Thursday, February 9, 2012

ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி மாகேவில் நடைபெற்றது



புதுச்சேரி,பிப்-4
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார்பில் ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி மாகேவில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி பொதுக்கூட்டம் மாகே முனிசி;பலிட்டி மைதானத்தில் நடைபெற்றது.இப்பொதுகூட்டத்திற்கு டிஒய்எப்ஐ மாகே செயலாளர் நவுசாத் தலைமை தாங்கினார்.தலைச்சேரி செயலாளர் விகேஷ் முன்னிலை வகித்தார்.முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.குஞ்சுராம்,வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்,துணைத்தலைவர் சரவணன்,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக தலைச்சேரி பகுதியில் இருந்து மாகே வரை 500க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

No comments:

Post a Comment