Monday, March 24, 2014

புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகை.

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை திருட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகை.

புதுச்சேரி வைசியால்வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் சுப்புரமணியன் தொடர்ந்து பாலியல் சீன்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்திற்கு புகார் கடிதம் வந்துள்ளது.இப்புகாரின் அடிப்படையில் சமுகநலத்துறை அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித்,செயலாளர் ஆனந்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் அதிகாரிகளை சந்தித்து நடந்த சம்பவத்திற்கு காராணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.

முற்றுகை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திராளான மாணவர்கள் இலாஸ்பேட்டை அவ்வை நகரில் உள்ள ஆசிரியர் சுப்புரமணியனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

போலிஸார் வழக்கு
ஆசிரியர் வீட்டு அருகே முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித் ஆகியோர் மீது திருட்டு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளரின் தூன்டுதலாலே இப்பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாணவர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வகுப்பு புறக்கணிப்பு
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும் மாணவர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை உடனே திரும்ப பெறக்கோரி புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்கானிப்பாளர் அலுவலகத்தை சட்டகல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவரும்,சட்டகல்லூரி இறுதியாண்டு மாணவருமான சரவணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் உறுதி
முதுநிலை கண்கானிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சங்க நிர்வாகிககள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்ப பெறப்படும் எனறு உறுதி அளித்ததின் பேரில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.இதேப்போல் மோதிலால்நேரு பால்டெக்னிக் மாணவர்களும் வகுப்பு புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொய்வழக்குகளை திரும்பக்கோரி புதுச்சேரியில் ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மாணவர் சங்க தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பக்கோரி புதுச்சேரியில் ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள சுசிலாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் தொடர்ந்து அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதை கண்டித்து லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் சுப்ரமணியனின் வீட்டு எதிரே மாணவர்கள்,மாதர் அமைப்பைச்சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித் ஆகியோர் மீது ஆசிரியர் சுப்ரமணியன் திருட்டு புகார் கொடுத்துள்ளார்.


அதனை தொடர்ந்து ஆசிரியருக்கு ஆதரவாக இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும்.போடப்பட்டுள்ள திருட்டு வழக்கை உடனே திரும்ப பெறக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
 


புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் அருண் தலைமை தாங்கினார்.பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் லெனின்துரை,ஆனந்து,சுகுமாறன்,சுவாமிநாதன்,சரவணன்,பிரன்னா,தெய்வானை மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திரளான மாணவர்,வாலிபர் ,மாதர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Release of Booklet on Communalism

Sunday, March 2, 2014

மர்மமான முறையில் மாணவி இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி


மதகடிப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரி மர்மமான முறையில் மாணவி இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் மாணவர்கள் வலியுறுத்தல்.

வாலிபர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்

காங்கிர-பாஜக விற்கு மாற்று கொள்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் புதுச்சேரி முழுவதும் மக்களை சந்தித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.புதுச்சேரி காந்திவீதியில் நடைபெற்ற இவ்வியக்கத்தில் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன், முன்னால் பொருளாளர் பிரபுராஜ்,நகரகமிட்டி தலைவர் விஜிய்,மற்றும் ராதாகிருஷ்ணன்,நாகமுத்து,மூர்த்தி,ராஜா உள்ளிட்ட திரளானே வாலிபர்கள் பங்கேற்றனர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி ஆர்ப்பாட்டம்


தலித்மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று பி.சம்பத் புதுச்சேரி அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி ஆர்ப்பாட்டம் தலைமை தபால்நிலையம் எதிரில் நடைபெற்றது.

குறவர் இனமக்களை பழங்குடியினர் என்ற அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும்.இக்கோரிக்கைகளை புதுச்சேரி அரசு இன்னும் காலம் தாழ்த்தினால் அனைத்து தலித் இயக்கங்களையும் முற்போக்கு அமைப்புகளை ஒருங்கினைத்து மிகப்பெரிய போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் என்று புதுச்சேரி அரசை எச்சரித்தார்.

Saturday, March 1, 2014

பாகூர் ஐ.டி.ஐ க்கு மத்திய அரசின் தேசிய தொழிற் கழக அங்கீகாரம் வழங்கக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,பிப்.4-
பாகூர் ஐ.டி.ஐ க்கு மத்திய அரசின் தேசிய தொழிற் கழக அங்கீகாரம் வழங்கக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

பாகூர் ஐ.டி.ஐ க்கு முதல்வர் ,ஆசிரியர், அலுவலக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.ஐடிஐ க்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.ஐ.டி.ஐ யில் எலக்டிரிக்ஷன்,கம்யூட்டர் டாட்ட என்ட்ரி,தையல்பயிற்சி போன்ற பிரிவுகளை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போரட்டம் நடைபெற்றது.


பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில துணைத்தலைவர் செந்தில் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.


வாலிபர் சங்க முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித்,கொம்யூன் செயலளார் பிரவீன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் ப.சரவணன் போராட்டத்தை முடித்து வைத்தார்.இப்போராட்டத்தில திரளான மாணவர்கள்,வாலிபர்கள் பங்கேற்றனர்.