Tuesday, December 13, 2011

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் புதிய கிளை திறப்பு



புதுச்சேரி,டிச-12
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா.
புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.இப்பெயர்பலகை திறப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் கிளை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார்.இவ்விழாவில் டிஒய்எப்ஜ பிரதேச இணைசெயலாளர் எஸ்.சரவணன் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர் பலகையை பிரதேச செயலாளர் டி.தமிழ்செல்வன் திறந்து வைத்து பேசினார்.பிரதேச தலைவர் கே.சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,நகர தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,பாகூர் கொம்யூன் செயலாளர் அரிதாஸ்,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கிளை செயலாளர் பிரவீன்வேலியப்பன்,மோகன்ராஜ்,நகுலன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மற்றும் சண்முகாநகர் மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,டிச-12
மாணவர் சிறப்புபேருந்து இயக்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் புதுவை முழுவதும் இயக்கப்பட்டுவருகிறது. கரிகலாம்பாக்கம் பகுதியில் இயக்கப்பட்ட பேருந்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் இயக்கபடாததால் கிராமப்புற மாணவர்கள் தணியார் பேரூந்தில் அதிய கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே சிறப்பு பேருந்து இயக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்ளின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடந்த இப்போராட்டத்திதல் எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து ,வாலிபர் சங்க நிர்வாகிகள் அரிதா°,சண்முகம்,பத்மநாபன்,விவிசாய சங்க நிர்வாகி ரத்தினவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேச்சுவர்த்தை
போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகியிடம் அமைச்சர் ராஜவேலு செல்பேசியில் தொடர்பு கொண்டு பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment