Monday, December 31, 2012

வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடணடியாக மருத்துசிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்

புதுச்சேரி,டிச-31
 பெண்கள் குறித்து பேசிய கருத்தை மதுரை ஆதினம் உடணடியாக திரும்பபெற வேண்டும் என்று மாதர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாகவே தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவகல்லுhரி பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இன்றைக்கு இறந்துள்ளார்.இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இன்றைக்கு இருக்கும் தண்டனை சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.எனவே மத்திய அரசு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை உடனுக்குடன் குற்றவாலிக்கு அதிக பட்சமாக தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும் மேலும் குற்றவாலிக்கு தண்டனை உடனே வழங்குவதற்கு உண்டான பெண்கள்குழுவையும் அமைக்க வேண்டும் என்று இன்றைக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
மதுரை ஆதினம்
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதினம் பெண்கள் ஆடை அணிவது குறித்து கூறிய கருத்தை உடணடியாக திரும்ப பெறவேண்டும்.பெண்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.தங்களுக்கான ஜனநாயக பூர்வமான முடிவுகளை எடுக்கும் உரிi பெண்களுக்கு உள்ளது.ஒரு சில சாதிய அமைப்புகளின் தலைவர்கள் என்று தங்களை கூறிகொள்ளும்  ராமதா° போன்றவர்கள் பெண்கள் குறித்து பேசும் கருத்து சரியில்லை.
புதுச்சேரி வினோதினிக்கு
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காரைக்காலை சேர்ந்த இளம் பெண் வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடணடியாக மருத்துசிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்.இதில் சம்பந்தபட்டுள்ள குற்றவாலிக்கு அதிகபட்ச தண்டணை வழங்க காவல்துறை செயல்படவேண்டும் என்றார்.மேலும் எங்கள் அமைப்பும்,டிஒய்எப்ஐ,எ°எப்ஐ உள்ளிட்ட மாணவர்,வாலிபர் அமைப்புகளுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனவரி 1 செவ்வாய்கிழமை  பொதுமக்களிடம் உண்டியல் மூலம் நிதி வசூலித்து கொடுக்க உள்ளோம்.புதுச்சேரியில் சமீபகாலமாக செயல்படாமல் உள்ள மகளிர் ஆணையத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாணவர்,வாலிபர்,மாதர் சங்கங்களின் பிரதேச நிர்வாகிகள் சுமதி,தெய்வானை,தமிழ்ச்செல்வன்,ப.சரவணன்.ஆர்.சரவணன்,
ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




புதுச்சேரி,டிச-25

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


டில்லியில ஓடும் பேரூந்தில்  பெண்ணை  பாலியல்பலாத்காரம் செய்த குற்றவாலிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்.காரைக்காலை சேர்ந்த இன்ஜினீயர் வினோதினி மீது ஆசிட் வீசிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும்,துhத்துகுடி மாவட்டத்தில் 7 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும்  இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ப.சரவணன்,உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக்குழு கண்வீனர் சுமதி,சமம் பெண்கள் சுயசார்பு இயக்க நிர்வாகிகள் பரிமலா,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் மாதர்,வாலிபர்,மாணவர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் bஐயலக்ஸ்மி,மலர்விழி,விஜயலச்சுமி,பிரபுராஜ்,ஆர்.சரவணன்,கதிரவன்,பா°கர் உள்ளிட்ட திரளனோர் இப்போராட்டத்தில் பங்கேற்று பெண்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி முழக்கமிட்டனர்

Sunday, December 30, 2012

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த டில்லி மாணவிக்கு புதுச்சேரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.


புதுச்சேரி,டிச-30
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த டில்லி மாணவிக்கு புதுச்சேரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

டில்லியில் ஓடும் பேரூந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழந்ததையொட்டி அவரக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ஆகியோர்  சார்பில் கருப்பு சின்னம் அணிந்து மெழகு வத்தியுடன் ஊர்வலமாக சென்று  மவுண அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி பெரியார் சிலை எதிரே துவங்கிய அமைதி ஊர்வலத்திற்கு மாதர் சங்க துணை தலைவர் வி.சுமதி தலைமை தாங்கினார்.சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை,செயலாளர் மாரிமுத்து, வாலிபர் சங்க தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும்  திரளான  மாதர்கள்,வாலிபர்,மாணவர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலம் நேருவீதியை கடந்து கடற்கரை அருகில் அமைந்துள்ள பாரதியார் சிலை முன்பு முடிந்தது.பின்னர் அங்கு ஒரு நிமிடம் இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Monday, December 17, 2012

வாலிபர் சங்க உறுப்பினரை தாக்கிய சமூக விரோதியை கைது செய்யக் கோரி


புதுச்சேரி,டிச-16
வாலிபர் சங்க உறுப்பினரை தாக்கிய சமூக விரோதியை கைது செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கரிகலாம்பாக்கத்தில் வாலிபர் சங்க நடைபயணத்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரபு(எ)மணிகண்டன்,வினோத் ஆகிய இருவாலிபர்களை கூர்மையான ஆயூதங்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத்தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்தும்.உடணடியாக வழக்குபதிவு செய்யக்கோரி இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிஒய்எப்ஜ கிளை செயலாளர் சேகுவேராதாஸ் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன்,துணை தலைவர் தட்சணாமூர்த்தி,சிபிஎம் இடைகமிட்டி செயலாளர் டி.முருகையன்,மற்றும் கொம்யூன் தலைவர் சண்முகம்,செயலாளர் கதிரவன்,இந்திய மாணவர் சங்க பிரதேசசெயலாளர் ஆனந்து,வி.தொ.ச நிர்வாகி ரத்திணவேலு உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

Sunday, December 9, 2012

வாலிபர்சங்க நடைபயணம்: புதுச்சேரியில் சிஐடியு, மாணவர்கள் எழுச்சிமிகு வரவேற்பு



புதுச்சேரி, டிச. 8-
வாலிபர் சங்க நடை பயண குழுவுக்கு புதுச்சேரி நகரத்தில் சிஐடியு சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.வேலைவாய்ப்பு, சுகா தாரம்,சுற்றுச்சூழல் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி யில் நடத்திவரும் நடைபய ணம் இண்டாவது நாளாக கருவடிக்குப்பம் பாரதியார் குயில் தோப்பில் இருந்து துவங்கியது. சித்தானந்தா கோவிலில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு சங் கத்தின் தமிழ்மாநில பொரு ளாளர் எஸ். பாலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் வெண்கொடியை அசைத்து நடைபணத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச் சியில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன், உழவர்கரைநகர செயலாளர் லெனின்துரை, நடராஜன், டிஒய்எப்ஐ பிரதேச நிர்வாகி கள் சந்துரு, ப.சரவணன், இரா.சரவணன், பாஸ்கர், ஆழகப்பன்,கதிரவன் உள் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சாமிப்பிள்ளை தோட்டம், முத்தையாள்பேட்டை, டி.பி தோட்டம் உள்ளிட்ட இடங்களை கடந்து பயணக் குழு புதுச்சேரி நகரத்தை அடைந்தது.சிஐடியு சார்பில் வரவேற்புபுதுச்சேரி காமராஜர் சிலை அருகில் நடைபயண குழுவை சிஐடியு சார்பில் வரவேற்றனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. முருகன் தலைமையில் அதன் நிர்வாகிகள் அளித்த எழுச்சி மிகு வரவேற்பில் ஏராள மானோர் கலந்துகொண்ட னர். முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக் குப்பம், கரிகலாம்பாக்கம் ஆகிய கிராமப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த நடைபயண பிரச்சாரம் பின் னர் பாகூரில் பொதுக் கூட்டத்தோடு நிறை வடைந்தது. எஸ்எப்ஐஇந்திய மாணவர் சங்க பிரதேசக்குழு சார்பில் புதுச்சேரி கல்வித்துறை எதி ரில் நடைபயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதேச செயலா ளர் ஆனந்து, துணைத் தலைவர் ரஞ்சித், நிர்வாகிகள் இன்னரசன், ரஞ்சித், பவித்திரன் உள் ளிட்ட திரளான மாணவர் கள் பயணக் குழுவை வர வேற்றனர்.







புதுச்சேரி,டிச-9
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நடைபயணக்குழுவை மேளதாளத்துடன் வரவேற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டில் இருந்து சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.பாலா தலைமையில் துவங்கிய நடைபயணக்குழு சனிக்கிழமை இரவு பாகூர் வந்தடைந்தது.டிஒய்எப்ஜ பாகூர் கொம்யூன்குழு சார்பில் மேற்குவீதியில் பயணக்குழுவை வரவேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.கொம்யூன் குழு தலைவர் அரிதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பயணக்குழு தலைவர் பாலா, தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,மாநில இணைச்செயலாளர் குணசுந்தரி,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி,தனிகா (எ)காத்தவராயன்,வெங்கடேசன் விவசாய சங்க பிரதேச தலைவர்கள் பத்மநாபன்,ராமசாமி,கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கலியன்,சாம்பசிவம், உள்ளிட்ட திராளானோர் பாங்கேற்று வாலிபர்கள் நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு அளித்தனர்.
கரிகலாம்பாக்கம்
கரிகலாம்பக்கம் நான்கு முனைசந்திப்பில் மேளதாளத்துடன் நடைபெற்ற வரவேற்பு நிகழ்சிக்கு வில்லியனுhர் கொம்யூன் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.செயலாளர் கதிரவன்,கிளை நிர்வாகிகள் அரிதா°,தேவ்ஆனந்து,விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகையன்,ரத்தினவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு வாலிபர்கள் நடைபயணக்குழு வரவேற்றனர்.

