Thursday, November 13, 2014

மாணவ,மாணவிகள் மீது தடியடியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 12

புதுச்சேரி மதகடிப்பட்டில்தனியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரி புதுச்சேரி பல்கலைக் கழகத்தில்அங்கீகாரம் பெற்று இயங்கிவருகின்றது. இங்கு கடந்த 2013-14ம் ஆண்டு சேர்ந்த 82 மாணவ, மாணவிகள் கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதினர். அதே கால கட்டத்தில் தேர்வு எழுதிய பிற கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுமுடிவுகள் வெளியிட்டுள்ள நிலையில், இக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.இது தொடர்பாகமாணவர்கள் பல்கலைக்கழகம்சென்று கேட்டபோது, பல்கலைக்கழகம் நெட் (தேசியதிறனறித்தேர்வு) முடித்த 7ஆசிரியர்கள் இருக்கவேண்டிய கல்லூரியில் 4 பேர்மட்டுமே உள்ளனர். இதனால் அக்கல்லூரிக்கு தேர்வு முடிவுகள் வெளியிட முடியாதுஎன்று தெரிவித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்டமாணவர்கள் கடந்த 10தினங்களாக திருபுவனைகாவல் நிலையத்தில் புகார்அளிக்க சென்றனர். ஆனால்புகார் ஏற்கப்படவில்லை.புகார் ஏற்கப்படாததை கண்டித்தும், உடனடியாக தேர்வுமுடிவுகளை வெளியிடக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் நேற்றுமுன்தினம்சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது போலீசார் மாணவ,மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதனை கண்டித்து இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் நேற்று தலைமை தபால் நிலையம் எதிரில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன்தலைமை தாங்கினார். இதில்துணை தலைவர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.இதில் சங்க நிர்வாகிகள்மற்றும் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

Sunday, August 3, 2014

ரெயில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 150 பேர் கைது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரெயில் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் ரெயில் மறியல் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்காக இன்று அவர்கள் தூய இருதய ஆண்டவர் கோவில் அருகே ஒன்று கூடினர்.

அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு வாலிபர் சங்க தலைவர் சரவணன், மாணவர் சங்க தலைவர் அருண்குமார், மாதர் சங்க தலைவி தெய்வானை ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க மாநில செயலாளர்கள் சரவணன், ஆனந்த், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் ரஞ்சித், தமிழ்செல்வன், தட்சிணாமூர்த்தி, சுமதி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலமாக வந்த அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் வந்து சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த ரெயிலின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி கட்சிக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதைக்கு எதிராகவும் , பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி


சென்ற 06 ஜூலை 2014 அன்று புதுச்சேரி பாகூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் குழு சார்பில் கடலூர் தியாகிகள் தோழர்கள் குமார் , ஆனந்தன் நினைவில் போதைக்கு எதிராகவும் , பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தோழர் குமாரின் தாயார் திருமதி சாவித்திரி அவர்கள் கலந்துக் கொண்டார்கள். முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Youth and College students demanding 25 p.c. quota

Several hundred students in government colleges across the city on Thursday boycotted classes and conducted a dharna in front of the Pondicherry Central University demanding the implementation of 25 per cent reservation of seats to the local students of Puducherry.

The students also urged the Union Minister for Human Resources Development to order a probe into alleged irregularities committed by the university.

On Thursday morning, gate protests were held in front of eight colleges. The student leaders of the Student Federation of India(SFI) and Democratic Youth Federation of India (DYFI) addressed the meetings.
Later, over 1,000 students took out a rally from Pondicherry Engineering College to the Pondicherry Central University administrative campus. 

The march was stopped by police posted at the entrance to the university premises. Several students tried to push forward even as police used force to keep them at bay. In the ensuing melee, some students managed to gate-crash into the premises. 

Around 20 protestors were arrested and released later in the evening. 

The students from Bharathidasan Government College for women, Tagore Arts College, Pondicherry University Community College, Motilal Nehru Government Polytechnic, Government Women’s Polytechnic College, Indira Arts and Science College, Perunthalaivar Kamarajar Arts and Science College, Rajiv Gandhi Arts College also participated. 

According to the students, when the Pondicherry Central University was established in 1985, the then authorities assured of employment opportunities to the family members of the agriculturalists who donated land for the establishment of university.

They also assured that 25 per cent reservation would be provided for students from Puducherry in all courses offered in the university.

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகை

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.740 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, சட்டக் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

Friday, June 20, 2014

ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது, D Y F I தொடர் முயற்சிக்கு வெற்றி

ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது, D Y F I தொடர் முயற்சிக்கு வெற்றி

புதுச்சேரி அஜந்தா சிக்னலில் ஹைமாஸ் விளக்கு இயங்கவில்லை என்ற மனு சம்பந்தமாக இந்திய ஜனநாயக சங்க தோழர்கள் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு .கனகராஜ் அவர்களை மீண்டும் சந்தித்து பேசுகையில் இன்னும் 10 நிமிடத்தில் விளக்கு எரியும் என்று கூறினார் .ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது . பிறகு அப்பகுதி மக்கள் வாலிபர் சங்க தோழர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Saturday, June 14, 2014

Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee demands the state government for CBI Enquiry

Students' Federation of India and the Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee demands the state government for CBI Enquiry in the case of prostitution mafia gang which was recently arrested and involving minor girl students in prostitution from a economically poor and in a weaker section.
 
பெறுநர்,                                                                                          13/06/2014.
உயர்திரு.முதலமைச்சர்.அவர்கள்,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.
பொருள்:- பள்ளி சிறுமிகள்பாலியல்தொழிலுக்கு உட்படுத்திய வழக்கை
                  சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துறைக்க கோருதல் தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்! புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் விபச்சார கும்பல் ஒன்று பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இச்செய்தி புதுச்சேரியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவத்தில் பல முக்கிய புள்ளிகள், பிரமுகர்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகிறது. மேற்படி விபச்சார கும்பல் பெரும்பாலும் வறுமை நிலையை பயன்படுத்தியும், ஆசைகாட்டியும் மாணவிகளை இது போன்ற மிகமோசமான பாலியல் இழிதொழில் புதைகுழிக்கு பள்ளிச்சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறி வருவது வேதனையளிப்பதாகும். சிறுமிகள் மீதான பாலியல் வழக்கில் அதில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கற்பழிப்பு, குழந்தைகள் மீதானபாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறோம். 
• இவ்வழக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற புதுச்சேரி அரசு இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம்ஒப்படைக்கவேண்டும்.
• கேரளாவில்நடைபெற்றுவரும்சிறுமி சுரியநல்லி கற்பழிப்பு வழக்கை போன்று இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படவேண்டும். 
• விசாகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் 1996ல் வழங்கிய தீர்ப்பு மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ்
அனைத்து கல்விநிலையங்களிலும் பாலியல் புகார் குழுக்களை
அமைத்திட வேண்டும்.
• 2013ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வர்மா குழுவின் பரிந்துரையின் படி இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் மூலமாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தாமதமின்றி கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம். 
•குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தை முழுமையாக செயல்படுத்த கேட்டுகொள்கிறோம்.
மேலும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடைச்சட்டம், பெண்களை இழிவுபடுத்தும் தடைச்சட்டம், வரதச்சனை தடைச்சட்டம் போன்ற பெண்கள் தொடர்பான சட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும். பெண்கள் தொடர்பான வழக்குகளை உரிய முறையில் கையாள்வதற்கு காவல் துறையினருக்கு உரிய பயிற்சி அளித்திடவும்தங்களை கேட்டுகொள்கிறோம்.
                                            நன்றி,
இவண்,
 செயலாளர்,                                                       செயலாளர்,
 அ. ஆனந்த்                                                         ப.சரவணன் 
இந்திய மாணவர்சங்கம்(SFI).     இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்(DYFI).

கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் முக்கியமான மக்கள் புழக்குமிடம் புதுவை புதிய பேருந்து நிலையம் இவ்விடத்தில் முன்பு இயங்கி வந்த இலவச கழிவறை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் கட்டப்படும் என்று கூறி இடிக்கப்பட்டது .

இது வரை கழிவறை கட்டப்படவில்லை வெளியூரில் இருந்து வரும் மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலைமையுள்ளது . 1 பாக்கெட் தண்ணீர் விலை ரூ 2 மட்டுமே , ஆனால் அதை கழிக்க ரூ 3 செலவு வேண்டியுள்ளது என கருதி மக்களில் சிலர் மறைவாக கழிவுகளை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் . இதனால் சுகாதாரமான நிலையில்லா உருவாக்கப்படுகிறது.

எனவே புதுச்சேரி நகராட்சி உடனடியாக முன்பு இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தருமாறு வலியுறுத்தி இன்று காலை 10 அளவில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது . இதில் பொது மக்கள் கையெழுத்து இட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் .

Wednesday, June 11, 2014

கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி அஜந்தா சிக்னல் ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு மாதமாக இயங்கவில்லை. மிக நெரிசலான போக்குவரத்து பாதை வெளிச்சமில்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது . எனவே பொதுப்பணித்துறை உடனடியாக தலையீடுமாறு கையெழுத்து இயக்கம். இவ்வியக்கத்தில் நகர செயலர் அழகப்பன் , நகரக்குழு உறுப்பினர் பிரபாகரன் , கிளை தோழர்கள் கலந்துக்  கொண்டனர் .

Wednesday, June 4, 2014

பாகூர் கொம்யூனில் உள்ள 130ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி

புதுச்சேரி,ஜூன்.3-
பழமை வாய்ந்த பாகூர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி  பிரச்சாரம் நடைபெற்றது. 
 
புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூனில் உள்ள 130ஆண்டுகள் பழமை வாய்ந்த  அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும்,பெண்கள் ஆரம்பள்ளியிலும் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பாகூர் காமராஜர் நகரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
 
வாலிபர் சங்க பிரதேச செயலாளர் பி.சரவணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகி வடிவேல், பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் சரவணன், பெருமாள், செல்வராசு ,கவுதம் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பாகூர் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாணவர்கள் தட்டிகளை ஏந்தியவாரு  பங்கேற்றது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Thursday, May 29, 2014

கட்டாய கல்விஉரிமை சட்டத்தை அமல்படுத்தகோரி கல்வித்துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்.

புதுச்சேரி,மே.29-
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தகோரி  கல்வித்துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்.




தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010  கீழ் ஏழைஎளிய மாணவர்களுக்கு 25விழுக்காடு அரசு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்தி,கட்டணங்களை முறைபடுத்த உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நடப்பாண்டே கட்டண நிர்ணய குழுவை அமைத்திட வேண்டும்.புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைத்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் எதிரில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித்,வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் பி.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பா°கர்,ஜெயராஜ்,சத்தியா,ஜெயலட்சுமி உள்ளிட்ட திரளான மாணவர்கள் வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

இயக்குனர் உறுதி


கல்விதுறை இயக்குனர் வல்லவனை முற்றுகையிட்ட மாணவர்களிடம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25விழுக்காடு இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் முற்றுகை போராட்டம் கைவிட்டனர்.மாணவர்கள்,வாலிபர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Wednesday, May 21, 2014

நரிக்குறவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி ஐஜி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நரிக்குறவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை  கோரி ஐஜி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.


புதுச்சேரி கடற்கரை சாலையில் நரிக்குறவர்கள் கூட்டம், கூட்டமாக தங்கி பலூன்,  காற்றடித்த பொம்மைகள் போன்றவற்றை விற்று வருகின்றனர். இந்நிலையில் இரவு  கடற்கரை சாலையில் ரோந்து வந்த போலீசார் நரிக்குறவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு  இடையூறாக உள்ளதாக வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அவர்கள்  வைத்திருந்த  
பலூன், பிளாஸ்டிக் பொம்மைகளில் ஊசி மூலம் குத்தி ஓட்டையாக்கி வீணாக்கினர்.  

