Thursday, March 28, 2013

புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வாலிபர் சங்க நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.



புதுச்சேரி,மார்ச்-26
புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வாலிபர் சங்க நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.


இந்தியஜனநாயக வாலிபர் சங்க 15வது நகரகமிட்டி மாநாடு முதலியார்பேட்டையில் நடைபெற்றது.இம்மாநாட்டை டிஒய்எப்ஐ பிரதேச இணைசெயலாளர் பாஸ்கர் துவக்கிவைத்து பேசினார்.பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,எல்ஐசி முகவர் சங்க கல்விக்குழு தலைவர் ஆர்.எம்.ராம்ஜி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இறுதியாக மாநாட்டை சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பிரபுராஜ் முடித்து வைத்து பேசினார்.இம்மாநாட்டில் நகரகமிட்டியின் புதிய தலைவராக எச்.விஜி(எ)இராமசாமி,செயலாளராக கே.அழகப்பன்,துணை தலைவர்களாக நாகமுத்து,முருகன்,துணை செயலாளர்களாக பிரதாப், எஸ்.கவுசல்யா,பொருளாளராக வினோத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,முத்தியால்பேட்டை சோலைநகர் கசாப்புகாரன் தோப்பில் வசிக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்ட வழங்கவேண்டும்.டி.பி தோட்டத்தில் சாலைவசதி ஏற்படுத்த வேண்டும்.வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதுச்சேரில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Tuesday, March 19, 2013

PUDUCHERRY STUDENTS STRUGGLE AT INCOME TAX DEPARTMENT

புதுச்சேரி,மார்ச்-19

புதுச்சேரியில் மாணவர்கள் வருமாணவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இலங்கை இனவாத அரசின் போர்க்குற்றங்கள் குறித்து உயர்மட்ட நம்பகத்தன்மையுள்ள சுயோச்சையான விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைக்க ஜநா மனித உரிமை ஆணையக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தவேண்டும்.தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி வருமாணவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைபோராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் அரிகரன் தலைமைதாங்கினார்.பிரதேச செயலாளர் ஆனந்து,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,நகரகமிட்டி தலைவர் அழகப்பன்,டி.பி.கிளைத்தோட்ட செயலாளர் நாகமுத்து,பொறியியல் கல்லூரி மாணவர் பிரபாகரன் உள்ளிட்ட திரளான கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் அண்ணாசாலை,நேருவீதி,காந்திவிதியை கடந்து வருமாணவரித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Saturday, March 9, 2013

இலாஸ்பேட்டை ஆரம்ப சுகாதரா நிலையதின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,மார்ச்-6

இலாஸ்பேட்டை ஆரம்ப சுகாதரா நிலையதின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  உழவர்கரை நகர கமிட்டி மாநாடு கமிட்டி தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பி.சரவணன் மாநாட்டை வாழ்த்தி பேசினார்.திரளான வாலிபர்கள் கலந்து கொண்ட மாநாட்டை பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் நிறைவு செய்து பேசினார். 

இம்மாநாட்டில் கமிட்டியின் புதிய தலைவராக அன்துவான்,செயலாளராக முரளி,பொருளாளராக சுந்தர் உள்ளிட்ட 7பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

பொய்யாகுலம்,சாமிப்பிள்ளை தோட்டம் ஆகி ய பகுதிகளில் பொதுகழிப்பிடம் அமைக்க வேண்டும்.லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதரநிலையத்தில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி 24மணிநேரமும் செயல்படக்கூடிய சுகாதாரமையமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Sunday, March 3, 2013

நரிகுறவர் பெண்ணை தடியால் தாக்கிய புதுச்சேரி காவலர் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.


புதுச்சேரி,மார்ச்-2

நரிகுறவர் பெண்ணை தடியால் தாக்கிய புதுச்சேரி காவலர் மீது   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.


புதுச்சேரி விமான நிலையம் பின்புறம் உள்ள குறவர் பேட்டையில் வசிப்பவர்
S.கார்த்திகா (வயது 22).புதுச்சேரி கடற்கரையில் தினமும் சிறுவர்களுக்கான
விளையாட்டு பொருட்கள் பலூன்,பந்து உள்ளிட்ட பொருட்களை விற்று வியாபாரம் செய்து வருகிறார்.கார்த்திகா தனது மூன்று குழந்தைகளுடன் கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே ஒரமாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளார்.அப்போது பெரிய கடைகாவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் இருவர் கார்த்திகா வை ஆபசமாக திட்டியதோடு தான் வைத்திருந்த தடியால் கார்த்திகாவின் பின்பக்க இடுப்பில்
ஓங்கி அடித்துள்ளார்.மீண்டும் அந்த காவலர் கார்த்திகாவை தடியால் ஓங்கி
அடிக்க முற்பட்ட போது அவரது கை மணிகட்டில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.நடந்த இச்சம்பவத்தை கேள்வி பட்ட டிஒய்எப்ஐ புதுச்சேரி பிரதேச பொருளாளர் இரா.சரவணன்,உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் பாஸ்கர் மற்றும் கமிட்டி உறுப்பினர் அருள் ஆகியோர்   பாதிக்கப்பட்ட கார்த்திகாவை அரசு மருத்துமனையில் அனுமதித்தார்.பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெரிய கடை காவல்நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்து சம்பந்த பட்ட காவலர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கவும்,கடற்கரையில் நரிகுறவர்கள் வியாபரம் செய்ய பாதுகாப்பு வழங்கவும்   வலியுறுத்தியுள்ளனர்.