Friday, December 2, 2011

பெண்ணை பாலியல் தொழிலுக்கு பயண்படுத்திய கஸ்ட் ஹவுசை முற்றுகை


புதுச்சேரி நவ-27
புதுச்சேரியில் பெண்ணை பாலியல் தொழிலுக்கு பயண்படுத்திய கஸ்ட் ஹவுசை முற்றுகையிட்ட பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த கனேசன் மகள் அமுதா (வயது-19 பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற இளம் பெண்ணை புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி க°ட்ஹவுஸில் வலுகட்டயமாக அடைத்து வைத்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற போது அப்பெண் ஜன்னல் வழியாக கூச்சலிட்டதால் அருகில் உள்ள பெரியகடை காவல்நிலையத்தில் புகார் கூறியதின் பேரில் போலீஸார் சம்பவஇடத்திற்கு நேரில் வந்து விசாரித்தனர்.அப்போது கஸ்ட் ஹவுஸ் மேலாளர் மதன் உட்பட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4பேர்களை போலீஸார் கைது செய்தனர்.எனவே பாலியல் தொழிலுக்கு பயண்படுத்தப்பட்ட ஜி க°ட் ஹவுஸை உடணடியாக +மூடி சீல் வைக்க வேண்டும்.பாரபட்சமில்லாமல் க°ட் ஹவுசின் உரிமையாளரை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி முழுவதும் உள்ள தனியார் க°ட் ஹவு°களை கன்கானிக்கவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர்,வாலிபர்,மாணவர் சங்கநிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கஸ்ட்ஹவுஸின் கதவுகளை அடைத்துகொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைதலைவர் ஜெயலட்சுமி,நிர்வாகிகள் சரோஜினி,மகாலட்சுமி,வாலிபர் சங்க பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,நகரதலைவர் சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,உழவர்கரை நகரசெயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க பிரதேச துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட 14 பெண்கள் உட்பட 35பேர்களை போலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

No comments:

Post a Comment