Monday, December 31, 2012

வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடணடியாக மருத்துசிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்

புதுச்சேரி,டிச-31
 பெண்கள் குறித்து பேசிய கருத்தை மதுரை ஆதினம் உடணடியாக திரும்பபெற வேண்டும் என்று மாதர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாகவே தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவகல்லுhரி பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இன்றைக்கு இறந்துள்ளார்.இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இன்றைக்கு இருக்கும் தண்டனை சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.எனவே மத்திய அரசு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை உடனுக்குடன் குற்றவாலிக்கு அதிக பட்சமாக தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும் மேலும் குற்றவாலிக்கு தண்டனை உடனே வழங்குவதற்கு உண்டான பெண்கள்குழுவையும் அமைக்க வேண்டும் என்று இன்றைக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
மதுரை ஆதினம்
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதினம் பெண்கள் ஆடை அணிவது குறித்து கூறிய கருத்தை உடணடியாக திரும்ப பெறவேண்டும்.பெண்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.தங்களுக்கான ஜனநாயக பூர்வமான முடிவுகளை எடுக்கும் உரிi பெண்களுக்கு உள்ளது.ஒரு சில சாதிய அமைப்புகளின் தலைவர்கள் என்று தங்களை கூறிகொள்ளும்  ராமதா° போன்றவர்கள் பெண்கள் குறித்து பேசும் கருத்து சரியில்லை.
புதுச்சேரி வினோதினிக்கு
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காரைக்காலை சேர்ந்த இளம் பெண் வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடணடியாக மருத்துசிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்.இதில் சம்பந்தபட்டுள்ள குற்றவாலிக்கு அதிகபட்ச தண்டணை வழங்க காவல்துறை செயல்படவேண்டும் என்றார்.மேலும் எங்கள் அமைப்பும்,டிஒய்எப்ஐ,எ°எப்ஐ உள்ளிட்ட மாணவர்,வாலிபர் அமைப்புகளுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனவரி 1 செவ்வாய்கிழமை  பொதுமக்களிடம் உண்டியல் மூலம் நிதி வசூலித்து கொடுக்க உள்ளோம்.புதுச்சேரியில் சமீபகாலமாக செயல்படாமல் உள்ள மகளிர் ஆணையத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாணவர்,வாலிபர்,மாதர் சங்கங்களின் பிரதேச நிர்வாகிகள் சுமதி,தெய்வானை,தமிழ்ச்செல்வன்,ப.சரவணன்.ஆர்.சரவணன்,
ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




புதுச்சேரி,டிச-25

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


டில்லியில ஓடும் பேரூந்தில்  பெண்ணை  பாலியல்பலாத்காரம் செய்த குற்றவாலிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்.காரைக்காலை சேர்ந்த இன்ஜினீயர் வினோதினி மீது ஆசிட் வீசிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும்,துhத்துகுடி மாவட்டத்தில் 7 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும்  இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ப.சரவணன்,உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக்குழு கண்வீனர் சுமதி,சமம் பெண்கள் சுயசார்பு இயக்க நிர்வாகிகள் பரிமலா,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் மாதர்,வாலிபர்,மாணவர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் bஐயலக்ஸ்மி,மலர்விழி,விஜயலச்சுமி,பிரபுராஜ்,ஆர்.சரவணன்,கதிரவன்,பா°கர் உள்ளிட்ட திரளனோர் இப்போராட்டத்தில் பங்கேற்று பெண்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி முழக்கமிட்டனர்

No comments:

Post a Comment