Friday, June 1, 2012

புதுச்சேரி,மே-24
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்துள்ள பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் வாலிபர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நான்காம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மக்களுக்கு கொடுத்துள்ள பரிசாக  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50பைசா உயர்த்தியதை கண்டிக்கும் வகையில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் புதனன்று புதுச்சேரி சட்டமன்றம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு இனிப்பு மிட்டாய் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.மத்திய அரசின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு நடந்த நிகழ்சிக்கு டிஒய்எப்ஐ நகரகமிட்டி செயலாளர் சாரதி தலைமை தாங்கினார்.பிரதேச தலைவர் சந்துரு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.பிரதேச பொருளாளர் இரா.சரவணன்,உழவர்கரை தலைவர் பாஸ்கர்,முன்னாள் பொருளாளர் பிரபுராஜ்,மற்றும் அன்துவான்,எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இந்த நுhதன நிகழ்சியில் பங்கேற்றனர்.இனிப்பை பெற்றுகொண்ட அணைவரும் தங்கள் எதிர்ப்பை மத்திய காங்கிரஸ் அரசு மீது பதிவு செய்தது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

No comments:

Post a Comment