Thursday, January 1, 2015

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 130க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

புதுச்சேரி,டிச.17

பாகிஸ்தானில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 130க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே புதனன்று மாலை நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து த லைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆசிரியர் சந்திரா,செயலாளர் சத்தியா,ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,எல்ஐசி முகவர் சங்கம்,இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திரளானோர் பங்கேற்று மெழுகு வத்தி ஏந்தி உயிரிழந்த மாணவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment