Monday, June 6, 2011

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுக்க புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வெண்டும்


புதுச்சேரி ஜூன் 5
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுக்க புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வெண்டும் என்று வாலிபர்,மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கத்தில் வலியுருத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கல்வி,வேலையை பாதுகாக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திறந்த வேளி கருத்தரங்கம் நடைபெற்றது.அண்ணசாலை,வைசியால் வீதி சந்திப்பில் நடந்த கருத்தரங்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் பிரதேசத்தலைவர் சந்துரு தலைமை தாங்கினார்.மாணவர் சங்க துணைத்தலைவர் ரஞ்சித் வரவேற்புரையாற்றினார்.அணைவருக்கும் பொதுவான கல்வி என்ற தலைப்பில் டிஒய்எப்ஜ மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமோஷ்பாபு ம், இந்தியாவில்ம இன்றைய உயர்கல்வி என்றத்தலைப்பில் எஸ்எப்ஜ தமிழ் மாநில துணைத்தலைவர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.அதேப்போல் புதுச்சேரியில் கனவாகும் வெலை என்ற தலைப்பில் வாலிபர் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வன், பெருகிவரும் வன்முறைக்கலாச்சாரம் என்றத்தலைப்பில் பொருளாளர் பிரபுராஜ் மற்றும் புதுச்சேரியில் கல்வி நிலைகுறித்து ஆனந்து ஆகியோர் பேசினார்கள்.இறுதியாக வாலிபர் சங்க நகரகமிட்டி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
தீர்மாணங்கள்
இக்கருத்தரங்கத்தில் புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல்,மருத்துவ கல்லுhரிகளில் 50சதவீத அரசு இடஒதுக்கீட்டை பெறவேண்டும்.அரசு பள்ளி,கல்லுhரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி அடிப்படை வசதிகளை நிறைவெற்ற வேண்டும்.அரசு அறிவித்த வேலையில்லா காலநிவாரணத்தை வழங்க வெண்டும் எனபன 9அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.கருத்தரங்கத்தில் திரளான மாணவர்,வாலிபர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment