Tuesday, September 7, 2010

கண்டன ஆர்பாட்டம்

புதுச்சேரி செப் 2
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவரை தாக்கிய அரியாங்குப்பம் =காவல் நிலைய =காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க கிளை தலைவர் ராஜசேகரை அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் தலைமையிலான காவலர்கள் தாக்கியுள்ளனர். தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியு=றுத்தி அரியாங்குப்பம் நுழைவு வாயில் முன்பு இப்போரட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்திர்க்கு வாலிபர் சங்க நகரகமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,நகரகமிட்டி செயலாளர் கதிரவன்,சிபிஎம் நகரகமிட்டி உறுப்பினர் சிவசோலை,கிளை செயலாளர் =துரைமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.படம் உள்ளது

No comments:

Post a Comment