Thursday, January 31, 2013

இலாஸ்பேட்டை குறவர்பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதரக்கோரி

புதுச்சேரி,ஜன-30
இலாஸ்பேட்டை  குறவர்பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதரக்கோரி டிஒய்எப்ஐ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
புதுச்சேரி இலாஸ்பேட்டை விமான நிலையம் பின்புள்ள குறவர்பேட்டையில் தெருமின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.குடியிருப்புகளில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.மாதம் ஒரு முறை குறவர் இன மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  தமிழ்மாநில செயற்குழு  உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ், பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன்,நகர தலைவர் அழகப்பன் ஆகியோர் சாரத்தில் உள்ள மாவட்ட துணை ஆட்சியர் வின்சென்ட்ராயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட துணைஆட்சியர் சங்கநிர்வாகிகளிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

கல்லூரி மாணவியை கட்டாய பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயன்றவர்களை கைது செய்யக்கோரி

புதுச்சேரி,ஜன-30
கல்லூரி மாணவியை கட்டாய பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயன்றவர்களை கைது செய்யக்கோரி மாணவர் வாலிபர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி சூர்யா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) இவர் புதுச்சேரி அடுத்து பாகூரில் உள்ள ஆல்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்கும் சூர்யாவை, விடுதி வார்டனாக உள்ள சந்திரா என்பவர் கட்டயா பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கைஎடுக்காத நிர்வாகம் வாடன் சந்திராவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் மாணவியின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் அடியாட்கள் வைத்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பாகூரி காவல்நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.இப்புகார் மீது நடவடிக்கை எடுககாத காவல்துறையை கண்டித்தும்,குற்றவாலிகளை உடனே கைது செய்யக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்க பிரதேச செயலாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,நிர்வாகிகள்,ரஞ்சித், வழக்கறிஞர் தட்சணாமூர்த்தி,கதிரவன்,பா°கர்,விஜி,அழகப்பன்,சண்முகம் உள்ளிட்ட திரளான வாலிபர்கள்,மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Wednesday, January 23, 2013

தேசிய ஜூனியர் வளுதுhக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழி அனுப்பும் விழா

புதுச்சேரி,ஜன-22
தேசிய ஜூனியர் வளுதுhக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழி
அனுப்பும் விழா புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில வளு துhக்கும் சங்கத்தின் வீரர்கள் பங்கேற்கும் தேசிய
ஜூனியர் வளுதுhக்கும் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில்
அமராவதி நகரில் ஜனவரி 25 முதல் 30 வரை நடைபெறுகிறது.அனைத்து
மாநிலங்களிலிருந்தும் வளு துhக்கும் வீரர்கள் இப்போட்டியில்
பங்கேற்கின்றனர்.சர்வதேச போட்டியில் தங்கபதக்கம் வென்ற வீரங்கனைகள்
டி.சுகந்தி,சூர்ய பிரபா,தேசிய பதக்கம் பெற்ற என்.முருகவல்லி,தேசிய போட்டி
பதக்கவீரர் எஸ்.லிங்கேசன் வேலு( எ)மது உள்ளிட்ட புதுச்சேரியில் இருந்து
27பேர் கொண்ட அணியினர்  இப்போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
வழி அனுப்பு விழா
இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழி அனுப்பும் விழா புதுச்சேரி
ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச
பொருளாளர் ஆர்.சரவணன்,முன்னால் விளையாட்டுத்துறை துணை இயக்குனர்
ஜி.குணசேகரன் ஆகியோர் வீரர்களை பாராட்டி  வழி அனுப்பி வைத்தனர்.

