Tuesday, March 13, 2012

புதுச்சேரி நகரபகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது

புதுச்சேரி,மார்ச்-12
புதுச்சேரி நகரபகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகர கமிட்டி மாநாடு முதலியார் பேட்டையில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கமிட்டியின் தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.மாநாட்டை துவக்கிவைத்து பிரதேச தலைவர் சந்துரு பேசினார்.வேலை அறிக்கையை சங்கத்தின் செயலாளர் பார்த்தசாரதி தாக்கல் செய்தார்.சங்கத்தின் பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,சிஐடியு நிர்வாகிகள் மது,மதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.டிஒய்எப்ஐ பிரதேச செயளாலர் தமிழ்ச்செல்வன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி தலைவராக அழகப்பன்,செயலாளராக பார்த்த சாரதி,பொருளாளராக விஜிய் உள்ளிட்ட 11பேர் கொண்ட நகரகமிட்டி தேர்வு செய்யப்பட்டது.மாநாட்டில் நகரபகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த வேண்டும்.முத்தியாள்பேட்டை கசாப்புகாரன் தோப்பில் வசித்த மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வேண்டும்.அரியாங்குப்பம் சண்முக நகரில் கழிவுநீர் வாய்க்காள்,சாலைவசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநட்டில் வலியுறுத்தப்பட்டது

No comments:

Post a Comment