Wednesday, January 23, 2013

தேசிய ஜூனியர் வளுதுhக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழி அனுப்பும் விழா

புதுச்சேரி,ஜன-22
தேசிய ஜூனியர் வளுதுhக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழி
அனுப்பும் விழா புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில வளு துhக்கும் சங்கத்தின் வீரர்கள் பங்கேற்கும் தேசிய
ஜூனியர் வளுதுhக்கும் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில்
அமராவதி நகரில் ஜனவரி 25 முதல் 30 வரை நடைபெறுகிறது.அனைத்து
மாநிலங்களிலிருந்தும் வளு துhக்கும் வீரர்கள் இப்போட்டியில்
பங்கேற்கின்றனர்.சர்வதேச போட்டியில் தங்கபதக்கம் வென்ற வீரங்கனைகள்
டி.சுகந்தி,சூர்ய பிரபா,தேசிய பதக்கம் பெற்ற என்.முருகவல்லி,தேசிய போட்டி
பதக்கவீரர் எஸ்.லிங்கேசன் வேலு( எ)மது உள்ளிட்ட புதுச்சேரியில் இருந்து
27பேர் கொண்ட அணியினர்  இப்போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
வழி அனுப்பு விழா
இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழி அனுப்பும் விழா புதுச்சேரி
ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச
பொருளாளர் ஆர்.சரவணன்,முன்னால் விளையாட்டுத்துறை துணை இயக்குனர்
ஜி.குணசேகரன் ஆகியோர் வீரர்களை பாராட்டி  வழி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment