Wednesday, September 12, 2012

DYFI 9th ALL INDIA CONFERENCE , Bangalore

வாலிபர் சங்க மாநாடு துவங்கியது பெங்களூருவில் இளைய இந்தியா குழுமியது


பெங்களூரு (கேப்டன் லட்சுமி செகால் நகர்),செப்.11-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் 9வது அகில இந்திய மாநாடு பெங் களூருவில் செவ்வாயன்று மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. மெஜஸ்ட்ரிக் ரயில் நிலையம் அருகிலிருந்து பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட வண்ணமிகு பேரணி அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டில் ஏற்ற வேண் டிய கொடி கூத்துப்பரம்பு தியாகிகள் நினைவாக கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. சிவப்பு நட்சத்திரம் பொறித்த இந்த வெண்கொடியை சிறுவர்கள் ஏந்தி வர அதன் பின்னால் சங்கத்தின் தேசிய தலைவர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளும், தொடர்ந்து நீல நிற சீருடை அணிந்த மாநாட்டு பிரதிநிதிகள், அடுத்ததாக வெள்ளை சீருடையுடன் ஆயிரம் ஆயிரமாய் இளைஞர்களும் அணி வகுத்து வந்தனர். பல்வேறு மாநி லத்தவரும் அவரவர்களது பாரம் பரிய அடையாளங்களை வெளிப் படுத்தும் கலைநிகழ்ச்சிகளுடன் அணிவகுத் தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
பேரணியைத் தொடர்ந்து நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கர்நாடக மாநி லத்தை சேர்ந்த பிரபல விடுதலைப் போராட்ட வீரர் எச்.எஸ்.தொரே சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஸ்ரீராமரெட்டி, கர்நாடக விவசா யிகள் சங்க தலைவர் ஜி.சி.பையா ரெட்டி, வாலிபர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, முன்னாள் செயலாளர் எம்.ஏ.பேபி, கர்நாடக மாநில தலைவர் என்.எல். பரத்ராஜ், செயலா ளர் பி.ராஜசேகர மூர்த்தி, துணை தலைவர் எஸ்.கண் ணன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.கூட்டத்தில் யெச்சூரி பேசும்போது, நாட் டின் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ள இளைஞர்கள் வளமான இந் தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.40 வயதுக்கு உட்பட்ட இளைஞர் கள் இந்திய நாட்டின் மக்கள் தொகை யில் மூன்றில் இரண்டு பகுதியினராக உள்ளனர். இவர்கள்தான் நமது நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என் பதை தீர்மானிக்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.உலகம் முழுவதும் இப்போது முதலாளித்துவத்துக்கு மாற்று பாதை குறித்த சிந்தனை மேலொங் கியுள்ளது. மதத்தின் பேரால் மக்களை துண்டாட அனுமதிக்காமல் இந்தியாவின் வளத் தை பாதுகாத்து ஒளிமய மான பாரதத் தை உருவாக்க இளை ஞர் சக்தி எழுச்சி பெற்று வர வேண்டும். சோச லிசம் ஒன்றே மாற்று என்பதை நிலை நாட்ட வேண்டும் என்று யெச்சூரி பேசினார். இக்கூட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி. ஸ்ரீராம கிருஷ்ணன் தலைமை வகித்தார்.பிரதிநிதிகள் மாநாடு பிற்பகலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 15ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment