Wednesday, November 16, 2011

மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்


புதுச்சேரி நவ-14
மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஒய்எப்ஜ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே பகுதிகுழு வின் செயலாளர் கே.பி.நௌஷாத்,பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
மாஹே மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு முதலில் ரூ.25கோடி ஒதுக்கப்பட்டது பின்னர் கட்டுமான பணிக்காக கூடுதலாக ரூ.75கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதேப்போல் மாஹே உள்விளையாட்டு அரங்கம் ரூ.19கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டு இதுநாள்வரை பூட்டப்பட்டுள்ளது.அதேப்போல் கேரள விருந்தினர் மாளிகைக்கு ஆற்று மேல் மேம்பாளம் கட்டியதிலும்,மாஹே ஆற்றையொட்டி உள்ள சுற்றுலாதுறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை தனியார் மதுபான கடைக்கு வாடகை விட்டதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. கடந்த மூன்று முறை மாஹே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு காங்கிர° அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொருப்பு வகித்த வல்சராஜ் ,மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல் செய்து அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.எனவே முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது புதுச்சேரி முதல்வர் சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாஹேவில் உள்ள பாப்°கே நிறுவனம் கேரளாவில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் மூலம் விவசாய பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வதை போல் புதுச்சேரியிலும் அத்தகைய நிலையை அரசு கடைபிடிக்க வேண்டும்.மாஹே கல்லுhரிகளில் கேரளா மாணவர்கள் சிறமமின்றி படிக்க முடிந்தது.அதேப்போல் மாஹே மாணவர்களும் கேரளாவில் படித்தார்கள்.தற்போது மாஹேவில் கேரளா மாணவர்கள் படிக்க தடைவிதித்துள்ளதால் உயர் படிப்புக்கு கேரளா சென்று மாஹே மாணவர்கள் படிக்க முடியவில்லை எனவே பழைய முறையை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.மாஹே ஆயுர்வேதா மருத்துவகல்லுhரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி போது மான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
பேட்டியின் போது மாஹே பகுதிகுழு நிர்வாகிகள் ஸ்ரீகாந்த்,வினெய்குமார்,பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ்,சரவணன்,SFI பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Wednesday, November 9, 2011

நீதி விசாரணை நடத்த வேண்டும்


புதுச்சேரி நவ-1
பள்ளி பேருந்து கவிழ்ந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த பாகூர் கடுகனூரில் பள்ளி மாணவர்கள் சென்ற ஒரு ரூhபய் கட்டண பேருந்து கவிழ்ந்ததில் மணப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஹேமலதா (12) சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பிள்ளனர்.பாகூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பேரூந்தில் ஏற்றிசெல்வதற்கு ஏழு பேருந்துகள் அவ்வழிதடங்களில் இயக்க வேண்டும்.ஆனால் சம்பவத்தன்று நான்கு பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட்டதால் கரையாம்பத்துhர்,கடுகனுhர்,குருவிநத்தத்தை சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்ததின் விளைவாக பேருந்து கடுகனூரில் வயல்வேளியில் கவிழ்ந்தது.
மருத்துவனையில் ஆருதல்
பேருந்து கவிழ்ந்ததில் காயம் அடைந்த மாணவர்கள் கடலுhர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நடந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரனை நடத்த வேண்டும்.இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை =எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லததை கண்டித்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர செயலாளர் என்.பிரபுராஜ் ஆகியோர் தலைமையில் திரளானோர் சென்று மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.
2 லட்சம் இழப்பீடு
இறந்த மாணவி ஹேமலதா குடும்பத்திற்கு முதல்வர் என்.ரங்கசாமி ரூ.2லட்சம் இழப்பீட்டு தொகை அரசு சார்பில் வழங்கபடும் என்று அறிவித்தார்.அதேப்போல் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயரமும் வழங்கபடும் என்று ம் சாதாரணம் காயங்கள் ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.5ஆயிரமும் வழங்க படும்.விபத்து குறித்த நீதி விசாரணை நடத்த படும்.அதேப்போல் வருங்களத்தில் விபத்து நடக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.