Saturday, June 14, 2014

கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் முக்கியமான மக்கள் புழக்குமிடம் புதுவை புதிய பேருந்து நிலையம் இவ்விடத்தில் முன்பு இயங்கி வந்த இலவச கழிவறை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் கட்டப்படும் என்று கூறி இடிக்கப்பட்டது .

இது வரை கழிவறை கட்டப்படவில்லை வெளியூரில் இருந்து வரும் மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலைமையுள்ளது . 1 பாக்கெட் தண்ணீர் விலை ரூ 2 மட்டுமே , ஆனால் அதை கழிக்க ரூ 3 செலவு வேண்டியுள்ளது என கருதி மக்களில் சிலர் மறைவாக கழிவுகளை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் . இதனால் சுகாதாரமான நிலையில்லா உருவாக்கப்படுகிறது.

எனவே புதுச்சேரி நகராட்சி உடனடியாக முன்பு இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தருமாறு வலியுறுத்தி இன்று காலை 10 அளவில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது . இதில் பொது மக்கள் கையெழுத்து இட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் .

No comments:

Post a Comment