Tuesday, December 28, 2010

ஊழலுக்கு எதிரான பிரச்சார இயக்கம்


புதுச்சேரி டிச 26
மத்திய காங்கிர° அரசும் கர்நாடக பாஜக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் இனைந்து ஊழலுக்கு எதிரான பிரச்சார இயக்கம் லா°பேட்டையில் நடைப்பெற்றது.
புதுச்சேரி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வேண்டும். நாவலர் நெடுஞ்செழியன் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். பள்ளி முதல்வரை நியமிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்தும் இப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
ஐய்யனார் கோவில் எதிரில் நடந்த தெரு முனைப்பிரச்சாரத்திர்க்கு வாலிபர் சங்க நிர்வாகி பா°கர், மாணவர் சங்க இணை செயலாளர் ரஞ்சித் கூட்டாக தலைமைத் தாங்கினார்கள். சிபிஎம் உழவர் கரை கமிட்டி செயலாளர் லெனின்துரை, வாலிபர்சங்க பிரதேசத் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,சாரதி ஆகியோர் பேசினார்கள். இப்பிரச்சாரத்தில் திரளான வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Friday, December 24, 2010

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்


நாவலர் நெடுஞ்செழியன் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். பள்ளி முதல்வரை நியமிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து மாணவர் சங்க இணை செயலாளர் ரஞ்சித் கூட்டாக தலைமைத் தாங்கினார்கள்

நூதனப் போராட்டம்



புதுச்சேரி டிச 24
உயர்ந்துள்ள வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்கு வங்கி மூலம் கடன் வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் நூதனப் போராட்டம் நடைப்பெற்றது.
வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டித்தும் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய , மாநில அரசுகளை கண்டித்தும், காய்கறிகளை வாங்க வங்கி மூலம் கடன் வழங்கக் கோரி மனுக்களுடன் போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பு நடந்த போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ நகர கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், முன்னால் தலைவர் லெனின் துரை, நிர்வாகிகள் பா°கர், ஆனந்து மற்றும் நடைப்பாதை வியபாரிகள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாலிபர் சங்க நிர்வாகிகள் வெங்காயம், கத்திரிக்காய், பீன்° உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு வங்கி மேலாளரை சந்தித்து கடன் கேட்டு மனு அளித்தனர். இந்த நூதன போராட்டம் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.
படம் உள்ளது.

Sunday, December 19, 2010

DYFI members arrested


Protest:Members of the Democratic Youth Federation of India staging a demonstration in front of the Taluk Office in Hosur on Thursday.

HOSUR: As many as 116 members including 40 women of Democratic Youth Federation of India (DYFI) were arrested in Hosur when they blocked the road in front of the Taluk Office on Thursday.

As part of the State-wide agitation against 2G Spectrum scam, irregularities in Common Wealth Games, Adharsh Housing schemes and other scams that were surfacing every day from different corners of the country, the DYFI members staged the demonstration and raised slogans against the Dravida Munnetra Kazhagam, the Bharatiya Janata Party and the Congress.

The members demanded that those involved in these scams should be arrested immediately.

Demands

Their other demands include implementation of the Urban Employment Guarantee Scheme, increase in working days and wages under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, establishment of 24-hour Primary Health Centres in all the panchayats with ambulance facilities and upgrading taluk and district headquarters hospitals to multi-specialty hospitals.

The members urged the Education Department to fill the vacancies in the Government Higher Secondary Schools in Denkanikottai, Hosur and Shoolagiri Panchayat Unions, introduce accountancy and auditing subjects in Plus-Two and withdraw collection of fees in Berigai Government Higher Secondary School.

The arrested cadre were released in the evening.

Source: http://www.hindu.com/2010/12/18/stories/2010121851810300.htm

Saturday, November 27, 2010

கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல் துறை உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி


புதுச்சேரி நவ 23
வாலிபர் சங்க தலைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல் துறை உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி டி ஜி பி அலுவலக்ததை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த டிஓய்எப்ஜ முடிவு.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் சந்துரு அவரது சகோதரர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராரில் போக்கு வரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முகம் தனது வாக்கிடாக்கியால் சந்துருவின் சகோதாரர் சரவணனை தலையில் தாக்கியுள்ளார். தாக்கி உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காவல்நிலையம் சென்ற சந்துரு சகோதரர்கள் சரவணன், சசிக்குமார் ஆகியோரை 20க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும் தாக்கிய உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும் சந்துரு மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற கோரி வாலிபர் சங்கமும், இந்திய மாணவர்சங்கம் சார்பில் காந்தி வீதியில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு டிஓய்எப்ஐ பிரதேச துணைதலைவர் சரவணன், மாணவர்சங்க தலைவர் அரிகரன் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், சிஐடியூ ஆட்டோ சங்க தலைவர் ராஜாங்கம், வாலிபர் சங்க மாநில இணை செயலாளர் லெனின், பிரதேச செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் அன்துவான், பார்வர்டு கட்சி செயலாளர் முத்து, ஆர்எஸ்பி கட்சி தலைவர் லெனின், விவசாய சங்க தலைவர் பத்மநாபன், மாணவர் சங்க செயலர் ஆனந்து ஆகியோர் கண்ட உரையாற்றினார்கள். போராட்டத்தில் பேசிய வாலிபர் சங்க தலைவர்கள் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல்துறை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையீட்டு போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்கள்.

Tuesday, November 9, 2010

கண்டன ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி நவ 9
வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் மீது கொலை வெறி தாக்குதல் உதவி ஆய்வாளரை கைது செய்ய கோரி டிஒய்எப்ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் சந்துரு இவரது சகோதரர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராரில் போக்கு வரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முகம் தலையீட்டு தனது ஓயர்லக்ஸ் கருவியால் சந்துருவின் தம்பி சரவணனை தலையில் அடித்துள்ளார். இதில் சரவணன் தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் சண்முகம் மீது புகார் கொடுக்க சந்துரு பெரிய கடை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது ஆய்வளளர் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட காவலர்கள் சந்துருவையும் அவரது சகோதரர்கள் சசிக்குமார், சரவணன் ஆகியோரை லத்தியாள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வலுகட்டாயமாக இழுத்துசென்று அங்கும் தாக்கியுள்ளனர். இதில் டிஓய்எப்ஐ பிரதேச தலைவர் சந்துருக்கு கை, மார்பு தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதே போல் அவரது சகோதரர்களுக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்த இச்சம்பவத்தை மறைக்க போக்குவரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முத்தை தாக்கியதாக உண்மைக்கு மாராக சந்துரு அவரது சகோதரர்கள் மீது கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்நடவடிக்கை கண்டித்தும் சந்துருவை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து துறை சார்ந்த விசாரனை நடத்த வேண்டும். வாலிபர் சங்க தலைவர் மீது போட ப்பட்ட பொய் வழக்கை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி நேரு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திர்க்கு டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள், டிஒய்எப்ஐ மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜி.ஆர் , முன்னால் பிரதேச தலைவர் லெனின்துரை, இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் அந்துவன், டிஒய்எப்ஐ பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
வாலிபர் சங்க பிரதேச நிர்வாகிகள் ஆர்.சரவணன், பி. சரவணன், அரிதாஸ், கதிரவன், தட்சணாமூர்த்தி, சண்முகம், பிரபாகரன், பாஸ்கர் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Thursday, October 28, 2010

சட்டமன்ற முற்றுகைபோராட்டம்


புதுச்சேரி அக் 27

புதுச்சேரி அரசு அறிவித்த வேலையில்லா காலநிவாரணத் தொகையை உடனே வழங்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.சமூககுற்றங்களை தடுக்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகாய்ச்சலை தடுக்க ஆரம்பசுகாதாரநிலையங்களில் நோய் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்ட்ம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த முற்றுகைக்கு வாலிபர் சங்க பிரதேச தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மத்திய கமிட்டி உறுப்பினர் எ°.ஜி.ரமேஷ்பாபு போராட்டத்தை வாழ்த்தி பேசினார். முன்னதாக ஊர்வலத்தை துவக்கி வைத்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார். வாலிபர் சங்க நிர்வாகிகள் ரா.சரவணன், பா.சரவணன், தட்சணாமூர்த்தி, அரிதா°, கதிரவன், வெங்கடேசன், உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்று சட்டமன்ற எதிரே முற்றுகையிட்டு போராட்டடம் நடத்தினர்.
காவல் துறையினர் கேட்டு கொண்டதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக பழைய போருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அக் 27

அரக்கனூர் கிளை - பாகூர்


புதுச்சேரி அக் 14
பாகூர் அரங்கனூரில் பேருந்து நிழற்குடை அமைக்கபடாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நுhதன முறையில் நவீன நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்து பாகூர் கொம்யூன் அரங்கனூரில் நீண்ட காலமாக அமைக்கபடாத பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.புதியதாக அமைக்கப்பட்ட ஜமா° விளக்கு எரியவேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம்,கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். என்பன கோரிக்கைகளை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்நூதன திறப்பு விழா போராட்டத்திற்கு சந்திரசேகர் தலைமைதாங்கினார். கீற்றால் அமைக்கப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடையை டிஓய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்து பேசினார். ஜ மா°விலக்கை (தி பந்தத்தை) கொம்யூன் தலைவர் அரிதா° ஏற்றிவைத்தார். பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், பொருளாளர் வீரப்பன், வில்லியனூர் கொம்யூன் செயலாளர் சண்முகம். விவசாய சங்க நிர்வாகி ரத்திணவேல் மற்றும் கிளை உறுப்பினர்கள் வெங்கடேசன், கனகராஜ்ஆனந்து, வினோத், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கம் சார்பில் நடந்த இந்நூதன பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் ஊர்மக்கள் திரளாக பங்கேற்று உற்ச்சாகமாக கண்டுகளித்தனர்.

Friday, October 8, 2010

கரிக்கலாம்பக்கத்தில் தெருமுனைக்கூட்டம்


புதுச்சேரி அக் 4
ஒய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தும் என்று டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிவர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டு கோரிக்கை விளக்க தெருமுனைக்கூட்டம் கரிக்கலாம்பக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பச்சையப்பன் தலைமைதாங்கினார் சேகுவேராதா° முன்னிலை வகித்தார். டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்.
55 கோடி இளைஞர்கள் உள்ள இந்தியாவில் இளைஞர் நல கொள்கையை உருவாக்காத அரசு தான் மத்திய, மாநில காங்கிர° அரசு. டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு ரூ 42 கோடி மட்டுமே செலவு பிடித்தது. தற்போது காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக அவ்விளையாட்டு மைதானம் 921 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது என்றால் மத்திய மன்மோகன்சிங் அரசு மக்கள் வரி பணத்ஐ எப்படி எல்லாம் பங்கு போட்டு கொல்லாம் என்பதில் தான் கவனமாக உள்ளனர்.
தமிழகத்தில் 48 லட்சம் பேரும் புதுச்சேரியில் 2.2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்து கொண்டு இருக்கையில் இவர்களுக்கென்று எந்த வித வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை .சமிபத்தில் 60 வயது கடந்த ஒய்வு பெற்றவர்களை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் பணியில் சேர்த்து உள்ளது.இன்றைக்கு ஆட்சியாளர்களின் கொள்கையால் வேலையற்ற இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. எனவே ஜிப்மர் நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்து வாலிபர்சங்கம் போராட்டம் நடத்தும் என்று எச்சரித்தார்.
முன்னதாக சங்கத்தின் பிரதேச செயலாளர் த.தமிழ்செல்வன், பொருளாளர் என்.பிரபுராஜ், கொம்யூன் செயலாளர் எ°.சண்முகம், பத்மநாபன் ஆகியோர் பேசினார்கள்.
இக்கூட்டத்தில் பிரதேச நிர்வாகிகள் உள்ளிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்கள் திராளனோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது.

சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம்



புதுச்சேரி அக் 7
கல்லுhரி வளர்ச்சியில் அக்கரை செலுத்தி வந்த மதர்தெரசா செவிலியர் கல்லுhரி டீனை மாற்றும் உத்தரவை திரும்பபெறக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுவை சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மதர்தெரசா அரசு செவிலியர் கல்லுhரியின் மாணவர்,ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியும்.பொறுப்பேற்று ஒன்பது மாதங்களில் கல்லுhரிக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி புதிய நுhல்களை வாங்கி நுhலகத்தை செயல்படுத்தி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகபடுத்தி கல்லுhரி வளர்ச்சி ஈடுபட்ட டீன் டாக்டர் கே.வி.ராமனின் பணிகாலம் முடிவதற்குல் உள்நோக்கத்தோடு இட மாற்றம் செய்ததை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,துனை செயலாளர் சரவணன்,நகர கமிட்டி தலைவர் சரவணன், செயலாளர் கதிரவன்,எ°எப்ஜ தலைவர் அரிகரன் ,நிர்வாகி ரஞ்சித்,அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகி கீதா ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
முன்னதாக பழையபேருந்து நிலையத்தில் இருந்து செவிலியர் கல்லுhரி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
படம் உள்ளது

Friday, October 1, 2010

பகத் சிங் - Bhagat Singh







பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 27, 1907 –மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது

Wednesday, September 29, 2010

Four-day DYFI state executive committee to beginning on Sept 24 - 2010



The four-day Tamil Nadu state Executive committee of the Democratic Youth Federation of India (DYFI), beginning here from Sept 24, would chalk out the strategy to successfully fight various problems being faced in the country, particularly in education, employment and health fields.

About 500 delegates, including 115 women, would participate in the sessions on all four days, during which the corruption in Common Wealth Games and Cricket fields would also be discussed, S Kannan, state DYFI secretary told reporters here today.

CPIM politburo member, Sitaram Yechury would address a public meeting on the last day, when a procession would be flagged off by M B Rajesh, MP and All Indian joint secretary of DYFI, Kannan said.

The meeting would also discuss the strategy to be adopted to exert pressure on both the Centre and State governments for immediate implementation of Sethu Samudram Canal project,

Cases registered against DYFI activists

Race Course police on Monday registered cases against four Democratic Youth Federation of India (DYFI) activists for indulging in acts not permitted during a rally.

