Wednesday, November 9, 2011

நீதி விசாரணை நடத்த வேண்டும்


புதுச்சேரி நவ-1
பள்ளி பேருந்து கவிழ்ந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த பாகூர் கடுகனூரில் பள்ளி மாணவர்கள் சென்ற ஒரு ரூhபய் கட்டண பேருந்து கவிழ்ந்ததில் மணப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஹேமலதா (12) சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பிள்ளனர்.பாகூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பேரூந்தில் ஏற்றிசெல்வதற்கு ஏழு பேருந்துகள் அவ்வழிதடங்களில் இயக்க வேண்டும்.ஆனால் சம்பவத்தன்று நான்கு பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட்டதால் கரையாம்பத்துhர்,கடுகனுhர்,குருவிநத்தத்தை சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்ததின் விளைவாக பேருந்து கடுகனூரில் வயல்வேளியில் கவிழ்ந்தது.
மருத்துவனையில் ஆருதல்
பேருந்து கவிழ்ந்ததில் காயம் அடைந்த மாணவர்கள் கடலுhர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நடந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரனை நடத்த வேண்டும்.இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை =எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லததை கண்டித்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர செயலாளர் என்.பிரபுராஜ் ஆகியோர் தலைமையில் திரளானோர் சென்று மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.
2 லட்சம் இழப்பீடு
இறந்த மாணவி ஹேமலதா குடும்பத்திற்கு முதல்வர் என்.ரங்கசாமி ரூ.2லட்சம் இழப்பீட்டு தொகை அரசு சார்பில் வழங்கபடும் என்று அறிவித்தார்.அதேப்போல் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயரமும் வழங்கபடும் என்று ம் சாதாரணம் காயங்கள் ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.5ஆயிரமும் வழங்க படும்.விபத்து குறித்த நீதி விசாரணை நடத்த படும்.அதேப்போல் வருங்களத்தில் விபத்து நடக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment