Thursday, February 28, 2013

மொட்டைத்தொப்பு பகுதியில் செப்டிக் குழாய் சீர் செய்யப் பட்டது .

மொட்டைத்தொப்பு பகுதியில் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய இயக்கத்தின் எதிரொலியாக இன்று காலை 10 மணிக்கு செப்டிக் குழாய்  சீர் செய்யப் பட்டது .

DYFI COMRADE PROVIDES BUTTER MILK TO PUBLIC NEAR AJANTHA SIGNAL, PUDUCHERRY

DYFI COMRADE PROVIDES BUTTER MILK TO PUBLIC NEAR AJANTHA SIGNAL, PUDUCHERRY

Monday, February 18, 2013

புதுச்சேரியில் காதலர்களை அவமதிக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு

புதுச்சேரி, பிப். 15-புதுச்சேரியில் காதலர் களை அவமதிக்கும் மத அடிப்படைவாதிகளை வாலிபர், மாணவர் சங்கத்தி னர் முற்றுகையிட்டனர்.புதுச்சேரி பாரதி பூங்கா வில் வியாழக்கிழமை (பிப். 14) காதலர் தினத்தை கொண் டாடும் வகையில் காதலர் கள் பூங்காவிற்கு வரும் போது அவர்களிடம் இந்து முன்னனியை சேர்ந்தவர்கள் ரகளையில் ஈடுபட உள் ளதை அறிந்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச பொருளாளர் ஆர். சரவணன், நகர கமிட்டி நிர்வாகிகள் அழகப்பன், பிர தாப், நாகமுத்து, இந்திய மாண வர் சங்க பிரதேச செயலா ளர் ஆனந்து, துணை தலை வர் ரஞ்சித் ஆகியோர் தலை மையில் திரளான வாலிபர் கள் பாரதி பூங்காவிற்கு சென்று காதலர் தினத்தை வரவேற்று தட்டிகளை ஏந்தி முழக்க மிட்டனர்.அப்போது அவ்விடத் திற்கு வந்த இந்து முன்ன ணியை சேர்ந்தவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தங்களது நோக் கம் நிறைவேறாததால் இந்து முன்னணியினர் அவ்விடத் தில் இருந்து நடையை கட்டி னர். உடனே அவ்விடத்திற்கு வந்த காவல்துறையிடம் காத லர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.சென்ற ஆண்டு இதே போல் பாரதி பூங்காவில் காதலர்களிடம் இந்து முன் னணியினர் ரகளையில் ஈடு பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புதுச்சேரி முழு வதும் வாலிபர் சங்க கிளை களில் காதலர் தினத்தை முன் னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Wednesday, February 13, 2013

நரிகுறவர் பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி


புதுச்சேரி,பிப்-12
இலாஸ்பேட்டை நரிகுறவர் பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை விமான நிலையம் பின்பு உள்ள நரிகுறவர் பேட்டையில் வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும்.தெரு விலக்குகளை சீரமைத்திட வேண்டும்.சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.கடற்கரை சாலையில் புதிதாக அமைத்துள்ள அங்காடியில் பாசிமணி,ஊசிமணி விற்க இடம் அமைத்து கொடுக்க வேண்டும்.மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள நரிகுறவர் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கேரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிஒப்எப்ஐ பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுவை தலைவர் தலித்சுப்பையா,டிஒய்எப்ஐ மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ,பிரதேச செயலாளர் சரவணன்,மாதர் சங்க துணை தலைவர் சுமதி,எல்ஐசி முகவர் சங்க தலைவர் ராம்ஜி எஸ்எப்ஐ செயலளார் ஆனந்து உள்ளிட்ட திரளான வாலிபர் சங்க நிர்வாகிகளும்,குறவர் இணமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Saturday, February 2, 2013

D Y F I (YOUTH) INVITES PUDUCHERRY LIFTER

D Y F I (YOUTH) INVITES PUDUCHERRY LIFTER WHO WON INTERNATIONAL COMPETITION HELD AT MAHARASHTRA LAST WEEK