Thursday, August 29, 2013

புதுச்சேரியில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள்-வாலிபர்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


புதுச்சேரி,ஆக-28
 புதுச்சேரியில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து  பெண்கள்  கருப்பு கொடியுடன்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் ,கிழக்கு கடற்கரைசாலையில் புதியதாக மதுபான கடை திறப்பதை உடனே கைவிடவேண்டும்.கடைதிறப்பதற்கு உரிமம் அளித்த புதுச்சேரி கலால்துறை திரும்பபெற வேண்டும்.நீண்ட காலமாக கழிவரை இல்லாத சாமிப்பிள்ளை தோட்டம் மக்களுக்கு கழிவரை கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.

சாமிப்பிள்ளை தோட்டம் ஈசிஆர் சாலையில் நடைபெற்ற  இப்போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் ஜெயலச்சுமி,ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை கமிட்டி செயலாளர் முரளி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் சரவணன்,துணை தலைவர் பாஸ்கர்,மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான அப்பகுதி பெண்களும்,வாலிபர்களும்,பெரியவர்களும் பங்கேற்றனர்.முன்னதாக மதுபான கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு கொடியுடன்  பெண்கள் முழக்கமிட்டனர்.

Tuesday, August 6, 2013

காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி சட்டகல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு.

புதுச்சேரி,ஆக-5
காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி சட்டகல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு.

இந்தியா மாணவர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் புதுச்சேரி சட்டகல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவருமாகிய அறிவழகன் சம்பவத்தன்று மாணவர் சங்க மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும போது அங்கு வந்த விழப்புரம் மாவட்ட போக்குவரத்துறை உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தகாத வார்த்தையால் திட்டியதோடும், சட்டக்கல்லூரி மாணவர் என்று சொல்லியும் அடிக்க முற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் திங்களன்று (ஆக-5) புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.
இப்போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவர்களான இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.முன்னதாக சட்டக்கல்லூ மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்தோடு விழுப்புரம் மாவட்டகாவல்துறை உதவி ஆய்வாளர் மீது துறைச்சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு காலாப்பட்டு கல்லூரி முன்பு முழுக்கமிட்டனர்.மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்கண்கானிப்பாளர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் புகார் கடிதமும் அனுப்பியுள்ளனர்.

சேது சமூத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாராளுமன்ற சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

புதுச்சேரி,ஆக-4

சேது சமூத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாராளுமன்ற சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழகம் ,புதுச்சேரி கடலோர மாவட்டங்களின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் சேது சமூத்திர கால்வாய் திட்டத்தை உடணடியாக நிறைவேற்றித்தரக்கோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கங்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி டில்லி பாராளுமன்ற சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் ஆட்டோ மூலம் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.நகரகமிட்டி இணை செயலாளர் பிரதாப்,பிரதேச துணை தலைவர் பாஸ்கர்,உழவர்கரை கமிட்டி நிர்வாகி யோகராஜ்,சுந்தர், மணிகண்டன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.அண்ணாசிலை எதிரே துவங்கிய பிரச்சாரம் ,முத்தியாள்பேட்டை,சோலைநகர்,வைத்திகுப்பம்,மொட்டைதோப்பு உள்ளிட்ட பகுதிகளில்
நடைபெற்றது.