Sunday, March 22, 2015

ஏ.எப்.டி , சுதேசி , பாரதி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.ஏ.எப்.டி , சுதேசி , பாரதி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்.சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு கழகம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்ளை உடணடியாக கைது செய்ய வேண்டும்.தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்.அரசு பள்ளிகளை பாதுகாத்து மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி, நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி, பொருளாளர் கதிரவன், நிர்வாகிகள் அரிதாஸ், பாஸ்கர் , மாதர் சங்க செயலாளர் சத்தியா, மாணவர் சங்க நிர்வாகி ஆனந்த் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக முன்னால் பிரதேச செயலாளர் த.தமிழ்ச்செல்வன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.