Sunday, January 20, 2013

வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி பிரதேசம் அளவி லான கைப்பந்து போட்டி


வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கைப்பந்து போட்டி
புதுச்சேரி, ஜன. 19-வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி பிரதேசம் அளவி லான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டையில் நடைபெற் றது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை கமிட்டி சார்பில் வருகிற குடியரசு தினத்தன்று 22வது குடி யரசு தின கலைவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறு கிறது. இவ்விழா முன்னிட்டும் மறைந்த முன்னாள் உழவர் கரை மேயர் நாராயணசாமியின் 100 வது ஆண்டை யொட்டி விளையாட்டு வீரர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி யில் சிபிஎம் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை பங்கேற்று விளையாட்டு வீரர்களை கைகுலுக்கி போட்டியை தொடக்கி வைத்தார். டிஒய் எப்ஐ பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன், உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் அக்கீம், முரளி, எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து, துணைத்தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.இப்போட்டியில் வெற்றிபெரும் வீரர்களுக்கு 26ஆம் தேதி சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் நடைபெறும் விழா வில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Saturday, January 19, 2013

சோலை நகர் சமூதாய நலக்கூடத்தை உடனே திறக்க கோரி

புதுச்சேரி,ஜன-18
சோலை நகர் சமூதாய நலக்கூடத்தை உடனே திறக்க கோரி  தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சோலைநகர் சமூதாய நலக்கூடம் ரூ.70லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகி இன்னும் திறக்கவில்லை.இதனால் மக்கள் தங்களின் சுபநிகழ்சிகளை  தனியாருக்கு சொந்தமான கல்யாண நிலையத்தில் அதிக பணம் கொடுத்தும் நடத்த வேண்டிய நிலை உள்ளது.எனவே இக்கோரிக்கையை முன்வைத்தும் உடனடியாக சமூதாய நலக்கூடத்தை திறக்ககோரி  இப்போராட்டம் நடைபெற்றது.
சமூதாய நலக்கூடம் எதிரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர கமிட்டி பொருளாளர் விஜி தலைமை தாங்கினார்.சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர்,தட்சணாமூர்த்தி,கதிரவன் இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ,ஆட்டோ சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்று பேசிய வாலிபர் சங்க நிர்வாகிகள்  இன்னும் ஒரு மாதத்தில் சமூதாய நலக்கூடத்தை திறக்கவில்லை என்றால் அப்பகுதி மக்களை திரட்டி புதுச்சேரி நகராட்சி ஆனையரை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தனர்.

Saturday, January 12, 2013

பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை இயக்க கோரி

புதுச்சேரி,ஜன-12

பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை இயக்க கோரி மாணவர்கள் வாலிபர்கள் சார்பில் நுhதன போராட்டம் நடைபெற்றது.



புதுச்சேரி பாகூர் கொம்யூனில் உள்ள ஆரம்ப சுகாதாரா நிலையத்தில்  கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும்.ஆம்பலன்ஸ் ஓட்டுநர்,கடைநிலை ஊழியர்களை நியமிக்க வேண்டும்.உயிர்காக்கும் மருந்துகள்,பாம்புகடி,நாய்கடி மருந்துகளை இருப்பு வைத்து,24 மணிநேரமும் செயல்படக்கூடிய சமூதாய நலவழிமையமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி இப்போராட்டம் நடைபோராட்டம்.
பாகூர் ஆரம்ப சுகாதராநிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொம்யூன் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்க கொம்யூன் தலைவர் பிரவீன் முன்னிலை வகித்தார்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,கொம்யூன் பொருளாளர் தனிகா,மாணவர் சங்க கொம்யூன் செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நிர்வாகிகள் வீரப்பன்,செம்பரிதி,வீரமணி,இந்து,சந்திரசேகர்,அன்புநிருபன் உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்களை சேர்ந்த திரளானோர இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக வாலிபர்கள்,மாணவர்கள் தங்களது  உடல்களில் கட்டு கட்டும் துணியை   கட்டி கொண்டு இந்த நுhதன போராட்டத்தில் பங்கேற்றது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.