வாலிபர் சங்க நடைபயணம் எழுச்சியுடன் துவங்கியது


கொல்லங்கோடு, டிச. 1-மகாத்மா காந்தி தலைமை யிலான அன்றைய காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கமிட்டு சமர்புரிந் தது; சோனியா காந்தி தலை மையிலான இன்றைய காங் கிரஸ் ‘வெள்ளையனே உள் ளே வா’ என்று சிவப்புக்கம் பளம் விரித்து வரவேற்கிறது என்று பாலபிரஜாபதி அடிக ளார் சாடினார். எங்கள் மக்கள் உழைப் பாளிகள்; அமெரிக்காவுக்கு இந்திய நாட்டை அடமானம் வைப்பதை ஒருபோதும் அவர் கள் ஏற்கமாட்டார்கள்; வால் மார்ட் கொள்ளையர்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார் கள் என்றும் அவர் முழக்க மிட்டார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நடைபெறும் நடை பயண பேரி யக்கத்தை துவக்கி வைத்து பேசுகையிலேயே மேற்கண்ட வாறு அவர் குறிப்பிட்டார். “நம் வாழ்வும் நாடும் விற் பனைக்கல்ல” என்ற முழக் கத்தோடு தமிழகத்தின் 8 மையங்களிலிருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நீண்ட நடைபயண பேரியக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிறது. முதலா வது குழுவின் பயணம் குமரி மாவட்டம் கொல்லங்கோட் டில் சனிக்கிழமை துவங்கியது.
வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் செ.முத்துக் கண்ணன் தலைமையிலான இக்குழுவின் நடைபயணத் தை துவக்கி வைத்து, வெண் கொடியை எடுத்துக்கொடுத்து உரையாற்றிய பாலபிரஜாபதி அடிகளார், “ரத்தம் சிவப்பு நிறம். ரத்தம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் என் னைப்பொறுத்தவரை உழைப் பாளிகளின் ரத்தமே உயர்ந்த ரத்தம்; அவர்களது உழைப் பைச் சுரண்டி உட்கார்ந்து சாப்பிடுவோர் ரத்தம் தாழ்ந்த ரத்தம்” என்று குறிப்பிட்டார். எந்த மதமும் சாதியையோ, வன்முறையையோ வலியுறுத்த வில்லை. ஏற்றத்தாழ்வை அங் கீகரிக்கவில்லை. ஆனால் மதத்தின் பெயரால் இங்கு அரசியல் நடத்தப்படுகிறது எனக்குறிப்பிட்ட அவர், இன் றைக்கு கோயில்களும் மடங் களும் மதவாதிகளின் கைகளி லும் சாமியார்களின் கைகளி லும் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றுக் குள்ளும் புகுந்து சுத்தப்படுத் தும் பணியை வாலிபர்கள் மேற் கொள்ள வேண்டுமென்றும் கூறினார். நாடு முழுவதுமுள்ள சபிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை கைகளில் ஏந்தி தேசம் காக்க நெடும்பய ணம் புறப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தின் போராட்டம் இன் னும் மகத்தானது என்று குறிப் பிட்ட அவர், ஏழைகளுக்காக நீதிகேட்டு சாதி கடந்து போராட வேண்டுமென்றும், சாதி என் பது ஒரு பேய் என்றும் சாடினார்.மக்கள் கோரிக்கைகளுக் காக தமிழக இளைஞர்களின் நடைபயணம் துவங்கியுள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதி யான கொல்லங்கோடு மகத் தான போராட்ட பூமி என்று குறிப்பிட்ட அவர், இந்தக்கோட் டில் துவங்கிய எந்த இயக்க மும் தோற்றதாக சரித்திரமில் லை என்று குறிப்பிட்டார். திரு வாங்கூர் மன்னனை எதிர்த்து, அவனது அதிகாரத்தையும் படைபலத்தையும் எதிர்த்து மக்கள் பலத்தோடு வைகுந்தர் போராடியதை நினைவு கூர்ந்தார். நடைபயண துவக்க நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். முருகேசன், கொல்லங்கோடு வட்டாரச் செயலாளர் விஜயமோகனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயணக்குழுவில் சங்கத் தின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் புஷ்பதாஸ், செயலாளர் சசி, பொருளாளர் எபிலைசியஸ் ஜோயல், இணைச் செயலாளர் ரெஜீஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற் றனர்.நடைபயணம் அங்கிருந்து புறப்பட்டு நித்திரவிளை, புதுக் கடை வழியாக மதியம் வெட்டு வெந்நியை அடைந்தது. மாலை யில் அங்கிருந்து குழித்துறை, பாகோடு, மேல்புறம் வழியாக அருமனையை அடைந்தது. பயணக்குழு சென்ற இடங்க ளில் சிபிஎம், சிஐடியு, விவசா யிகள் சங்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு வெகுஜன இயக்கங்களின் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது.மாலையில் அருமனை யில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் மாநில தலைவர் முத் துக்கண்ணன் மற்றும் மாவட் டத் தலைவர்கள் பேசினர்.நடைபயண இயக்கம் ஞாயிறன்று காலை அருமனை யிலிருந்து புறப்பட்டு குலசேக ரம், திருவட்டார், ஆற்றூர் வழி யாக மதியம் சுவாமியார் மடத் தை அடைகிறது. மாலையில் அங்கிருந்து இரவிபுதூர்கடை, நட்டாலம் வழியாக கருங்கலில் நிறைவடைகிறது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெறு கிறது.