Saturday, November 30, 2013

பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட 4ஆசிரியர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,நவ.30-
பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட 4ஆசிரியர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அரசு பள்ளியில் கனினியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த  4ஆசிரியர்களை  பாலியல் வன்புனர்ச்சி சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய  வேண்டும். நான்கு ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் இருந்து  கல்வித்துறை நீக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம
நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித்துறை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்க பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.மாதர் சங்க பிரதேச துணைத்தலைவர் சுமதி,டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.மாதர் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து,சந்திரா,ஜெயலச்சுமி,வாலிபர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர்,அழகப்பன்,நாகமுத்து உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்தக்கோரி முழக்கமிட்டனர்.

கல்வித்துறை இடைநீக்கம்
இந்நிலையில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர்கள் நான்கு பேரையும் புதுச்சேரி கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிரபித்துள்ளது.இதற்கான உத்தரவை கல்வித்துறை பிரபித்துள்ளது.

Friday, November 22, 2013

புதுச்சேரி பஞ்சாலைகளை புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,நவ.22-
புதுச்சேரி பஞ்சாலைகளை புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஏஎப்டி,சுதேசி,பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளை நவீனபடுத்த ரூ.500கோடி நிதியை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும்.மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி பஞ்சாலையை உடனே திரக்க வேண்டும்.ஏ.எப்.டி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.பாரதி பஞ்சாலையின் டை பிரிவை மூடுவதை கைவிட வேண்டும்.புதுச்சேரி யில் ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கடலூர் சாலை ஏ.எப்.டி பஞ்சாலை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ப.சரவணன் முன்னிலை வகித்தார்.சிஐடியூ மாவட்ட செயலாளர் நிலவழகன்,துணைத்தலைவர் ராஜாங்கம்,விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர்,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.வாலிபர் சங்க நிர்வாகிகள் கதிரவன்,தட்சணாமூர்த்தி,கார்க்கி,சண்முகம்,பாஸ்கர்,அழகப்பன்,உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.