Sunday, August 3, 2014

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகை

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.740 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, சட்டக் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

No comments:

Post a Comment