Thursday, January 29, 2015

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி,ஜன.27-

பெங்கல் மற்றும் குடியரசு தினவிளையாட்டு போட்டி பரிசலிப்பு விழா அசோக்நகரில் நடைபெற்றது.

இலாஸ்பேட் அசோக்நகரில் நான்காம் ஆண்டு நடைபெற்ற இவ்விழாவிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார்.குழந்தைகள் நலபாதுகாப்புகுழு தலைவர் டாக்டர் வித்யாராம்குமார்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன், முன்னால் செயலாளர் லெனின்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இவ்விழாவில் இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து , கிளை நிர்வாகிகள் வெங்கடேஷ்,  விக்னேஷ், நிர்மல், நிஷாந்த் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக திண்டுக்கல் ஜீவா கலைக்குழுவின் தேவர் நடன கிராமிய நிகழ்ச்சியும் ,சிறுவர் சிறுமியர்கள் நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது.

சாமிப்பிள்ளைத்தோட்டம்

சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் நடைபெற்ற குடியரசுதின விளையாட்டு பரிசலிப்பு நிகழ்ச்சிக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை நகர தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன், முன்னால் செயலாளர் லெனின்துரை, சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் நடராஜன், மாதர் சங்க செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

No comments:

Post a Comment