Saturday, January 21, 2012

இந்திய ஐனநாயவாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழர் புதுச்சேரியில் நடைபெற்றது



புதுச்சேரி,ஐன-17
இந்திய ஐனநாயவாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழர் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை அசோக்நகர் பாரதியார்சாலையில் நடந்த இரண்டாம் ஆண்டு பொங்கல் விiளாட்டு போட்டி பரிசளிப்பு விழாவிற்கு எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஐ;,சென்னை உயர்நீதிமன்ற வழகறிஞர் ஸ்டாலின், டிஒய்எப்ஐ நகரகமிட்டி தலைவர் சரவணன்,உழவர்கரைநகர செயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க தலைவர் அரிகரன்,துணைதலைவர் ரஞ்சித்,மாதர் சங்க செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.
கோலப்போட்டி,ஓட்டபந்தயம்,ஓவீயபோட்டி,உறிஅடித்தல்போட்டி,சைக்கிள்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.வாலிபர்சங்க கிளையை சேர்ந்த நிர்வாகிகள் பாலாஜி,ரோகன்,ராம்கோபல் உள்ளிட்ட திரளானொர் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக தேனி சங்கமம் குழுவினரின் தப்பாட்டம்,சிலம்பாட்டம்,ஒயிலாட்டமும் நடைபெற்றது.

Thursday, January 12, 2012

பத்திரிக்கை செய்தி - புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர்


புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. மீனவர்கள் முழுமையாக அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏழைகள் குடிசைகளை இழந்துள்ளனர். மின்சாரம் முழுமையாக கிராமங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இயந்திரம் மிக மிக மெதுவாக நகர்கிறது, இது சரியல்ல. புதுச்சேரி அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் புதுச்சேரி மக்களை பாதுகாக்க தற்காலிகமாக தங்கும் இடம், இரவு நேரங்களில் மின்சாரம், சுத்தமான குடிநீர் வழங்கவும், உணவு ஏற்பாடு செய்யவும் அரசு இயந்திரங்களை முடிக்கிவிட வேண்டும்.

 அனைத்து ஊர்களில் நிவாரண குழு, மீட்பு பணி குழுவை அமர்த்த வேண்டும்.
 பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக பாதுகாக்கும் வகையில் நிவாரண பணிகளை மிக வேகமாக அமுல்படுத்த வேண்டும்.
 புதுச்சேரி அரசின் மனித வளம் குறைப்பாட்டை சரி செய்ய NCC/NSS மாணவர்களையும், வாலிபர்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்த
வேண்டும்.
 தன்னார்வம் உள்ள இளைஞர்களை அரசு அழைத்து மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
 புதுச்சேரியில் உள்ள மாணவர்கள், வாலிபர்கள் நமது புதுச்சேரியை பாதுகாக்க மீட்பு பணியில் தங்களை இணைத்துக் கொண்டு புதுச்சேரியை
மீண்டும் கட்ட வேண்டும் என்று வாலிபர் சங்கம் மிக தாழ்மையுடன் கேட்க்கொள்கிறது.

இப்படிக்கு



(த.தமிழ்செல்வன்)
பிரதேச செயலாளர்
DYFI