Tuesday, March 27, 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை


புதுச்சேரி,மார்ச்-26

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை புதுச்சேரியில் நடைபெற்றது.
வாலிபர்,மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி வினோபா நகர் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை (மார்ச்-25) நடந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். காலை 9மணிக்கு துவங்கிய இப் பயிற்ச்சி பட்டறையில் தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வின் போது எளிய முறையில் மதிப்பென்கள் பெறுவதற்கு ஆசிரியர்கள் பயிற்ச்சி நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,துணை தலைவர் சரவணன்,கிளை தலைவர் அந்துவான்,செயலாளர் லாமார்க்,எ°.எப்.ஐ பிரதேச செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment