Friday, November 22, 2013

புதுச்சேரி பஞ்சாலைகளை புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி,நவ.22-
புதுச்சேரி பஞ்சாலைகளை புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஏஎப்டி,சுதேசி,பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளை நவீனபடுத்த ரூ.500கோடி நிதியை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும்.மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி பஞ்சாலையை உடனே திரக்க வேண்டும்.ஏ.எப்.டி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.பாரதி பஞ்சாலையின் டை பிரிவை மூடுவதை கைவிட வேண்டும்.புதுச்சேரி யில் ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கடலூர் சாலை ஏ.எப்.டி பஞ்சாலை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ப.சரவணன் முன்னிலை வகித்தார்.சிஐடியூ மாவட்ட செயலாளர் நிலவழகன்,துணைத்தலைவர் ராஜாங்கம்,விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர்,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.வாலிபர் சங்க நிர்வாகிகள் கதிரவன்,தட்சணாமூர்த்தி,கார்க்கி,சண்முகம்,பாஸ்கர்,அழகப்பன்,உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment