Friday, January 30, 2015

மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதிமொழி

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான வெள்ளிக்கிழமை ஜன.30ல் புதுச்சேரியில் கடற்கரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தினர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ள இந்தியாவை மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.



Thursday, January 29, 2015

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி,ஜன.27-

பெங்கல் மற்றும் குடியரசு தினவிளையாட்டு போட்டி பரிசலிப்பு விழா அசோக்நகரில் நடைபெற்றது.

இலாஸ்பேட் அசோக்நகரில் நான்காம் ஆண்டு நடைபெற்ற இவ்விழாவிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார்.குழந்தைகள் நலபாதுகாப்புகுழு தலைவர் டாக்டர் வித்யாராம்குமார்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன், முன்னால் செயலாளர் லெனின்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இவ்விழாவில் இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து , கிளை நிர்வாகிகள் வெங்கடேஷ்,  விக்னேஷ், நிர்மல், நிஷாந்த் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக திண்டுக்கல் ஜீவா கலைக்குழுவின் தேவர் நடன கிராமிய நிகழ்ச்சியும் ,சிறுவர் சிறுமியர்கள் நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது.

சாமிப்பிள்ளைத்தோட்டம்

சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் நடைபெற்ற குடியரசுதின விளையாட்டு பரிசலிப்பு நிகழ்ச்சிக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை நகர தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன், முன்னால் செயலாளர் லெனின்துரை, சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் நடராஜன், மாதர் சங்க செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

Thursday, January 22, 2015

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி,ஜன.22-
வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பாகூரில் நடைபெற்றது.

 
பாகூர் குருவிநத்தத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குருவிநத்தம் கிளை தலைவர் செப்பரிதி தலைமை தாங்கினார்.முன்னதாக நடத்தப்பட்ட 28வகையான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,முன்னாள் பிரதேச செயலாளர் த.தமிழ்ச்செல்வன்,கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினார்கள்.இவ்விழாவில் வேர்களுக்கு விழுதுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. வாலிபர் சங்க நிர்வாகிகள் நெல்சன், சுகதேவ், சுந்தரய்யா,அருள்ஜோதி,செல்வா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

கரையாம்பத்துர்
கரையாம்பத்துரில் நடைப்பெற்ற பரிசளிப்புவிழாவிற்கு கிளைத்தலைவர் உத்தரவேலு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக டிஒய்எப்ஜ பிரதேச தலைவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.

Thursday, January 1, 2015

புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக புதுச்சேரியில் வாலிபர்கள் உறுதியேற்றனர்.


புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக புதுச்சேரியில் வாலிபர்கள் உறுதியேற்றனர்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முத்தியாள்பேட்டை விஓசி நகர் கிளைசார்பில் புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகச்சிக்கு வாலிபர் சங்க கிளை செயலாளர் நவீன் தலைமை தாங்கினார்.பிரதேச தலைவர் ஆர்.சரவணன் வாழ்த்தி பேசினார்.நிர்வாகிகள் நாகமுத்து,அருண்,பிரபாகரன்,சந்துரு, மணிகண்டன், ஆனந்து, சூர்யா, தினேஷ், அரிஸ், பிரேம், அணில், ஜனா,ராகவன், அருண், சரன், சந்தோஷ், வினோத், குரு, ராகுல், கணேசன், யஷ்வந்த்,சுதன் உள்பட திரளான வாலிபர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.பின்பு புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் பள்ளி குழந்தைகளுக்கு மெழுகு வத்தி ஏந்தி அஞ்சலி

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் பள்ளி குழந்தைகளுக்கு மெழுகு வத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் கூட்டம் புதுச்சேரி பெத்திசெட்டிப்பேட்டையில் நடைபெற்றது. சிபிஎம் உழவர்கரை நகரச் செயலாளர் நடராஜன், வாலிபர் சங்க பிரதேச தலைவர் சரவணன்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்தியா, சிபிஎம் கிளைச் செயலாளர் ராமசாமி,சிஐடியு உடல் உழைப்போர் சங்க பொருளாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 130க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

புதுச்சேரி,டிச.17

பாகிஸ்தானில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 130க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே புதனன்று மாலை நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து த லைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆசிரியர் சந்திரா,செயலாளர் சத்தியா,ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,எல்ஐசி முகவர் சங்கம்,இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திரளானோர் பங்கேற்று மெழுகு வத்தி ஏந்தி உயிரிழந்த மாணவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.