Wednesday, May 9, 2012

புதுச்சேரி,மே-8
தோழர்.விபி சிந்தன் நினைவுதினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் இலவச மோர் பந்தல் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.
புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதி,காந்திவீதி சந்திப்பில் நடந்த இந்நிகழ்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார்.நகரகமிட்டி பொருளாளர் விஜிய் முன்னிலை வகித்தார்.இலவச மோர் பந்தலை டிஒய்எப்ஐ பிரதேச துணை தலைவர் சரவணன் துவக்கிவைத்தார்.பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,சிஐடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம்,வாலிபர் சங்க நிர்வாகிகள் அன்துவான் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment