Friday, January 17, 2014

இலாஸ்பேட்டை பொங்கள் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

இந்திய மாணவர் சங்கமும்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
இலாஸ்பேட்டை அசோக்நகரில் ற  நான்காம் ஆண்டு பொங்கள் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் மாவட்ட நீதிபதி மேரி அன்செலம் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், அப்பகுதி பெண்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை ,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,வாலிபர் சங்கத்தின் பிரதேச  தலைவர் இரா.சரவணன்,துணைத்தலைவர் பாஸ்கர், பொருளாளர் கதிரவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் அப்பகுதியை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment