Tuesday, March 27, 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை


புதுச்சேரி,மார்ச்-26

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை புதுச்சேரியில் நடைபெற்றது.
வாலிபர்,மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி வினோபா நகர் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை (மார்ச்-25) நடந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். காலை 9மணிக்கு துவங்கிய இப் பயிற்ச்சி பட்டறையில் தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வின் போது எளிய முறையில் மதிப்பென்கள் பெறுவதற்கு ஆசிரியர்கள் பயிற்ச்சி நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,துணை தலைவர் சரவணன்,கிளை தலைவர் அந்துவான்,செயலாளர் லாமார்க்,எ°.எப்.ஐ பிரதேச செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.

பாகூர் பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும்


புதுச்சேரி,மார்ச்-26

பாகூர் பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று வாலிபர் சங்க கொம்யூன் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் கமிட்டி மாநாடு பாகூரில் உள்ள பகத்சிங் படிபகத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கொம்யூன் கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.மாநாட்டை பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்துவக்கிவைத்து பேசினார்.கொம்யூன் செயலாளர் அரிதா° வேலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். பிரதேச துணை தலைவர் சரவணன் வாழ்த்தி பேசினார்.இம்மாநாட்டில் புதிய கொம்யூன் தலைவராக ரா.வெங்கடேசனும்,செயலாளராக வ.அரிதாசும்,பொருளாளராக தணிகா உள்ளிட்ட 15பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யயப்பட்டனர்.
பாகூர் கொம்யூனில் நுhறுநாள் வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.கொம்யூனில் உள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து நிரந்தர பணியாக மாற்ற வேண்டும்.பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும்.பாகூரில் மருத்துவமணையின் தரம் உயர்த்தி 24 மணிநேரமும் செயல்படுகின்ற மருத்துவமணையாக மாற்ற வேண்டும்.விளைநிலங்களை ரியல் எ°டேட்டாக மாற்றப்படுவதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Saturday, March 24, 2012

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்



Puducherry 23-March-2012,DYFI Town Committee conducted Bhagath Singh,Rajaguru,Sugadev 81st anniversary day near Ajantha Signal,Puducherry

புதுச்சேரி 23 மார்ச் 2012 ,
மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் D P தோட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.இப்பெயர்பலகை திறப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் நகர செயலர் பார்த்தசாரதி தலைமை தாக்கினார் ..பிரதேச பொருளாளர் பிரபுராஜ்..பிரதேச துணை தலைவர் சரவணன் ,நகர தலைவர் அழகப்பன் ,பொருளாளர் விஜி ,கமிட்டி உறுப்பினர்கள் வெற்றிவேல், ஜேம்ஸ் , அந்துவன் ,முருகன் , உழவர்கரை நகர செயலர் பாஸ்கரன் ,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.கிளை தோழர்கள் தமிழரசன் ,நரேன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மற்றும் பகுதி மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Tuesday, March 13, 2012

புதுச்சேரி நகரபகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது

புதுச்சேரி,மார்ச்-12
புதுச்சேரி நகரபகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகர கமிட்டி மாநாடு முதலியார் பேட்டையில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கமிட்டியின் தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.மாநாட்டை துவக்கிவைத்து பிரதேச தலைவர் சந்துரு பேசினார்.வேலை அறிக்கையை சங்கத்தின் செயலாளர் பார்த்தசாரதி தாக்கல் செய்தார்.சங்கத்தின் பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,சிஐடியு நிர்வாகிகள் மது,மதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.டிஒய்எப்ஐ பிரதேச செயளாலர் தமிழ்ச்செல்வன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி தலைவராக அழகப்பன்,செயலாளராக பார்த்த சாரதி,பொருளாளராக விஜிய் உள்ளிட்ட 11பேர் கொண்ட நகரகமிட்டி தேர்வு செய்யப்பட்டது.மாநாட்டில் நகரபகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த வேண்டும்.முத்தியாள்பேட்டை கசாப்புகாரன் தோப்பில் வசித்த மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வேண்டும்.அரியாங்குப்பம் சண்முக நகரில் கழிவுநீர் வாய்க்காள்,சாலைவசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநட்டில் வலியுறுத்தப்பட்டது

Sunday, March 11, 2012

புதுச்சேரி நகரகமிட்டி மாநாட்டை விலக்கி தெருமுனைப்பிரச்சாரம்


புதுச்சேரி,மார்ச்-5
தெருமுனை பிரச்சாரம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாட்டை விலக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.அரியாங்குப்பத்தில் துவங்கிய பிரச்சாரம் முதலியார்பேட்டை,நெல்லித்தோப்பு,சின்னமணிகூண்டு,நேருவீதி,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் டிஒய்எப்ஐ பிரதேச செயலாயர் தமிழ்ச்செல்வன்,நகரகமிட்டி தலைவர் சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று பேசினாகள்.