Saturday, May 19, 2012

புதுச்சேரி,மே-15
தகுதி தேர்வுக்கான தேர்வு ரத்து செய்து வெளிப்படை தன்மையுடன் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.இதற்கு மாறாக புதுச்சேரி அரசு தமிழகத்தை போல தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்பதற்காக திடீர் என்று தமிழக அரசிடம் அனுமதி பெற்று குறுகிய காலஅவகாசம் உள்ள நிலையில் இத்தேர்வு எழுத வேண்டும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அறிவிப்பு வெளியிட்ட தினத்தில இருந்து நான்கு நாட்களுக்குள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவேண்டும் என்பது பல்வேறு குழப்பங்பகளை ஏற்படுத்தும்.
மேலும் ஜுன்-3 ஆம் தேதி  தேர்வு நடைபெறுவது  குறுகிய இடைவேளியில் இத்தேர்வு நடத்துவது படித்த இளைஞர்கiள் ஏமாற்றகூடியது.
இரண்டான்டு பட்டய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பணிக்காக காத்து இருக்கும் ஆசிரியர்களுக்கு மறுபடியும் ஓர் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவைதானா?அப்படியே அரசின் போக்கு சரி என்று கூறினாலும் ஏன் புதுச்சேரி அரசு தனி ஒரு தேர்வணையம் ஏற்படுத்தகூடாது? எனவே நடைபெற உள்ள தகுதி தேர்வினை ரத்து செய்து வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்திகிறது.இவ்வாறு பிரதேச செயலாளர் ப.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment