Sunday, February 12, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்ககோரி


புதுச்சேரி,பிப்-12
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

டீசம்பர் 30 ஆம்தேதி புதுச்சேரியை தாக்கிய தானே புயலால் மக்கள் தங்களது குடிசை வீடுகளையும்,ஓட்டு வீடுகளையும் இழந்தனர். விவசாயிகள் மீனவர்கள் தங்களது நிலங்களையும்,படகுகளையும் இழந்தனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்கமால் காலங்கடத்தி வருவதை கண்டித்தும்.மாநில அரசு கோரிய நிவாரணத்தொகை 2500கோடியை மத்திய அரசு உடனே வழங்ககோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி; அரியாங்குப்பத்தில் நடந்த ஆர்ப்;பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகரகமிட்டி செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.சிபிஎம் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்,டிஒய்எப்ஜ பிரதேச துணைத்தலைவர் சரவணன்,உழவர்கரை செயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,முன்னால் நிர்வாகி துரைமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.

Thursday, February 9, 2012

ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி மாகேவில் நடைபெற்றது



புதுச்சேரி,பிப்-4
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார்பில் ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி மாகேவில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி பொதுக்கூட்டம் மாகே முனிசி;பலிட்டி மைதானத்தில் நடைபெற்றது.இப்பொதுகூட்டத்திற்கு டிஒய்எப்ஐ மாகே செயலாளர் நவுசாத் தலைமை தாங்கினார்.தலைச்சேரி செயலாளர் விகேஷ் முன்னிலை வகித்தார்.முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.குஞ்சுராம்,வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்,துணைத்தலைவர் சரவணன்,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக தலைச்சேரி பகுதியில் இருந்து மாகே வரை 500க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.