Friday, January 4, 2013

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

புதுச்சேரி,ஜன-4
வன்கொடுமைக்கு ஆளான  மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த பிளஸ்டு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்பட்டு  அரசு மகளிர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும், அவரது மறுவாழ்வுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரக்கோரி இந்தியமாணவர் சங்கம் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அiப்புகள்  வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் புதுச்சேரி அரசே ஏற்க வேண்டும்.இந்த வழக்கு விசாரணையை  சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.வன்கொடுமைக்கு ஆளான மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும்.அவரது உயர்படிப்புக்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.உச்சநீதிமன்ற வழிகாட்டுகினங்க அனைத்து கல்லுhரி மற்றும் பள்ளிகளிலும் பெண்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.விரைவு நீதிமன்றம் மூலமாக மாணவியின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திராகாந்தி அறிவியல் கலைக்கல்லுhரி,மோதிலால் நேரு மற்றும் மகளிர்  பாலிடெக்னிக்,சமுதாய கல்லுhரி,மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஐர் கல்லுhரி  உள்ளிட்ட கல்லுhரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.பின்னர் மாவட்ட பொருப்பு ஆட்சியர் சுந்தரவடிவேலுவை சந்திக்க அனைத்து மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திக்க முற்பட முயற்சித்தனர் அப்போது காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கோரிக்கை ஏற்பு
இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்,விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன்,டிஒய்எப்ஐ பொருளாளர் சரவணன் உள்ளிட்ட இதர ஜனநாய அமைப்புகளின் பிரநிதிகள் பாலா,சதீஸ்,பிரசன்னா,அன்துhவன் உள்ளிட்டோர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சுந்தரவடிவேலுவை சந்தித்து பாதிக்கப்ட்ட மாணவிக்கு மேற்கொண்ட கோரிக்ககை வலியுறுத்தினர்.இதனை ஏற்றுகொண்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.இதனை தொடர்ந்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
இவ்வழக்கு சிஐடிக்கு மாற்றம்
மாணவிக்கு அனைத்து மருத்துவ செலவுகளையும்,மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.  இவ்வழக்கை விசாரிக்க குற்றபுலனாய்வு துறைக்கு (சிஐடி) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.மேலும் புகாரை பதிவு செய்ய மருத்த திருபுவனை,வில்லியனூர் அனைத்து மகளிர் காவல்நிலை ஆய்வாளர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறுப்பு ஆட்சியர் சுந்தரவடிவேலு  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாபெரும் கையெழுத்து இயக்கம்



பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்ககோரியும்,குற்றவாலிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான சட்டங்கங்களை கொண்டுவரக்கோரியும்,போதைக்கு எதிராகவும் புதுச்சேரி கடற்கரையில் மாதர் சங்கம்,வாலிபர் சங்கம்,மாணவர் சங்கம் ஆகியோர் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.இக்கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் துவக்கி வைத்தார்.அருகில் சங்க நிர்வாகிகள் சுமதி,ப.சரவணன்,தமிழ்ச்செல்வன்,ஆர்.சரவணன்,ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

Fund collection for Vinothini Medical expenses

Thursday, January 3, 2013

புதுச்சேரியில் மணித சங்கிலி இயக்கம்

புதுச்சேரி,ஜன-3
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்ககோரி புதுச்சேரியில் மணித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெருகிவரும் பெண்களுக்கு எதிரான வன்செயல்களை கண்டித்தும்,குற்றவாலிகளை உடணடியாக விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க கோரியும் ,புதுச்சேரியில் மகளிர் ஆணையத்தை செயல்படுத்த கோரியும் இவ்வியக்கம்  நடைபெற்றது.

கடற்கரை காந்தி சிலை எதிரே நடைபெற்ற மணிதசங்கிலி இயக்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவர் சுமதி தலைமை தாங்கினார்.செயலாளர் மாரிமுத்து,மலர்விழி,

டிஒய்எப்ஐ நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன்,ப.சரவணன்,ஆர்.சரவணன்,கதிரவன்,பாஸ்கர்,சண்முகம்,
Puducherry 03.01.2012
ஸ்எப்ஐ பிரதேச நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித்,தேவ்ஆனந்து,அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் புகழேந்தி,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,லிக்காய் சங்க கல்விக்குழு செயலாளர் ராம்ஜி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.



புதுச்சேரி,ஜன-2
ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்ம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புத்தாண்டு தினத்தில் புதுச்சேரி கடற்கரையில் மருத்துவ சிகிச்சைக்கு உண்டியல் மூலம் நிதிவசூல் செய்தனர். முதற்கட்டமாக வசூலித்த  ரூ.5ஆயிரத்தி 600  தொகையை  வினோதினியின் மருத்துவ செலவுக்கு அளிக்க உள்ளனர்.