Sunday, December 9, 2012

வாலிபர்சங்க நடைபயணம்: புதுச்சேரியில் சிஐடியு, மாணவர்கள் எழுச்சிமிகு வரவேற்பு



புதுச்சேரி, டிச. 8-
வாலிபர் சங்க நடை பயண குழுவுக்கு புதுச்சேரி நகரத்தில் சிஐடியு சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.வேலைவாய்ப்பு, சுகா தாரம்,சுற்றுச்சூழல் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி யில் நடத்திவரும் நடைபய ணம் இண்டாவது நாளாக கருவடிக்குப்பம் பாரதியார் குயில் தோப்பில் இருந்து துவங்கியது. சித்தானந்தா கோவிலில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு சங் கத்தின் தமிழ்மாநில பொரு ளாளர் எஸ். பாலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் வெண்கொடியை அசைத்து நடைபணத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச் சியில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன், உழவர்கரைநகர செயலாளர் லெனின்துரை, நடராஜன், டிஒய்எப்ஐ பிரதேச நிர்வாகி கள் சந்துரு, ப.சரவணன், இரா.சரவணன், பாஸ்கர், ஆழகப்பன்,கதிரவன் உள் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சாமிப்பிள்ளை தோட்டம், முத்தையாள்பேட்டை, டி.பி தோட்டம் உள்ளிட்ட இடங்களை கடந்து பயணக் குழு புதுச்சேரி நகரத்தை அடைந்தது.சிஐடியு சார்பில் வரவேற்புபுதுச்சேரி காமராஜர் சிலை அருகில் நடைபயண குழுவை சிஐடியு சார்பில் வரவேற்றனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. முருகன் தலைமையில் அதன் நிர்வாகிகள் அளித்த எழுச்சி மிகு வரவேற்பில் ஏராள மானோர் கலந்துகொண்ட னர். முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக் குப்பம், கரிகலாம்பாக்கம் ஆகிய கிராமப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த நடைபயண பிரச்சாரம் பின் னர் பாகூரில் பொதுக் கூட்டத்தோடு நிறை வடைந்தது. எஸ்எப்ஐஇந்திய மாணவர் சங்க பிரதேசக்குழு சார்பில் புதுச்சேரி கல்வித்துறை எதி ரில் நடைபயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதேச செயலா ளர் ஆனந்து, துணைத் தலைவர் ரஞ்சித், நிர்வாகிகள் இன்னரசன், ரஞ்சித், பவித்திரன் உள் ளிட்ட திரளான மாணவர் கள் பயணக் குழுவை வர வேற்றனர்.







புதுச்சேரி,டிச-9
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நடைபயணக்குழுவை மேளதாளத்துடன் வரவேற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டில் இருந்து சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.பாலா தலைமையில் துவங்கிய நடைபயணக்குழு சனிக்கிழமை இரவு பாகூர் வந்தடைந்தது.டிஒய்எப்ஜ பாகூர் கொம்யூன்குழு சார்பில் மேற்குவீதியில் பயணக்குழுவை வரவேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.கொம்யூன் குழு தலைவர் அரிதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பயணக்குழு தலைவர் பாலா, தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,மாநில இணைச்செயலாளர் குணசுந்தரி,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி,தனிகா (எ)காத்தவராயன்,வெங்கடேசன் விவசாய சங்க பிரதேச தலைவர்கள் பத்மநாபன்,ராமசாமி,கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கலியன்,சாம்பசிவம், உள்ளிட்ட திராளானோர் பாங்கேற்று வாலிபர்கள் நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு அளித்தனர்.
கரிகலாம்பாக்கம்
கரிகலாம்பக்கம் நான்கு முனைசந்திப்பில் மேளதாளத்துடன் நடைபெற்ற வரவேற்பு நிகழ்சிக்கு வில்லியனுhர் கொம்யூன் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.செயலாளர் கதிரவன்,கிளை நிர்வாகிகள் அரிதா°,தேவ்ஆனந்து,விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகையன்,ரத்தினவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு வாலிபர்கள் நடைபயணக்குழு வரவேற்றனர்.

No comments:

Post a Comment