Monday, January 6, 2014

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுவையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுவையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மக்கள் விறகுகளை பயன்படுத்தி சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக விறகுகளை மூட்டி மண்சட்டியில் சமையல் செய்யும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரச் செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கச் செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment