Wednesday, May 21, 2014

நரிக்குறவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி ஐஜி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நரிக்குறவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை  கோரி ஐஜி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.


புதுச்சேரி கடற்கரை சாலையில் நரிக்குறவர்கள் கூட்டம், கூட்டமாக தங்கி பலூன்,  காற்றடித்த பொம்மைகள் போன்றவற்றை விற்று வருகின்றனர். இந்நிலையில் இரவு  கடற்கரை சாலையில் ரோந்து வந்த போலீசார் நரிக்குறவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு  இடையூறாக உள்ளதாக வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அவர்கள்  வைத்திருந்த  
பலூன், பிளாஸ்டிக் பொம்மைகளில் ஊசி மூலம் குத்தி ஓட்டையாக்கி வீணாக்கினர்.  

கடற்கரை சாலையில் இருந்துகிளம்பிச்செல்லாவிட்டால் நாள்தோறும் இந்த  நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு செய்த போலீசார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க   வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  பிரதேசதலைவர்  சரவணன், நரிக்குறவர் நலவாழ்வு சங்க தலைவர் சாரங்கபாணி, நிர்வாகிகள் சங்கர்,  முரளி, சக்கரபாணி, வள்ளி, கார்த்திகா ஆகியோர் ஐஜி அலுவலகத்தை முற்றுகையி ட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நரிகுறவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வீணாகிய பொருட்களை  நரிக்குறவர்கள் ஐஜி அலுவலகம் முன்பு கொட்டி கோஷம் எழுப்பினர். 


இதுகுறித்து  கேள்விபட்ட  சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங் அங்கு வந்து  அவர்களை சமாதானப்படுத்தினார்.  அப்போது தேசியளவில் நடைபாதை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என  சட்டம் உள்ளது. ஆனால் போலீசாரே இந்த  செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சீனியர் எஸ்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப் பீடுவழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து நரிக்குறவர்கள் அங்கிருந்து  கலைந்துசென்றனர். இதனால்  புதுச்சேரி
 
ஐஜிஅலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு

No comments:

Post a Comment