வரவு செலவு அறிக்கை மீது கொண்டுவரப்பட்ட வெட்டுத்தீர்மானத்தை காங்கிரஸ் அரசு கேவலமான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியை பாதுகாத்துக்கொண்டது. என்றாலும் ஓராண்டு ஆட்சி முடிதவற்குள்ளாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை கணக்கிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.


2வது ஐ.மு.கூட்டணி அரசு அணுசக்தி விபத்து பொறுப்பு மசோதா, அந்நியப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் மசோதா-இந்திய விவசாயத்தை சீரழிக்கும் ஆசியான் ஒப்பந்தம், மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு-மத்திய புலனாய்வுக்கழகத்தை தவறாக பயன்படுத்துவது, பொதுத்துறை பங்குகளை விற்பது, வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் - முறைகேடு என மக்கள் விரோத ஆட்சியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க வும் இத்தகைய கொள்கைக்கு பல்லக்கு தூக்கி பவணி வருகிறது. திசையில்லாமல் செல்லும் படகைப்போல காங்கிரஸ் ஆட்சி தறிகெட்டு செல்கிறது. இந்தப் பதையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசும் பயணித்துக்கொண்டிருக்கிறது.