Prior to the commencement of rally from VOC Grounds, it was learnt that these activists indulged in certain acts opposed by the police. Cases were registered against Ramesh Babu, Kannan and two others under section 43 (indulging in acts against permission) and 353 (preventing government servant from discharging duty) under IPC.

வாலிபர் சங்க தலைவர்கள் மீது காவல்துறை பொய் வழக்குப்பதிவு


கோவை, செப்.28-

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தலைவர்கள் மீது கோவை காவல்துறை பொய் வழக்குப்பதிவு செய் துள்ளது.

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 13 வது மாநில மாநாடு கோவையில் செப் டம்பர் 24 முதல் 27 வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான செப்டம் பர் 27 அன்று பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற எழுச்சி பேரணி நடைபெற்றது. முன்னதாக கோவை வ.உ.சி பூங்கா முன்பு தமிழகம் முழு வதும் இருந்து வந்திருந்த இளைஞர்கள் குவிந்தனர். அதில் பலர் கைகளில் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு இருந்தனர். சில இளைஞர்கள் கையில் ஒரு பொம்மையுடன் வந்தனர். அதில் தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயத்தில் கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்த மறுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை கண் டித்தும், தனியாரின் தடை ஆணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யாத திமுக அரசை விமர்சித்தும் வாச கங்கள் எழுதப்பட்டிருந் தது. இதனை அனைவரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப் போது கோவை காவல் துறை துணை ஆணையர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் திரண் டிருந்த கூட்டத்திற்குள் புகுந்தனர்.

இளைஞர்கள் கையில் வைத்திருந்த பொம்மையை கையில் வைத்திருக்க கூடாது என கூறினர். இதற்கு இளை ஞர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து காவல் துறையினர் அராஜகமாக இளைஞர்களின் கையில் இருந்த பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் வாலி பர் சங்க தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் இளைஞர் களை அவமரியாதையாக பேசி தாக்க முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் தொடர் எதிர்ப்பையும் மீறி இளைஞர் கள் பொம்மையை ஊர்வ லத்தில் கொண்டு சென்றனர். பேரணி நடைபெறும் பகுதி யில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்படவில்லை. போக்குவரத்தையும் காவல் துறையினர் ஒழுங்குபடுத்த வில்லை. இதைக் கண்டித்து பேரணியில் சென்ற இளை ஞர்கள் கோஷம் எழுப்பி னர். அப்போது வாலிபர் சங்க நிர்வாகிகள் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் செல்ல வழிவகுத்து கொடுத்தனர்.

தொடர்ந்து பேரணி சென்று கொண்டிருந்த போது காந்திபுரம், மற்றும் 100 அடி சாலையில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. பேரணி பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டி ருந்த சிவானந்த காலனியை அடைந்த போது அந்த பகுதி யிலும் மின்சாரம் துண்டிக் கப்பட்டது. அப்போதும் வாலிபர்கள் அரசு நிர்வா கத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இருந்த போதி லும் பொதுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

பொய் வழக்குப்பதிவு

இந்நிலையில் பேரணி நடைபெற்ற பின்னர் கோவை பி4 காவல் நிலையத்தில் வாலிபர் சங்க தலைவர்கள் எஸ்.கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, கோவை சின்ன வேடம்பட்டி பேரூராட்சித் தலைவர் வி.ராமமூர்த்தி, உள்ளிட்ட பலர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிட மால் தடுத்தல் பிரிவு 143, சட்டவிரோதமான முறை யில் உருவபொம்மை கொண்டு சென்றதாக பிரிவு 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாலிபர் சங்க பேரணி






கோவை, செப்.28-

வெண்கொடி ஏந்திய இளைஞர்கள் மாபெரும் பேரணி கோவையில் எழுச்சி


கோவை, செப்.27-

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான திங்க ளன்று கோவையில் மாபெரும் இளைஞர் பேரணி நடைபெற்றது. இதில் வெண்கொடி ஏந்திய இளைஞர்களின் எழுச்சி மிகு அணிவகுப் பால் கோவை மாநகரம் ஸ்தம்பித்தது.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த மாநில மாநாட்டின் நிறைவாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எழுச்சிப் பேரணி திங்களன்று மாலை நேரு விளையாட்டரங்கின் முன்பாகத் துவங்கியது. சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாள ரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. ராஜேஷ் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். அப்போது கேரள செண்டை மேளங்கள் விண்ணதிர முழங்கின. இதைத் தொடர்ந்து திருப்பூர் கலைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களின் தப்பாட்டம்., சூலூர் தாலுகா கலைக்குழுக்களின் சிலம்பாட்டம், ஒயிலாட் டத்தைத் தொடர்ந்து 13 வெண்பதாகைகளை ஏந்தி ராணுவ மிடுக்குடன் இளைஞர்கள் கம்பீரமாக அணிவகுத்தனர். ஆயிரக்கணக் கான வெண்தொண்டர்கள் அணிவகுப்போடு பின்தொடர்ந்தனர். நேரு விளையாட்டரங்கில் துவங்கிய பேரணி நஞ்சப்பா சாலை, காந்திபுரம், நூறடி சாலை, பவர் ஹவுஸ் வழி யாக சிவானந்தா காலனியில் உள்ள பொதுக் கூட்ட மேடையைச் சென்றடைந்தது. வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தும் அட்டைகளுடன் இளைஞர்கள் பேரணியில் பங்கேற்றனர். மத்திய மாநில அரசு களின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் பல்வேறு ரதங்கள் அணிவகுந்தன. பேரணியின் இருபுறமும் மக்கள் கூடி நின்று இளைஞர்களின் எழுச்சி மிகு அணிவகுப்பை கண்டுகளித்தனர். .

போலீசார் தள்ளுமுள்ளு:

பேரணியில் தனியார் பள்ளிகளில் கட்ட ணத்தை நிர்ணயித்த கோவிந்தராசன் கமிட்டி யின் பரிந்துரைகள் அமலாக்கப்படாததைக் கண்டித்து, ‘கோவிந்தராசன் கமிட்டியை விமர் சித்து உருவபொம்மைகளை இளைஞர்கள் ஏந்தி வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் வாலிபர் சங்க தலைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து வாலிபர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து காவல்துறையினர் ஆளும்கட்சியின் ஏவ லாளாக மாறி பேரணியில் குளறுபடி செய்ய முயன்றனர். ஆனால் வாலிபர் சங்க தலைவர்கள் இளைஞர்களை அமைதிபடுத்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். காவல்துறையினர் இடையூறுகளுக்கு மத்தியிலும் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் உருவப்பொம்மைகளை ஏந்திச் சென்றனர்.

We Fight For Jobs For All, Education For All And Empowerment Of Youth


DYFI was formed on 3rd November 1980 from it's inaugural conference held at Saheed Kartar Singh Saraba Village, Ludhiana, Punjab from 31st October to 3rd November.
DYFI stands for Communal harmony.Constitutional approval of right to job.

DYFI demands Job for all.

Education for all.

Industrialisation.
Proper implementation of self employment projects.

DYFI opposes

Anti-democracy and sectarian movements.

Anti-people economic policies guided by IMF-WB-WTO.

Imperialist aggression over third war.

DYFI fights for

Scientific socialism.

To identify the various problems concerning youth and to take proper and timely decisions and measures to resolve them.

To organise the youth from all progressive and democratic sections of the people under the banner of the DYFI and to make special efforts to draw and encourage the active participation of young women.

To organise and conduct the struggle against the menace of unemployment and to fight for employment or un-employment relief till employment. To conduct propaganda and agitation for the inclusion of the right to work in the list of fundamental rights of the Indian Constitution.

To take up and highlight the issues and problems concerning the youth, especially in the field of education, culture and sports. To organise cultural and sports activities through clubs, gymnasiums, akharas, literary and cultural societies and to conduct debates discussions, seminars, symposia and cultural programs. To encourage youth participation in sports, literary and cultural activities by organising tournaments and competitions. To fight against all obscurantist ideas and decadent culture.

To conduct night schools and adult education camps, to fight against illiteracy and for the introduction of universal free and compulsory education upto the secondary stage.

To strive to unite all the secular and democratic forces against conservatism, casteism, communalism, separatism, parochialism and authoritarianism, and in defense of secularism, democracy and national integrity.

To initiate and conduct a sustained campaign against evils of untouchability, dowry system, child marriage, religious superstition, corruption in public life and other such evils that are plaguing our society.

To work for prompt and active participation in relief and rehabilitation programs during natural calamities, accidents and epidemics etc, and to mobilise and cooperate with all other youth organisations for relief and rehabilitation work.

To encourage youth to support and participate in all the democratic movements of the people: workers, peasants, middle classes, students and all other progressive and forward-looking strata of our country. To actively support the struggle against predatory foreign capital, Indian monopoly capital and the feudal and semifeudal landlordism, and for the nationalisation of all key industries and for carrying out radical land reforms, assuring land to the tiller.

To strive to establish fraternal contacts and cooperation with all the youth organisations of the world which subscribe to the anti-imperialist, anti-apartheid, national liberation and peace struggles, movements and their ideals.

To undertake and encourage the different State units of the DYFI for the publication of journals, leaflets pamphlets and other literature in order to further the aims, objectives and activities of the DYFI.

Thursday, September 23, 2010

கோவையில் வாலிபர் சங்க மாநாடு தியாகிகள் ஜோதி - கொடிப்பயணம் எழுச்சியோடு துவங்கியது

நாகர்கோவில், செப். 22 -

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டிற் கான ஜோதி மற்றும் கொடிப் பயணக்குழுக்கள் புறப்பட்டன.

இந்த பயணக் குழுக்க ளுக்கு, மாவட்டங்களில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 13-வது மாநாடு, செப்டம்பர் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதை யொட்டி, குமரி மாவட்டத்திலி ருந்து தியாகிகள் நினைவு ஜோதியும், கடலூரிலிருந்து தியாகிகள் குமார் - ஆனந்தன் நினைவு ஜோதியும், விழுப் புரத்திலிருந்து தோழர் சுரேஷ் நினைவாக கொடிப் பயணமும் தொடர் ஓட்டமாக மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குமார்-ஆனந்தன்

நினைவு ஜோதி

கடலூர் புதுப்பாளையம் பகு தியில் கள்ளச்சாராயம் விற் பதை எதிர்த்து போராடி, சாராய வியாபாரிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட தியாகி கள் குமார்- ஆனந்தன் ஆகி யோரின் நினைவாக, புதுப் பாளையத்தில் இருந்து ஜோதி புறப்பட்டது.

இந்த ஜோதிப் பயண துவக்க விழாவிற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமை வகித் தார். நகரத் தலைவர் ஆர்.மணி வண்ணன் வரவேற்றார். மாநி லத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஜோதியை எடுத்துக் கொடுக்க பயணக்குழுவின ரான -மாநில செயற்குழு உறுப் பினர் கே.ராஜேஷ் கண்ணன், ஜி.ஸ்டாலின், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கண்ணன் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டச் செயலா ளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயணக்குழு குள்ளஞ் சாவடி, குறிஞ்சிப்பாடி, புவன கிரி, கீரப்பாளையம், சிதம்பரம், அண்ணா மலைநகர் வழியாக நாகை மாவட்டத்தை அடைந் தது. பயணக்குழு செல்லும் வழிகளில், வாலிபர் சங்கத்தி னர் உற்சாக வரவேற்பு அளித் தனர்.

நினைவு ஜோதி

குமரி மாவட்டத்திலிருந்து செல்லும் தியாகிகள் நினைவு ஜோதி, அருமனையிலிருந்து செவ்வாயன்று காலையில் புறப்பட்டது. அருமனை சந்திப் பில் நடைபெற்ற ஜோதிப் பயண துவக்க நிகழ்ச்சிக்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் புஷ்பதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சசிகுமார், நிர்வாகி கள் ஜோயல், ஷாலினி, சுரேஷ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயணக்குழுவினரான மாநில நிர்வாகிகள் அலெக்ஸ், நரசிம்மன், கல்பனா, புவிராஜ், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவிடம், சங்கத்தின் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பி னரும், திருவட்டாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான லீமாறோஸ் ஜோதியை எடுத் துக் கொடுத்து, பயணத்தைத் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் ஜோதி தொடர் ஓட்டமாக புறப்பட்டு பல்வேறு பகுதிகள் வழியாக மாலையில் நாகர்கோவிலை வந்தடைந் தது. வழியில் மேல்புறம், குழித் துறை, வெட்டுவந்நி, மார்த் தாண்டம், இரவிபுதூர்கடை, சாமியார்மடம், தக்கலை, சுங் கான்கடை, பார்வதிபுரம், கிருஷ்ணன்கோயில் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு, மாதர், போக்குவரத்து தொழி லாளர், மாணவர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற பொதுக்கூட்டம், புதனன்று ஆரல்வாய்மொழி வழியாக நெல்லை மாவட்டத் தில் தொடர் ஓட்டமாக ஜோதிப் பயணம் நடைபெற்றது.

கொடிப்பயணம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்ச னைகளுக்காக போராடிய போது சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப் பட்ட தோழர் சுரேஷின் நினை வாக கொடிப் பயணம் விழுப் புரத்திலிருந்து புறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் வெண்பதாகையை முன்னாள் தலைவர் ஜி. ஆனந்தன் எடுத் துக் கொடுக்க, மாநிலச் செய லாளர் எஸ்.கண்ணன் பெற்றுக் கொண்டார்.

மாநில செயற்குழு உறுப் பினர்கள் ஜே. ராஜேஷ்கண் ணன், ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொரு ளாளர் எம். கோபால கிருஷ் ணன், நிர்வாகிகள் ஜானகி, எம். முத்துவேல், எஸ். சத்தியராஜ், ஜி. நாகராஜ், மாநில குழு உறுப் பினர் ஆர்.கண் ணப்பன் ஆகி யோர் பேசினர். முன்னதாக எஸ். மதுசூதனன் வரவேற்றார்.

powered by இந்தியா இன்டலெக்ட் © All Rights Reserved. தீக்கதிர் 2005-2006.

Tuesday, September 7, 2010

கண்டன ஆர்பாட்டம்

புதுச்சேரி செப் 2
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவரை தாக்கிய அரியாங்குப்பம் =காவல் நிலைய =காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க கிளை தலைவர் ராஜசேகரை அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் தலைமையிலான காவலர்கள் தாக்கியுள்ளனர். தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியு=றுத்தி அரியாங்குப்பம் நுழைவு வாயில் முன்பு இப்போரட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்திர்க்கு வாலிபர் சங்க நகரகமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,நகரகமிட்டி செயலாளர் கதிரவன்,சிபிஎம் நகரகமிட்டி உறுப்பினர் சிவசோலை,கிளை செயலாளர் =துரைமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.படம் உள்ளது

Sunday, September 5, 2010

புதுச்சேரி நிலைமை

புதுச்சேரி, 492 ச.கி.மீ பரப்பளவு கொண்ட மாநிலமாக உள்ளது. புதுச்சேரி ச.கி.மீ., (தமிழக பகுதி) காரைக்கால்-160 ச.கி.மீ., (தமிழக பகுதி), மாஹே, 9 ச.கி.மீ. (கேரளம்), ஏனம் 30 ச.கி.மீ (ஆந்திரா பகுதி) என நான்கு பகுதிகளில் மொத்தம் 9இ74இ345 பேர் வாழ்கின்றனர். இதில் ஆண்கள் 4இ86இ961 மற்றும் பெண்கள் 4இ87இ384 லட்சம் பேர் அதிலும் குறிப்பாக வேலை வாய்ப்பகத்தில் பதிந்து உள்ளவர்கள். 2010 ஆம் ஆண்டின் படி 2இ10இ000 ஆயிரம் பேர். இதனால் புதுவையில் வேலையின்மை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2005 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது, ஏராளமான இலவச திட்டங்களை முன் வைத்தது. குறிப்பாக, வேலையின்மையை போக்க தொழில் பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம், சுதேசி, பாரதி பஞ்சாலைகள் திறக்கப்படும் என்றும், இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மக்களிடம் கூறினார்கள். அவற்றை ஏற்காத புதுச்சேரி வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிபெரும்பான்மையாக தீர்ப்பு கூறினார்கள். அதன் பின்னர் தி.மு.க., பா.ம.க, சுயேச்சைகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து திரு.N.ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் விரோத கொள்கையே மிக வேகமாக அமுல்படுத்தியது. அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தது. இத்திட்டம் சரிவர நடத்த முடியாத நிலைமை ஏற்ப்பட்டது. அதன் பின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் இலவச அரிசி என்று மாற்றம் செய்து கொண்டார்கள். மேலும், வேலையில்லா கால நிவாரணத்திட்டம் உருவாக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து 20,000 விண்ணப்பங்கள் இளைஞர்களுக்கு வினியோகம் செய்தது. அதில் கடுமையான நிபந்தனைகள் காரணமாக இந்தநாள் வரை இளைஞர்கள் பயன்பெற முடியவில்லை. 3 ஆண்டுகள் கடந்த சூழலில் காங்கிரஸ் ஆட்சிக்குள் பதவி சண்டை எற்பட்டு திரு.N.ரங்கசாமி அவர்களை முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு திரு.ஏ.வைத்திலிங்கம் புதிய முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் கால கட்டத்தில் இன்னும் வேகமாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கு தீணி போடு வேலையை காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு வருகிறது. கல்வி பிரச்சனையில் தனியார் பள்ளி கல்லூரிகளை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு 132 கோடி செலவு செய்தும் இன்றைக்கு துவங்கப்படவில்லை. தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் விடும் ஆட்சியாளர்கள் அரசு துறைகளில் காலி பணியிடம் கொல்லைபுறமாக நிரப்பி வருகின்றனர். படித்த பட்டதாரிகளை பழிவாங்கும் நோக்கில் ஒப்பந்த ஆசிரியர்களாக குறைந்த சம்பளம், பணி பாதுகாப்பு இன்றி வேலை வழங்கும் கொள்கையை திணிக்கிறது. வேலையின்மை பிரச்சனை புதுச்சேரியில் மிகப்பெரிய சமூக குற்றமான வெடிகுண்டு கலாச்சாரத்தை ஊட்டி வளர்த்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் அளவில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இரண்டு லட்சத்து பத்தாயிரம் இளைஞர்;களுக்கு, வாய்கரிசி போடும் காங்கிரஸ் அரசின் கொள்கையை எதிர்த்துதான் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது போராட்டம் இருந்துள்ளது. இவற்றை விவாதித்து எதிர்காலத்தில் வேலையின்மைக்கு எதிராக நமது போராட்டத்தை தீவிரமாக திட்டமிட வேண்டியுள்ளது.

தேசிய நிலைமை

நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளில் 50 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. வேலையின்மையும், வறுமையும் மிகப்பெரும் சாபக்கேடாக இன்றும் தொடர்கிறது. நாட்டில் 77 கோடி மக்கள் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே வருவாய் பெறும் நிலையில் உள்ளனர். சரிபாதிக்கும் மேலான இந்தியப் பெண்கள் இரத்த சோகையாலும், 3வயதுக்கு உட்பட்ட 40மூ குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள். சுகாதாரமும், கல்வியும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் தான். 63 ஆண்டுகளுக்குப் பிறகு தான் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச்கல்வி என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. இது எப்போது முழுமைபெறும் என்பது கேள்விக்குறியே.

மத்தியில் தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியதிகாரத்தில் உள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தக் காலத்தில் மிகப்பெரும் வசதிபடைத்தவர்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் ஆதரவான தாராளமயக், தனியார்மயக் கொள்கைகளை அமுல்படுத்தியே வந்துள்ளது. இதனால் கடந்த நிதியாண்டு மட்டும் மிகப்பெறும் செல்வந்தர்களுக்கு 80இ000ஃ- கோடி ரூபாய் வரிச்சலுகையாக-மானியமாக வழங்கியுள்ளது. மறுபுறத்தில் ஏழைகளுக்கு வரி உயர்வும், மானிய வெட்டும் பெரும் சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளது. எப்போதுமில்லாத விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொதுவினியோகத்திட்டத்திற்கான மானியம் ரூ.4000ஃ- கோடி வெட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்துகிற உரத்தின் விலை உயர்த்தப்பட்டதுடன், உரமானியமும் வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. மூடியுள்ள பொதுத்துறை உர நிறுவனங்களை திறக்க நடவடிக்கை இல்லை. இத்தகைய தவறான கொள்கையாலும், வறட்சியாலும் உணவு தானிய உற்பத்தியில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. உணவு பெறும் உரிமை கேள்விக்குறியாகிவிட்டது.

மத்திய அரசின் விலைவாசி கொள்கைக்கு எதிராக இடதுசாரிகள் நடத்திய ஏப்ரல்-8 சிறை நிரப்பும் போராட்டத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இடது சாரிகட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து நடத்திய ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் மக்கள் பங்கேற்போடு வெற்றிகரமாக நடந்தது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் வரவு செலவு அறிக்கை மீது கொண்டுவரப்பட்ட வெட்டுத்தீர்மானத்தை காங்கிரஸ் அரசு கேவலமான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியை பாதுகாத்துக்கொண்டது. என்றாலும் ஓராண்டு ஆட்சி முடிதவற்குள்ளாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை கணக்கிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.


