Saturday, May 19, 2012

புதுச்சேரி,மே-13
அரசு காலிபணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணி நியமணம் செய்வதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று டிஒய்எப்ஐ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்த்தின் புதுச்சேரி பிரதேச சிறப்பு பேரவை கூட்டம் லா°பேட்டை ஜவஹர் பவனில் நடைபெற்றது.இப்பேரவைக்கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதேச தலைவர் கே.சந்துரு தலைமை தாங்கினார்.பேரவைகூட்டத்தை டிஒய்எப்ஐ தமிழ் மாநில இணைசெயலாளர் எ°.லெனின் துவக்கிவைத்து பேசினார்.டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்செல்வன்,பொருளாளர் பிரபுராஜ்,உழவர்கரை கமிட்டி தலைவர் பா°கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட திரளான வாலிபர்கள் பங்கேற்ற பேரவை கூட்டத்தில்  சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் முடித்து வைத்து பேசினார். புதிய நிர்வாகிகள் இப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி  பிரதேச   தலைவராக கே.சந்துரு,செயலாளராக பா.சரவணன்,பொருளாளராக இரா.சரவணன்,உள்ளிட்ட 23பேர் கோண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் இப்பேரவையில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள் வருமாறு,தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்திட தமிழகத்தை போல் கல்வி நிர்ணய குழுவை புதுச்சேரியில் அமைக்க வேண்டும்.புதுச்சேரி அரசுதுறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தமுறையில் நிரப்புவதை கைவிட்டு, நிரந்த ஊழியர்களாக  நிரப்ப  வேண்டும்.அரசு அறிவித்த வேலையில்லா கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment