Tuesday, May 13, 2014

பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் டி.கிருத்திகா

பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அளவில் நடைபாதை வியாபாரியின் மகள் டி.கிருத்திகா 1200க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

இதன் மூலம் அவர் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி டி.கிருத்திகா பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-185, ஆங்கிலம்-185, இயற்பியல்-194, வேதியியல்-193, கணிதம்-196, உயிரியல்-189.

இதுகுறித்து கிருத்திகா கூறியது:

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். எனக்கு மருத்துவராக ஆசை. எனவே, எங்களைப் போல ஏழை மாணவர்கள் அதிக பணம் கொடுத்து தனியார் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடியாது. எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் எனது ஆசை நிறைவேறும் என்றார். இம் மாணவியின் தந்தை தங்கவேல் பெரிய மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரம் செய்து வருகிறார்.

தனது மகளின் மேல்படிப்பு குறித்து இவர் கூறுகையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் நான் சேர்த்து படிக்கத் தயாராக உள்ளேன். முதல்வரும், மாநில அரசும் எனக்கு தேவையான நிதியுதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

வாலிபர் சங்கம் பாராட்டு

மாணவி டி.கிருத்திகாவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேசத் தலைவர் ஆர்.சரவணன், நிர்வாகிகள் பாஸ்கர், விஜய், அழகப்பன், நாகமுத்து, மாதர் சங்க நிர்வாகி சத்யா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்

No comments:

Post a Comment