2வது ஐ.மு.கூட்டணி அரசு அணுசக்தி விபத்து பொறுப்பு மசோதா, அந்நியப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் மசோதா-இந்திய விவசாயத்தை சீரழிக்கும் ஆசியான் ஒப்பந்தம், மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு-மத்திய புலனாய்வுக்கழகத்தை தவறாக பயன்படுத்துவது, பொதுத்துறை பங்குகளை விற்பது, வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் - முறைகேடு என மக்கள் விரோத ஆட்சியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க வும் இத்தகைய கொள்கைக்கு பல்லக்கு தூக்கி பவணி வருகிறது. திசையில்லாமல் செல்லும் படகைப்போல காங்கிரஸ் ஆட்சி தறிகெட்டு செல்கிறது. இந்தப் பதையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Friday, August 20, 2010

வேலையில்லா வாலிபர் - உண்ணாவிரதம்

புதுவை ஏப்ரல் 13- 2010 - புதுச்சேரி மின்துறை எதிரில்

போபால் நிதியா ? ஜீன் 10 - 2010


புதுச்சேரி ஜீன் 10
போபால் நிதிமன்றம் வழங்கிய திர்ப்பபை மேல்முறையிடு செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து கண்ணில் கருப்பு துணிக்கட்டி கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போபால் விஷவாய்வால்; பாதிக்கப்பட்டவரகளுக்கு 26 ஆண்டு காலம் பிறகு புதைக்கப்பட்ட நிதியை வழங்கியதை மேல் முறையீடு செய்யவேண்டும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆன்டர்சன்னை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும். விஷவாய்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்;டம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டதிர்க்கு வாலிபர் சங்க தலைவர் சந்துரு மாணவர் சங்க தலைவர் அரிகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய மாணவர் சங்க தமிழ் மாநில தலைவர் ரெஜீஷ் குமார் வாலிபர் சங்க தமிழ் மாநில தலைவர் ரமேஷ்பாபு, வாலிபர் சங்க முன்னால் செயளாலர் லெனின் துரை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் வாலிபர் மாணவர் சங்க நிர்வாகிகள் மணிபாலன், சரவணன், ஆனந்து, ரஞ்சித் உள்ளிட்ட திரலானோர் கண்ணில் கருப்பு துணிகட்டிக் கொண்டு முழக்கம் மிட்டனர்.

கல்வி பிச்சை எடுக்கும் மாணவர்கள்


புதுவை - ஜூலை 16

வாலிபர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா


புதுச்சேரி ஜீலை 22
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா காந்தி வீதி முத்துமாரியமன் கோவில் வீதி சந்திப்பில நடைபெற்றது .
சங்கத்தின் கிளை தலைவர் என். ஆனந்து தலைமை தாங்கினார் செயலாளர் ஜெகன் முன்னிலை வதித்தார் டிஒய்எப் பிரதேச பொருளாளர் பிரபுராஜ் பெயர் பiகையை திறந்து வைத்தார். சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மதிவாணன், சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் சரவணன், செயலாளர் கதிரவன், முன்னால் தலைவர் துரைமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நகரகமிட்டி உறுப்பினர்கள் அர்ஜீன், பாலகிருஷ்ணன், ராஜா, ராஜசேகர், மற்றும் கிளை உறுப்பினர்கள் திராளக பங்கேற்றனர்.

வாலிபர் சங்க பிரதேச மாநாடு



புதுச்சேரி அரசு காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச 12வது மாநாடு ஆக°ட் 14 15, தேதிகளில் பாகூரில் நடைபெற்றது.
தோழர் வேலூச்சாமி நினைவரங்கத்தில் நடந்த மாநாட்டிற்கு தட்சணாமூர்த்தி, சுகன்யா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆசிரியர் நா.சண்முகம் பிரதிநிதிகளை வரவேற்றார், டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். தமிழ் மாநில இணைச் செயலாளர் டி.வி.மீனாட்சி ஏஐஓய்எப் மாநிலத்தலைவர் அந்துவான் அறிவியல் இயக்கத்தை சேர்ந்த விஜயமூர்த்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
மாநாட்டு வேலை அறிக்கையை பிரதேச செயலாளர் ச.மணிபாலன் சமர்பித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் என்.பிரபுராஜ் தாக்கல் செய்தார். இறுதியாக டிஓய்எப்ஐ தமிழ் மாநில தலைவர் எ°.ஜி.ரமேஷ்பாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
மாநாட்டில் பிரதேச புதிய தலைவராக க.சந்துரு, செயலாளராக த.தமிழ்ச்செல்வன், பொருளாளராக என்.பிரபுராஜ், உள்ளிட்ட 20 பேர் கொண்ட பிரதேசக் குழு தேர்வ செய்யப்பட்டனர்.
முன்னதாக முதல் நாள் நடந்த மாநாட்டு பேரணியை சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் துவக்கிவைத்தார். இம்மாநாட்டில் புதுச்சேரியில் பெருகிவரும் சமூக குற்றங்களை கட்டுபடுத்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அரசு துறைகளில் அமைச்சர்கள் கையாளும் முறைக்கேடான நேரடி நியமனத்தை கைவிடவேண்டும், முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை உத்திரவாதப்படுத்த வேண்டும், அரச அறிவித்த வேலையில்லா கால நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் அரசு மருத்துவ கல்லூரியை துவங்க வேண்டும், நின்று போன காமராஜர் கல்வி உதவி நிதியை மீண்டும் வழங்க வேண்டும், 100 நாள் கிராமப் புற வேலை உறுதி திட்டத்தை காரைக்கால் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும், பாகூரில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
படம் உள்ளது.
குறிப்பு மாநாட்டையொட்டி பாகூரில் மேற்கு வீதியில் நடந்த பொது கூட்டத்தில் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் எ°.ஜி.ரமேஷ்பாபு பேசுகிறார். உடன் மாநில இணைசெயலாளர் மீனாட்சி, பிரதேச நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சந்துரு, பிரபுராஜ் உள்ளிட்டோர்.

Monday, August 16, 2010

புதுவை நேற்றும் இன்றும்


புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். இது பிரஞ்சு காலணியாக இருந்து வந்த பகுதி. புதுச்சேரியில் நான்கு பகுதிகள் உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், யானம், மாஹே புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடும் உள்ளது. மாஹே கேரளாவிலும் மற்றும் யானம் ஆந்திராவில் அமைந்துள்ளது.
புதுச்சேரியின் மொத்த பரப்பளவு 492 km2(190 sq.m).
புதுச்சேரி - 293 Km2 (1133 sq.m)
காரைக்கால் - 160 Km2 (62 sq.m)
மாஹே - 9 Km2 (3.5 sq.m)
யானம் - 30 Km2 (12 sq.m)
புதுச்சேரியின் வரலாறு
புதுச்சேரி முதல் நூற்றாண்டில் புதுகி என்ற பெயரை பெற்றது. இது இத்தாலிய ரோம் வணிகம் செய்த இடமாக கருதப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடல்மட்டத்தில் இருந்து பார்வை சுலபமாக இருப்பதால் கப்பல் மூலம் வணிக செய்ய பண்டை காலத்தில் இது ஒரு வணிக தலமாக இருந்தது.
இங்கு வேத பாட சாலைகள் அதிகம் இருந்தால் இதை “வேதபுரி” என்றும் அழைத்தனர். 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டில் புதுச்சேரி “புதுவை” என்றும் அழைக்கப்பட்டது.
புதுச்சேரி நான்காம் நூற்றாண்டில் பல்லவ ராஜ்ஜியத்தில் இருந்து வந்தது. இது பத்தாம் நூற்றாண்டு தஞ்சையை ஆண்ட சோழ ராஜ்ஜியத்தில் 300 ஆண்டுகள் இருந்தது. பிறகு பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. 1638-ஆம் ஆண்டு இஸ்லாமிய மன்னர் பிஜாபூர் சுல்தானால் செஞ்சி வரை ஆட்சி செய்யப்பட்டது. பிரெஞ்சு East India company 1673 ஆம் ஆண்டு புதுவையை தலைநகரமாக கொண்டு தொழில் தொடங்க ஆரம்பித்தனர். British மற்றும் Dutch வியாபார கம்பெனிகள் இந்தியாவில் தொழில் செய்ய போட்டியிட்டனர். இது ஐரோப்பிய நாடுக்குலோ இந்தியாவிலோ வணிகம் செய்ய சில போர்கள் ஏற்ப்பட்டது. இதன் தொடர்ச்சியாக Dutch 1693-ல் புதுச்சேரியை கைப்பற்றியது. பிறகு பிரெஞ்சுக்கும் டட்சிக்கும் ஏற்பட்ட சுலளறiஉம ஒப்பந்தத்தில் அடிப்படையில் 1699ஆம் ஆண்டு பிரெஞ்சு ஒப்படைக்கப்பட்டது.
1720 ஆம் ஆண்டு பிரெஞ்சு மாஹேவை கைப்பற்றியது. 1731-ல் யானத்தை கைப்பற்றியது. 1738-ல் காரைக்காலை கைப்பற்றியது.
1742 ஆம் ஆண்டு பிரெஞ்சு காலணியாக புதுச்சேரி, மாஹே, காரைக்கால், சந்திர நாகூர், யானம் இருந்தது.
15 ஜனவரி 1742-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சு காலணிகளில் முதல் கவர்னராக ஜோசப் பிரான்சிஸ் டியூபிளக்ஸ் பதவியேற்றார். பிறகு அவர் மெட்ரால் பட்டனத்தை கைப்பற்றினார். 1748-ல் மெட்ராஸ் பிரெஞ்சு அட்சி இருந்தது. 30 ஆண்டு காலம் பிரென்சு கையில் இருந்தது மெட்ராஸ்.
1748-ல் பிரிட்டிஷ் புதுச்சேரியை தாக்கியபோது பிரிட்டிஷ் அரசாங்கம் தோற்றது. இதை தொடர்ந்து 1750-ஆம் ஆண்டு வில்லியனூர் மற்றும் பாகூhர் பகுதியில் 36 கிராமங்களை பிரெஞ்சு அரசு கைப்பற்றியது. இது பிரெஞ்சு ரெஜிமின் உயரிய காலமாக கருதப்பட்டது. 1793யில் புதுச்சேரியில் ஏற்ப்பட்ட ஒரு சில உள்ளுர் பிரச்சனை காரணத்தினால் பிரிட்டிஷ் அரசாங்கம் புதுச்சேரியை கைப்பற்றியது. புதுச்சேரி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மெட்ராஸ் பட்டனத்தில் ஒரு பகுதியாக கருதப்பட்டது. பிறகு 1814ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஏற்ப்பட்ட பிரிட்டிஷ் பிரெஞ்சு ஒப்பந்தத்தில் அடிப்படையில் மீண்டும் புதுச்சேரி பிரெஞ்சு கட்டுபாட்டில் 1816 ஆம் ஆண்டு வந்தது. அதற்கு பிறகு பிரெஞ்சு ஆதிக்கம் 31 அக்டேபர் 1954 வரை தொடர்ந்தது.
புதுச்சேரியை பெருத்தவரை பல ஆங்கில எதிர்ப்பு மற்றும் இந்திய விடுதலை போராட்டத்திற்கு உதவிகரமாக இருந்தது. முதலில் ஸ்ரீ அரவிந்தோ 1910-ஆம் ஆண்டு வங்கத்தில் இருந்து தப்பி இங்கு தலைமறைவாக இருந்தார். இவரை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சுப்பரமணிய பாரதி, வாஞ்சிநாதன், ஏ.ஊ.ஊ. ஐயர் மற்றும் பலர் இங்கு தலைமறைவாக இருந்தனர்.
1936-ம் ஆண்டு 8.00 மணிநேரம் வேலை கேட்டு பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்து ஜூலை 30 போராட்டம் உலக தொழிலாளர் வரலாற்றில் ஒரு மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இதை தொடர்ந்து இந்தியாவில் 8.00 மணிநேர வேலை, 8.00 மணிநேர ஓய்வு, 8.00 உறக்கம் என்ற தொழிலாளர் உரிமைச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்கு பிறகு ஏழு ஆண்டு காலம் கழிந்து 1954 அக்டோபர் 18-ஆம் தேதி இந்திய அரசுடன் பிரெஞ்சு காலணியை சேர்க்க ரகசிய தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 178 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 170 வாக்குகள் பிரெஞ்சு இந்திய ஒப்பந்ததிற்கு ஆதரவாக இருந்தது. நவம்பர் 1 1954ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் கையில் புதுச்சேரி மாற்றப்பட்டது. பிறகு 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முழுமையாக சுதந்திர இந்தியா அரசுடன் சட்டப+ர்வமாக இணைக்கப்பட்டது.
புதுச்சேரியின் ஆட்சி மொழியாக பிரெஞ்சு, தமிழ், தெலுக்கு, மலையாளம் பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தை அரசாங்கம் பயன்படுத்துகின்றனர். தமிழை பேசுபவர்களின் எண்ணிக்கை 89.18 சதவீதம் மற்றும் பிறமொழி பேசுபவர்களின் 10.82 சதவீதம் உள்ளது.
புதுச்சேரியில் 6 தாலுக்காவும் 2 துணை தாலுக்காவும் உள்ளது.
புதுச்சேரியில் 8 மருத்துவ கல்லூரிகள், 10 பொறியில் கல்லூரிகள் 3 பல்மருத்துவ கல்லூரிகள், 2 சட்ட கல்லூரிகள், 1 கால்நடை மருத்துவ கல்லூரி, 1 வேளாண்மை கல்லூரி, 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகள் இங்கு உள்ளது. இதில் 90 சதவீதம் தனியார் வியாபார கல்லூரிகளே!
புதுச்சேரியின் பொருளாதாரம்
புதுச்சேரியின் உள்நாட்டு உற்பத்தி 2008-ஆம் ஆண்டு கணக்குப்படி 6457 கோடி அதில் தனிநபர் வருமானம் மாததிற்கு 5540 ரூபாய் என்று கூறப்படுகிறது. இது தேசிய அளவில் அதிக பட்சமான வருவாய் என்ற கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனங்களில் ரூபாய் 2500 முதல் 3000 வரை சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இதை அனைவரும் அறிவர்.
புதுச்சேரியில் பன்னாட்டு நிறுவனமான WIPRO, ஹ்ச்ல், IBM, Hindustan Unilever Lmt., Suzlon போன்ற நிறுவனங்கள் இங்கே உள்ளது. அதனால் இவர்களின் 75மூ சதவீதம் தொழிலாளிகளை ஒப்பந்த (Contract) முறையில் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இது பாதுகாப்பு அற்ற ஒரு வேலையாக உள்ளது. மேட்டுப்பாளையம் சேதராப்பட்டு, கிருமாம்பாக்கம், தட்டாஞ்சாவடி வில்லியனூர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் இன்று அதிகபட்சம் ஒப்பந்தம் (Labour Development) மூலமாக தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றனர். இதில் வெளி மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல தொழிலாளர்களை எடுத்து அடிமையாக நடத்துகின்றனர். இதை பற்றி எல்லாம் மாநில அரசு தொழிலாளர் நலத்துறை (டுயடிழரச னுநஎநடழிஅநவெ) கண்காணிப்பது இல்லை. ஆனால் வேலை வாய்ப்புளை உருவாக்கிறோம் என்று கூறி தனியார் (டீPழு) மற்றம் ஊயடட ஊநவெநச வைத்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தி அரசு பணத்தை செலவு செய்வதற்கும் மட்டுமே தொழில் துறை இயங்கி வருகிறது.
புதுச்சேரியில் Integra Software, SPI Technologies, Emphasis> Sparsh போன்ற நிறுவனங்கள் Outsourcing வியாபாரம் மூலமாக செழித்து வருகின்றனர். ஆனால் வேலை பார்க்கும் நபர்களுக்கு ரூபாய்.3000 சம்பளமாக வழங்கப்படுகிறது. உழைப்பு சுரண்டப்படுகிறது. இதை பற்றி எல்லாம் புதுச்சேரி அரசு கவலைப்படுவதே இல்லை. தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் தினகூலி ரூபாய்.40 முதல் ரூபாய்.60 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இன்றைய விலைவாசி அதிகமாக உள்ளதால் குடும்பம் நடத்துவது மிக கடுமையான விஷயமாக உள்ளது.
புதுச்சேரியில் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது என்று கூறிகின்ற மத்திய, மாநில அரசாங்கம் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார் என்றால் இன்று பல நிறுவனங்கள் புதுச்சேரியில் தொழில் செய்வதாக பதிவுசெய்து வியாபார வரி மட்டுமே புதுச்சேரியில் செலுத்துகிறார்கள்.ஆனால் அவர்களின் உண்மையான தொழிற்சாலை வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டு இங்கு வெறும் டிடைடiபெ மட்டுமே நடத்தப்படுகிறது.
புதுச்சேரியிடைய கடலோர நிலம் 45 மஅ. இதில் 65000 மீனவ குடும்பங்கள் உள்ளது. இதில் 13000 மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளன. சமீபத்தில் மத்திய அரசாங்கத்தால் பிறபிக்கபட்டு பின்பு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி தடை சட்டம் எதிர்வரும் காலத்தில் இவர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை போல் சோமாலிய நாட்டில் மீன்பிடி தடை சட்டத்தால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் கடல் கொள்ளையர்களாக மாறி சமீபத்தில் இந்திய கப்பல்களை கைப்பற்றியதை நாம் அறிவோம். பிறகு அவர்கள் ரானுவத்தால் கடல் கொள்ளப்பட்ட இளைஞர்களை நாம் அறிவோம்.
புதுச்சேரியில் சமீப காலமாக 3 நட்சத்திரம் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகிறது. இவைகள் பல அரசின் மானியத்துடன் கட்டப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் அரசாங்கம் இவர்களுக்கு மானியம் அளித்து உள்ளது. காரணம் சுற்றலாத்தளம் வளர்க்க என்று அரசாங்கம் கூறி வருகிறது. ஹோட்டல் மற்றும் லார்ட்ஜ் ஒரு முக்கிய தொழிலாக அரசாங்கம் கருதுகிறது. ஆனால் இதற்கு பின்ப்புறம் புதுச்சேரியில் விபச்சாரம் மிக வேமான தொழிலாக வளர்ந்து வருகிறது. 2007-ம் அண்டு கணக்கப்படி புதுச்சேரியின் 9200 நபர்களுக்கு AIDS நோய் இருப்பதாக புதுவை அரசாங்கம் அறிவித்துள்ளது. காரணம் பெருகிவரும் ஹோட்டல் மற்றும் லார்ட்ஜ் கலாச்சாரமே.
சமூக குற்றவும் புதுச்சேரியும்
புதுச்சேரியில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை 2,10,000 இளைஞர்கள் பதிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த இளைஞர்களுக்கு அரசு அந்த புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. இளைஞர்களை தவறான ஒரு வழியில் தான் ஆட்சியளார்கள் திசை மாற்றி வருகிறனர். அடியாட்களையும், கட்டபஞ்சாயத்து செய்யும் ரவுடிகளாகவும் வளர்த்து வருகிறனர். புதுச்சேரி பிரதேசத்தில் 2010ஆம் ஆண்டு மற்றும் 38 கொலைகள், 25 கொலை முயற்சி என ஒட்டு மொத்தமாக புதுச்சேரியில் மட்டும் சமூககுற்றங்கள் கடந்த 8 மாதத்தில் 4591 புதிதாக புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. இது புதுச்சேரியில் சட்டஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
பஞ்சாலையும் புதுச்சேரியும்
புதுச்சேரியில் அரசாங்கம் கணக்குபடி 11 பஞ்சாலை இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அரசுக்கு சொந்தமனா AFTமில்இ பாரதி மில், சுதேசி மில், இன்று மூடக்கூடிய அபாயகரமான நிலை உள்ளதாக புதுச்சேரி அரசாங்கம் கூறி வருகிறது. இவை அனைத்தும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறது. ஆனால் இந்தியாவை பெருத்தவரை பஞ்சாலை தொழில் லாபகரமான தொழிலாக நடந்து வருகிறது. இந்தியா 25 சதவீதமான பஞ்சியை (Raw material) வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் ஜவுளி பூங்கா ஆயிரக்கணக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. காரணம் பஞ்சாலை ஒரு லாபகரமான தொழில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக நூறு பஞ்சாலை துவங்கப்பட்டு லாபகரமான தொழிலாக நடந்து வருகிறது. இப்படி இருக்க புதுச்சேரி அரசு மற்றும் பஞ்சாலை நஷ்டம் என்று கூறி முடநினைப்பது ஒரு தவறான கொள்ளையாகும். யுகுவு மில்லை வெறும் 13 கோடியில் நவீனபடுத்தினால் ஆயிரம் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மத்திய அரசு குழு கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இளைஞர்கள்
“இளைஞர்கள்” எனில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அதாவது, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தரவர்க்கம் ஆகியவற்றை சேர்ந்த 15- 40 வயதுக்குட்பட்ட அனைவருமாவர். இந்த நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் பெரும்பகுதி ஆவார்கள்.
இளைஞர்கள் இச்சமூகத்தின் வேகமும், உற்சாகமும் கொண்ட ஆற்றல் மிகுந்த பிரிவினர் ஆவார்கள். ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது சமூகத்தின் இந்தப் பிரிவினரின் மேம்பாட்டைப் பொருத்து அமையும். ஆனால் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தி இச்சமூகத்தினை முன்னேற்றிச் செய்வதற்கான உரிமையும், வாய்ப்பும் இப்பிரிவினருக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது.