Friday, June 1, 2012

புதுச்சேரி,மே-24
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்துள்ள பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் வாலிபர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நான்காம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மக்களுக்கு கொடுத்துள்ள பரிசாக  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50பைசா உயர்த்தியதை கண்டிக்கும் வகையில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் புதனன்று புதுச்சேரி சட்டமன்றம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு இனிப்பு மிட்டாய் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.மத்திய அரசின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு நடந்த நிகழ்சிக்கு டிஒய்எப்ஐ நகரகமிட்டி செயலாளர் சாரதி தலைமை தாங்கினார்.பிரதேச தலைவர் சந்துரு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.பிரதேச பொருளாளர் இரா.சரவணன்,உழவர்கரை தலைவர் பாஸ்கர்,முன்னாள் பொருளாளர் பிரபுராஜ்,மற்றும் அன்துவான்,எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இந்த நுhதன நிகழ்சியில் பங்கேற்றனர்.இனிப்பை பெற்றுகொண்ட அணைவரும் தங்கள் எதிர்ப்பை மத்திய காங்கிரஸ் அரசு மீது பதிவு செய்தது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

மாணவர்கள் மர்மச்சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி

புதுச்சேரி,மே-21
மணக்குள விநாயகர் மருத்துவகல்லுhரி நடந்து வரும் மாணவர்கள் மர்மச்சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர் வாலிபர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள  மணக்குள விநாயகர் மருத்துவகல்லுhரியில் இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் குற்றங்களை விசாரிக்க நீதிபதி தலைமையிலான தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.இறந்த மாணவியின் குடும்பத்தாரிடம் வசூலித்த நன்கொடை ரூ30லட்சத்தை கல்லுhரி நிர்வாகம் திரும்ப கொடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் ஹரிஹரன் வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் கூட்டாக தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,பிரதேச செயலாளர் பி.சரவணன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பாஸ்கர்,தட்சணாமூர்த்தி ,அரிதாஸ்,விஜி உள்ளிட்ட திரளான  வாலிபர்கள்,மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.