Wednesday, November 16, 2011

மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்


புதுச்சேரி நவ-14
மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஒய்எப்ஜ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே பகுதிகுழு வின் செயலாளர் கே.பி.நௌஷாத்,பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
மாஹே மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு முதலில் ரூ.25கோடி ஒதுக்கப்பட்டது பின்னர் கட்டுமான பணிக்காக கூடுதலாக ரூ.75கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதேப்போல் மாஹே உள்விளையாட்டு அரங்கம் ரூ.19கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டு இதுநாள்வரை பூட்டப்பட்டுள்ளது.அதேப்போல் கேரள விருந்தினர் மாளிகைக்கு ஆற்று மேல் மேம்பாளம் கட்டியதிலும்,மாஹே ஆற்றையொட்டி உள்ள சுற்றுலாதுறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை தனியார் மதுபான கடைக்கு வாடகை விட்டதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. கடந்த மூன்று முறை மாஹே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு காங்கிர° அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொருப்பு வகித்த வல்சராஜ் ,மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல் செய்து அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.எனவே முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது புதுச்சேரி முதல்வர் சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாஹேவில் உள்ள பாப்°கே நிறுவனம் கேரளாவில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் மூலம் விவசாய பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வதை போல் புதுச்சேரியிலும் அத்தகைய நிலையை அரசு கடைபிடிக்க வேண்டும்.மாஹே கல்லுhரிகளில் கேரளா மாணவர்கள் சிறமமின்றி படிக்க முடிந்தது.அதேப்போல் மாஹே மாணவர்களும் கேரளாவில் படித்தார்கள்.தற்போது மாஹேவில் கேரளா மாணவர்கள் படிக்க தடைவிதித்துள்ளதால் உயர் படிப்புக்கு கேரளா சென்று மாஹே மாணவர்கள் படிக்க முடியவில்லை எனவே பழைய முறையை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.மாஹே ஆயுர்வேதா மருத்துவகல்லுhரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி போது மான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
பேட்டியின் போது மாஹே பகுதிகுழு நிர்வாகிகள் ஸ்ரீகாந்த்,வினெய்குமார்,பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ்,சரவணன்,SFI பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment