Sunday, February 12, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்ககோரி


புதுச்சேரி,பிப்-12
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

டீசம்பர் 30 ஆம்தேதி புதுச்சேரியை தாக்கிய தானே புயலால் மக்கள் தங்களது குடிசை வீடுகளையும்,ஓட்டு வீடுகளையும் இழந்தனர். விவசாயிகள் மீனவர்கள் தங்களது நிலங்களையும்,படகுகளையும் இழந்தனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்கமால் காலங்கடத்தி வருவதை கண்டித்தும்.மாநில அரசு கோரிய நிவாரணத்தொகை 2500கோடியை மத்திய அரசு உடனே வழங்ககோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி; அரியாங்குப்பத்தில் நடந்த ஆர்ப்;பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகரகமிட்டி செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.சிபிஎம் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்,டிஒய்எப்ஜ பிரதேச துணைத்தலைவர் சரவணன்,உழவர்கரை செயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,முன்னால் நிர்வாகி துரைமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment