Tuesday, August 6, 2013

சேது சமூத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாராளுமன்ற சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

புதுச்சேரி,ஆக-4

சேது சமூத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாராளுமன்ற சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழகம் ,புதுச்சேரி கடலோர மாவட்டங்களின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் சேது சமூத்திர கால்வாய் திட்டத்தை உடணடியாக நிறைவேற்றித்தரக்கோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கங்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி டில்லி பாராளுமன்ற சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் ஆட்டோ மூலம் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.நகரகமிட்டி இணை செயலாளர் பிரதாப்,பிரதேச துணை தலைவர் பாஸ்கர்,உழவர்கரை கமிட்டி நிர்வாகி யோகராஜ்,சுந்தர், மணிகண்டன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.அண்ணாசிலை எதிரே துவங்கிய பிரச்சாரம் ,முத்தியாள்பேட்டை,சோலைநகர்,வைத்திகுப்பம்,மொட்டைதோப்பு உள்ளிட்ட பகுதிகளில்
நடைபெற்றது.

No comments:

Post a Comment