கடற்கரை சாலையில் இருந்துகிளம்பிச்செல்லாவிட்டால் நாள்தோறும் இந்த  நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு செய்த போலீசார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க   வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  பிரதேசதலைவர்  சரவணன், நரிக்குறவர் நலவாழ்வு சங்க தலைவர் சாரங்கபாணி, நிர்வாகிகள் சங்கர்,  முரளி, சக்கரபாணி, வள்ளி, கார்த்திகா ஆகியோர் ஐஜி அலுவலகத்தை முற்றுகையி ட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நரிகுறவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வீணாகிய பொருட்களை  நரிக்குறவர்கள் ஐஜி அலுவலகம் முன்பு கொட்டி கோஷம் எழுப்பினர். 


இதுகுறித்து  கேள்விபட்ட  சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங் அங்கு வந்து  அவர்களை சமாதானப்படுத்தினார்.  அப்போது தேசியளவில் நடைபாதை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என  சட்டம் உள்ளது. ஆனால் போலீசாரே இந்த  செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சீனியர் எஸ்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப் பீடுவழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து நரிக்குறவர்கள் அங்கிருந்து  கலைந்துசென்றனர். இதனால்  புதுச்சேரி
 
ஐஜிஅலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு

Tuesday, May 13, 2014

பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் டி.கிருத்திகா

பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அளவில் நடைபாதை வியாபாரியின் மகள் டி.கிருத்திகா 1200க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

இதன் மூலம் அவர் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி டி.கிருத்திகா பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-185, ஆங்கிலம்-185, இயற்பியல்-194, வேதியியல்-193, கணிதம்-196, உயிரியல்-189.

இதுகுறித்து கிருத்திகா கூறியது:

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். எனக்கு மருத்துவராக ஆசை. எனவே, எங்களைப் போல ஏழை மாணவர்கள் அதிக பணம் கொடுத்து தனியார் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடியாது. எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் எனது ஆசை நிறைவேறும் என்றார். இம் மாணவியின் தந்தை தங்கவேல் பெரிய மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரம் செய்து வருகிறார்.

தனது மகளின் மேல்படிப்பு குறித்து இவர் கூறுகையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் நான் சேர்த்து படிக்கத் தயாராக உள்ளேன். முதல்வரும், மாநில அரசும் எனக்கு தேவையான நிதியுதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

வாலிபர் சங்கம் பாராட்டு

மாணவி டி.கிருத்திகாவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேசத் தலைவர் ஆர்.சரவணன், நிர்வாகிகள் பாஸ்கர், விஜய், அழகப்பன், நாகமுத்து, மாதர் சங்க நிர்வாகி சத்யா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்

Monday, March 24, 2014

புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகை.

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை திருட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகை.

புதுச்சேரி வைசியால்வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் சுப்புரமணியன் தொடர்ந்து பாலியல் சீன்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்திற்கு புகார் கடிதம் வந்துள்ளது.இப்புகாரின் அடிப்படையில் சமுகநலத்துறை அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித்,செயலாளர் ஆனந்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் அதிகாரிகளை சந்தித்து நடந்த சம்பவத்திற்கு காராணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.

முற்றுகை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திராளான மாணவர்கள் இலாஸ்பேட்டை அவ்வை நகரில் உள்ள ஆசிரியர் சுப்புரமணியனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

போலிஸார் வழக்கு
ஆசிரியர் வீட்டு அருகே முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித் ஆகியோர் மீது திருட்டு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளரின் தூன்டுதலாலே இப்பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாணவர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வகுப்பு புறக்கணிப்பு
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும் மாணவர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை உடனே திரும்ப பெறக்கோரி புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்கானிப்பாளர் அலுவலகத்தை சட்டகல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவரும்,சட்டகல்லூரி இறுதியாண்டு மாணவருமான சரவணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் உறுதி
முதுநிலை கண்கானிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சங்க நிர்வாகிககள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்ப பெறப்படும் எனறு உறுதி அளித்ததின் பேரில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.இதேப்போல் மோதிலால்நேரு பால்டெக்னிக் மாணவர்களும் வகுப்பு புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொய்வழக்குகளை திரும்பக்கோரி புதுச்சேரியில் ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மாணவர் சங்க தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பக்கோரி புதுச்சேரியில் ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள சுசிலாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் தொடர்ந்து அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதை கண்டித்து லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் சுப்ரமணியனின் வீட்டு எதிரே மாணவர்கள்,மாதர் அமைப்பைச்சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித் ஆகியோர் மீது ஆசிரியர் சுப்ரமணியன் திருட்டு புகார் கொடுத்துள்ளார்.


அதனை தொடர்ந்து ஆசிரியருக்கு ஆதரவாக இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும்.போடப்பட்டுள்ள திருட்டு வழக்கை உடனே திரும்ப பெறக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
 


புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் அருண் தலைமை தாங்கினார்.பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் லெனின்துரை,ஆனந்து,சுகுமாறன்,சுவாமிநாதன்,சரவணன்,பிரன்னா,தெய்வானை மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திரளான மாணவர்,வாலிபர் ,மாதர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Release of Booklet on Communalism

Sunday, March 2, 2014

மர்மமான முறையில் மாணவி இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி


மதகடிப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரி மர்மமான முறையில் மாணவி இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் மாணவர்கள் வலியுறுத்தல்.

வாலிபர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்

காங்கிர-பாஜக விற்கு மாற்று கொள்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் புதுச்சேரி முழுவதும் மக்களை சந்தித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.புதுச்சேரி காந்திவீதியில் நடைபெற்ற இவ்வியக்கத்தில் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன், முன்னால் பொருளாளர் பிரபுராஜ்,நகரகமிட்டி தலைவர் விஜிய்,மற்றும் ராதாகிருஷ்ணன்,நாகமுத்து,மூர்த்தி,ராஜா உள்ளிட்ட திரளானே வாலிபர்கள் பங்கேற்றனர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி ஆர்ப்பாட்டம்


தலித்மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று பி.சம்பத் புதுச்சேரி அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி ஆர்ப்பாட்டம் தலைமை தபால்நிலையம் எதிரில் நடைபெற்றது.

குறவர் இனமக்களை பழங்குடியினர் என்ற அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும்.இக்கோரிக்கைகளை புதுச்சேரி அரசு இன்னும் காலம் தாழ்த்தினால் அனைத்து தலித் இயக்கங்களையும் முற்போக்கு அமைப்புகளை ஒருங்கினைத்து மிகப்பெரிய போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் என்று புதுச்சேரி அரசை எச்சரித்தார்.

Saturday, March 1, 2014

பாகூர் ஐ.டி.ஐ க்கு மத்திய அரசின் தேசிய தொழிற் கழக அங்கீகாரம் வழங்கக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,பிப்.4-
பாகூர் ஐ.டி.ஐ க்கு மத்திய அரசின் தேசிய தொழிற் கழக அங்கீகாரம் வழங்கக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.

பாகூர் ஐ.டி.ஐ க்கு முதல்வர் ,ஆசிரியர், அலுவலக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.ஐடிஐ க்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.ஐ.டி.ஐ யில் எலக்டிரிக்ஷன்,கம்யூட்டர் டாட்ட என்ட்ரி,தையல்பயிற்சி போன்ற பிரிவுகளை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போரட்டம் நடைபெற்றது.


பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில துணைத்தலைவர் செந்தில் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.


வாலிபர் சங்க முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித்,கொம்யூன் செயலளார் பிரவீன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் ப.சரவணன் போராட்டத்தை முடித்து வைத்தார்.இப்போராட்டத்தில திரளான மாணவர்கள்,வாலிபர்கள் பங்கேற்றனர்.

Thursday, January 30, 2014

சாதி மத மோதலை எதிர்த்து புதுச்சேரியில் வாலிபர்கள் மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம்

புதுச்சேரி,ஜன.30-

                        சாதி மத மோதலை எதிர்த்து புதுச்சேரியில்
வாலிபர்கள் மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.

                     புதுச்சேரியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.சாதி மத மோதலை தடுத்திட வேண்டும்.போதை வன்முறை கலாச்சாராத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும்.பெண்கள் மீதான வன்முறையை தாக்குதலை தடுக்க போதுமான  நடவடிக்கையை  எடுக்க வேண்டும்.கல்வி வியாபாரத்தை மாநில அரசு தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இலாஸ்பேட்டை,மதடிப்பட்டு,கரையாம்பத்தூர்,கரியமாணிக்கம் ஆகிய நான்கு மையங்களில் இருந்து இப்பிரச்சாரம் துவங்கப்பட்டது.

லாஸ்பேட்டை 
                                                             இலாஸ்பேட்டை நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை எதிரே துவங்கிய இப்பிரச்சாரத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க முன்னால் செயலாளர் லெனின்துரை சைக்கிள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.முன்னால் பொருளாளர் பிரபுராஜ் வாழ்த்தி பேசினார்.நிர்வாகிகள் பாஸ்கர்,அழகப்பன்,ஜீவாரஞ்சித் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதகடிப்பட்டு
                                      மதகடிப்பட்டில் துவங்கிய சைக்கிள் பிரச்சாரத்திற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்க பிரதேச துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.  நிர்வகிகள் கார்க்கி,கவியரசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
கரையாம்பத்தூர்

                                    பாகூர் கொம்யூன் கரையாம்பத்தூரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஜ பிரதேச செயலாளர் பி.சரவணன்,எஸ்எப்ஐ நிர்வாகி ஜெயராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.பிரச்சாரத்தை வாலிபர் சங்கத்தின் முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.நிர்வாகிகள் அரிதாஸ்,பிரவீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
                            
கரியமாணிக்கம்
                                                           கரியமாணிக்கம் நான்கு முனைச்சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஐ பொருளாளர் டி.கதிரவன்,மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண்குமார்  ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.நிர்வாகிகள் சண்முகம்,திவானந்து உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மணவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

நான்கு முனையில் இருந்து துவங்கிய சைக்கிள் பிரச்சாரம் இறுதியாக மாலையில் ,புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே அனைவரும்  சங்கமித்தனர்.பின்னர் அங்கு சாதி மத மோதலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது.இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு சைக்கிள் பிரச்சாரத்தை முடித்து வைத்து பேசினார்.

Friday, January 17, 2014

ஆரம்ப சுகாதாரநிலையத்தில் புதர் போல்கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் புதர் போல்கிடந்த குப்பைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இலாஸ்பேட்டை பொங்கள் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

இந்திய மாணவர் சங்கமும்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
இலாஸ்பேட்டை அசோக்நகரில் ற  நான்காம் ஆண்டு பொங்கள் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் மாவட்ட நீதிபதி மேரி அன்செலம் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், அப்பகுதி பெண்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை ,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,வாலிபர் சங்கத்தின் பிரதேச  தலைவர் இரா.சரவணன்,துணைத்தலைவர் பாஸ்கர், பொருளாளர் கதிரவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் அப்பகுதியை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

முத்தியால்பேட்டை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

முத்தியால்பேட்டை வ.ஊ.சி நகரில் நடைபெற்ற விளையாட்டுபோட்டி பரிசளிப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகி மணிகண்டன் தலைமை தாங்கினார்.வாலிபர்கள் நவீன், ராஜசூர்யா,சந்துரு,பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியூ துணைத்தலைவர் ராஜாங்கம்,வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் , துணைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று ஓட்டபந்தயம்,உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இவ்விழாவில் அப்பகுதியைசேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

Monday, January 6, 2014

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுவையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுவையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மக்கள் விறகுகளை பயன்படுத்தி சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக விறகுகளை மூட்டி மண்சட்டியில் சமையல் செய்யும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரச் செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கச் செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, January 1, 2014

போதை எதிர்ப்பு உறுதிமொழி - 2014

புத்தாண்டு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முத்தியாள்பேட்டை வ.ஊ.சி நகர் கிளையின் சார்பில்
போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன், நகர துணை தலைவர் நாகமுத்து ,கிளைநிர்வாகிகள் நவீன்,அருண் , பிரபாகரன் ,ஷண்முகவேல்  உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.