Thursday, September 27, 2012

வாழ்நாள் முமுவதும் மறக்கமாட்டோம் என்று வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்த மக்கள்

புதுச்சேரி,செப்-27
புதுச்சேரி சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் தொகுதியில் பலமாதங்களாக மின் இனைப்பு இல்லாத அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த 38 குடும்பங்களுக்கு  மாதர்,வாலிபர் சங்கங்களின் முன்முயற்சியால் மின்சாரம் வழங்கப்பட்டது. புதுச்சேரி காமராஜர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகர் உள்ளது.இந்நகரில்  மொட்டை தோப்பு என்ற பகுதியில் பால மாதங்களாக குடியிருந்த 38 குடும்பங்களுக்கு  குடிசை மாற்று வாரியத்தால்  அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது.சுமார் 1கோடிக்கு மேற்பட்ட தொகையில்  கட்டப்பட்ட குடியிருப்புகள் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு  முன்பு  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்படி ஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இனைப்பு மட்டும் கொடுக்கப்பட வில்லை.நகரத்தை யொட்டி உள்ள இந்த குடியிருப்பில் மட்டும் மின் இனைப்பு இல்லாமல் கடந்த 18 மாதங்களாக  இருட்டிலே யே 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகவலை  அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுவை பிரதேச துணைதலைவர் வி.சுமதி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் சரவணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஏன் மின் இணைப்பு பெறுவதற்கான  முயற்ச்சிகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.மேலும்  மின்துறை அதிகாரிகளை சந்தித்து  கேள்வி எழுப்பிய சங்க நிர்வாகிகளிடம் குடிசை மாற்று வாரியம் மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்தி 460 மட்டும் செலுத்த வில்லை.அதானலே மின் இனைப்பு வழங்கபடவில்லை என்று கூறினார்.பின்னர் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகளை சந்தித்து கேள்வி எழுப்பிய டிஒய்எப்ஐ தலைவர்கள்  ஒரி இரு நாட்களில் அத்தொகையை மின்சாரத்துறைக்கு செலுத்தவில்iல் என்றால் பொதுமக்களிடம் வாலிபர் சங்கம் உண்டியல் மூலம் வசூலித்து அத்தொகையை செலுத்தும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டம்
குடிசை மாற்று வாரியம்,மின்துறை அலட்சியத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்ககோரி மாதர் சங்கம்,வாலிபர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 3 ஆம்தேதி  புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள மின்துறையின் இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் இணைப்பு வழங்கப்பட்டது
குடிசை மாற்று வாரியம் உடனே மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்து 460 யை செலுத்திய உடனே மின்துறை ஒரு வாரத்திற்குள் குடியிருப்புகளுக்கு மின்சார  இணைப்பு வழங்கியது.
தலைவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்த குடியிருப்பு மக்கள்
மின் இணைப்பு பெற்ற குடியிருப்பு மக்கள் சார்பில்  வாலிபர்,மாதர் சங்க தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்  சுதந்திர பொன்விழா நகரில் நடைபெற்றது. சிஜடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம்,மாதர் ,வாலிபர் சங்க தலைவர்கள் சுமதி, சரவணன், பிரபுராஜ், விஜிய், அழப்பன், தமிழ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீண்ட காலமாக அக்குடியிருப்பில் வசித்து வரும்   கலா  கூறுகையில்,கடந்த ஒன்றறை வருடங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பில் வசித்து வருகிறோம். தினந்தோரும் இரவு நேரங்களில் இருட்டிலேயே கொசுக்கடியிலேயே , பிள்ளைகளோடு வாழ்ந்து வந்துள்ளோம்.தேர்ந்தேடுக்க படுவதற்கு முன்பு உடனே மின்சாரம் பெற்று கொடுப்பேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த முன்னால் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான வெ.வைத்தியலிங்கம் தேர்வான பிறகு  இந்த பக்கமே ஆலே கானோம்.மக்கள் பிரதிநிதிகளே எங்களை பற்றி கவலை படவில்லை.நாங்களும் மின்சாரத்துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீங்கள் எங்களுக்காக போராடி மின் இணைப்பு பெற்று தந்துள்ளிர்கள்.போராட்டம் நடத்த எங்களுக்கு அழைப்பு கோடுத்தபோது நாங்களும்  உங்களை உதாசீன படுத்தினோம். அப்போராட்டத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது மண வருத்தத்தை அளிக்கிறது.அதையும் மீறி எங்களது வாழ்க்கையில் ஒளி அமைத்து கொடுத்ததை தங்களது வாழ்நாள் முமுவதும் மறக்கமாட்டோம் என்று  வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment